About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/10/26

என் ஆருயிர் கண்மணி கார்த்தி ஆரம்பித்தது இந்த வலை (blog  )
அவனின் பிரிவிற்கு பின் அவனை யாரும் மறந்து விடக்  கூடாதே என்ற தவிப்பில் அவன் அம்மா நான், கலா கார்த்திக் அதை தொடர்கிறேன்.
என் தெய்வத்தைப் பற்றியே அதிகம் எழுத மனம் ஆசைப் படும்.
"""""""""ஒரே புலம்பல் """"""""""""
என்ற முத்திரை குத்தப் பட்டதால் வேறு சில செய்திகளை பற்றி எழுதினாலும்
கார்த்தியைப் பற்றி எழுதினால்தான் நிம்மதி கிடைக்கிறது.
கார்த்தி மகனுக்கு வரலாறு என்றால் அதிக ஈடுபாடு.
வரலாறு.காம்  ஆரம்பித்தான் 2001ல்.
அப்புறம் வேலை சுமை 
குடும்ப சுமை 
18 வயதில் அம்மாவின் டிரான்ஸபர் 
தம்பியின் படிப்பு 
தந்தையின் மருத்துவ செலவிற்கு ஏற்பட்ட கடன் 
என அவன் சிறிய தோளில் எத்தனை பெரிய சுமைகள்.
ஒரு சிறு முக சுழிப்பு இருக்காதே.
கணவர் இழப்பால் சோர்ந்து போகும் என்னை தேற்ற அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.
இத்தனைக்கும் நடுவில் தான் அவன் blog , வரலாறு .காம் 
என அத்தனையும் செய்தான்.
தன்னை சுற்றியிருந்த அத்தனை பேரின் தேவைகளையும் பூர்த்தி செய்தான்.
தோளின் சுமையே அவனை அழுத்தியதால்தானோ என்னவோ 
தாங்க முடியாமல் மகன் முடிந்து விட்டான்.
கார்த்தி போல் மகன் கிடைக்க
ஒரு 1000 ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் 
அதே 1000 ஜென்மங்கள் பாவம் செய்திருக்க வேண்டும் 
அவனை 23 வயதில் பறிகொடுக்க ..
பாவி நான்.
சோகம் வற்றா நதியாகி விட்டது.
கண்ணீர் வற்றா கண்கள் .
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  

2017/10/24

கந்து வட்டி :
கந்து வட்டி வாங்கி கடன் கட்ட முடியாமல் ஒரு குடும்பத்தில் நால்வர் தீ  வைத்து கொண்டு இறந்த சம்பவம் எல்லோராலும் பேசப் படுகிறது.
......  
மனசாட்சியே  இல்லையா ?
மனிதாபிமானமே  இல்லையா
என்று என்னை யாரும் திட்டாதீர்கள் .
என் அனுபவத்தில் சொல்கிறேன்.
என் கணவர் சிவில் பொறியாளர்.
பலரும் வீடு கட்டித் தர கேட்பர் .
நான் சொல்வேன் .
கடன் வாங்கி வீடு கட்டும் முன் நன்கு யோசியுங்கள்.
வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டி தற்கொலை வரை போனவர்கள் பலரை நான் பார்த்தேன்.
ஒரு 10000 ரூபாய்க்கு 500 மாத வட்டி.
அப்படியென்றால் 20 லட்சத்திற்கு எவ்வளவு வட்டி என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள்.
கடன் கொடுப்பவர்களை ஏன் தவறு சொல்ல வேண்டும்?
இவ்வளவு வட்டி என்று அவர்களிடம் சம்மதித்துதானே  பணம் வாங்குகிறோம்.
.....
இப்போது தற்கொலை செய்து கொண்ட குடும்பம் ''  '' காது குத்து விழா '' விற்கு 60000   (  ''அறுபதாயிரம் '' )  கடன் வாங்கி உள்ளனர்.
ஒரு ஏழை குடும்பம்.
அப்போது 60000 அதிகம் இல்லையா ?
இது அளவிற்கு மீறிய ஆடம்பரம் இல்லையா?
அதற்கப்புறம் வீடு கட்ட தனி கடன்.
வங்கிக்கு சென்றால் நம்மிடம் அவர்கள் கொடுக்கும் கடனுக்கு உரிய சொத்து உத்திரவாதம் அல்லது ஒரு பிணையாளர் இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள்.
இந்த குடும்பம் அப்படி சொத்து அல்லது திருப்பி கட்டும் வசதி இருந்திருந்தால் வங்கிக்கே சென்று கடன் வாங்கியிருப்பார்கள்.
வங்கி வட்டியும் ஆளை முழுங்கும்.
அப்படியிருக்க தனி நபரிடம் வாங்கும் கடன் பற்றி சொல்லவே வேண்டாம்.
.....
நான் சொல்ல வருவது இதுதான்.
.....விரலுக்கேற்ற வீக்கம் என்ற சொல் உண்டு.
நம் தகுதிக்கேற்ப செலவு செய்யலாம்.
அது விட்டு அகலக் கால் வைத்தாலும்
ஆடம்பர செலவு செய்தாலும் இக்கதிதான்.
ஒரு நோய் ,ஒரு படிப்பு செலவிற்கு கடன் வாங்கியிருந்தாலாவது நியாயம் என்று சொல்லலாம்.
இதில் அரசை குறை சொல்வது எப்படி சரியாகும்?
ஊதும் சங்கை ஊதி வைப்போமே.
கார்த்திக் அம்மா

2017/10/23

பாரதியாரெல்லாம் இப்போ வந்து பாட்டு பாடினா கண்டிப்பா கோர்ட்டு, கேஸு தான் என்று ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.

.......   ....... யார் யாரை 
யார் யாருடன் கம்பேர் செய்வது?
பாரதியை கேவலப் படுத்தாதீர்கள்.
பாரதி பாடியது நாட்டிற்காக.
சுயநலமில்லாத  செயல்.
அவர் கைது செய்யப் பட்டார். 
சிறையில் துன்பம் அனுபவித்தார்.
வெளி வந்தும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்.
அவரின் தேச பற்றை கொச்சை படுத்த வேண்டாம்.
அவர் அரச பதவிக்கோ 
பணத்திற்கோ ஆசைப் படவில்லை.
......
இப்போது நடப்பது பணத்திற்காகவும் 
பதவிக்காகவும் 
பிரபலத்திற்கும் 
ஒரு முகமூடியுடன் நடக்கும் நாடகம்.
மீண்டும் கெஞ்சுகிறேன்.
பாரதியை சிறுமைப் படுத்த வேண்டாம்.
கார்த்திக் அம்மா

2017/10/20

நடிகர்கள் முதலமைச்சர்கள் :
அட அட
எந்த சேனல் திருப்பினாலும் மெர்சல்  மெர்சல் .
நான் எந்த கடசியையும் சேர்ந்தவள் அல்ல.
அதே போல் எந்த நடிகரின் ரசிகையும் அல்ல.
.......
ஒரே ஒரு கேள்விதான்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
எல்லோருக்கும் முதல் அமைச்சர் ஆகலாம்
அடிப்படை basement  என்ன?
சினிமாவில் வீரம்
பன்ச் பேசுபவர்கள் ஏன்
தெருவுக்கு தெரு மேடை போட்டு பேச வேண்டியதுதானே.
அதென்ன
சினிமா வசனம் என்ற ஒரு பெரிய கேடயத்தின்  பின்னால் நின்று கொண்டு பேசுகிறீர்கள்.?
தைரியமாக தெருவுக்கு வாருங்கள்.
சினிமாவில் மக்கள் பிரச்சினைகளுக்கு கத்துபவர்கள்
நிஜத்தில் என்ன செய்தார்கள்?
கேரளாவில் இருந்து கழிவு கொட்டின விஷயம் பற்றி கேரளா முதல்வரிடம் போய் பேசியிருக்கலாமே ?
விவசாயிகள் பிரசினை பற்றி பிரதமரிடம் பேசியிருக்கலாமே ?
இப்போது மருத்துவர்கள் மாநாடு போட்டு சினிமாவில் சொன்ன பிரச்சினை பற்றி பேசி அவர்களை திருத்தலாமே.?
செயலில் காட்டுங்கள்.
அப்புறம் முதல்வர் பதவி பற்றி யோசனை செய்யலாமே ?
கார்த்திக் அம்மா
M.L.A vs I A S
எல்லாம் தொலைக்காட்சியில் பார்ப்பதுதான்.
காலையில் ஒரு எம்.எல் .ஏ  மக்களிடம் 2 மாதம் கழித்துதான் தண்ணீர் வரும்.
வீட்டு வீட்டுக்கு தண்ணீர் தர முடியாது.
உங்கள் காலில் எல்லாம் விழ முடியாது
என்று அவ்வளவு தெனாவெட்டாக பதில் சொல்கிறார்.
திமிராக பதில் சொல்கிறார்.
........
5 வருடத்தில் இன்னும் 3.5   வருடம் தான் இருக்கிறது.  அதற்கப்புறம்  இதே மக்களிடம்தான் வர வேண்டும் என்ற நிலை இருக்கும்போதே இவ்வளவு திமிரான பதில் வருகிறது.

ஆனால்

60 வயது வரை பதவி உறுதி என்ற நிலை இருக்கும் போதும் என்ன ஒரு பொறுமையான பதில்.
எல்லா ஊர்களுக்கும் சென்று ஒரு  விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
இவர் தூங்கி எத்தனை நாட்கள் ஆனதோ.
எத்தனை கேள்வி கேட்டாலும் சலிப்பு இல்லை.
அலுப்பு இல்லை.
கோபம் இல்லை.
kudos
RADHAKRISHNAN  I .A .S
அவரின் அழகுக்கு சினிமாவிற்கு போயிருந்தால் 100 ..200 கோடி சம்பாதித்திருக்கலாம்.
ஆனால்
நல்ல உழைப்பு.
இந்த ஒரு நெருக்கடியான நிலையில் அவர் செய்யும் ''சேவை '' உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.
வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்
கார்த்திக் அம்மா

2017/10/15

கோவிலும் ...கொடிமரமும் 
இப்போது ஒரு டி .வி நிகழ்ச்சியில்  பெண்ணியம் பற்றி ஒரு பெண்ணியவாதி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சியாக இருந்தது.
கொடிமரமும்  ஆண் பிறப்புறுப்பின்  அடையாளம் என்று.
அடக்  கொடுமையே 
பேச வாய்ப்பு கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா ??????????
கொடி மரம் ஒரு செய்தி ஊடகம் .
அந்த காலத்தில் கோவிலில் என்ன விஷேசம் என்பதை மக்களுக்கு தெரிய படுத்த கொடியில் (ஒரு துணியில் )எழுதி  எல்லோரும் பார்க்கும் வண்ணம் உயரத்தில் இருக்க செய்ய பயன் பட்டது தான் கொடிமரம்.
மூவர்ண  கொடியை எங்கு  பார்த்தாலும்   ""இந்தியா "" என்பது போல் தான் .
அந்த கொடிமரம் வழிபாட்டு பொருள் அல்ல.
இப்போது கொடிமரத்தை  அண்ணாந்து பார்த்து விட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுவோரை பார்த்தால் எனக்கு பரிதாபமாக  இருக்கும்.
எத்தகைய அறியாமை.

I    AM  SCIENTIFICALLY     RELIGIOUS
.
மதமோ கடவுளோ 
உண்மையோ 
பொய்யோ 
நமக்கு மீறிய ஒரு விஷயம் உள்ளது.
நம்முடைய ambitions ,aims ,wishes ,plans ,future  எல்லாம் ஒரே ஒரு நிமிடத்தில் சுக்கு நூறாக உடைகிறது.
ஆனால் கடவுள் , பரிகாரம் , முன்ஜென்ம பாவம், முன்னோர் சாபம்  என்று ஒரே அடியாக நம்மை முட்டாளாக்கி அடிமைப் படுத்துதலில் எனக்கு நம்பிக்கையில்லை.
குழந்தை இல்லையென்று 3000 அடி  உயரத்தில் கிரிவலம் சுற்றுகிறேன் என்று பரிகாரம் செய்யப் போய் விழுந்த இடம் தெரியாமல் ....
என்ன மடமை????
அரச மரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்றால் 
அந்த காற்றில் உள்ள வேதி பொருள் ஹார்மோன் அதிகப் படுத்தும் காரணியாய் இருக்கும்.
அரசனை நம்பி புருஷனை விட்டாளாம் என்பதன் அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்.
இனி கோவிலுக்கு சென்றால் கொடியில் அந்த கோவிலில் என்ன விசேஷம் என்று பாருங்கள்.
இல்லை நான் கும்பிடுவேன் என்றால் தவறு ஒன்றும் இல்லை.
நல்ல உடற்பயிற்சி.
செய்யலாம்.
நம்பிக்கை ஒரு motivating  catalyst .

நேற்று என் மாணவர்கள் என்னை அழைத்து பூங்கொத்து கொடுத்து பெருமை படுத்தினர்.
சந்தோஷமாக இருந்தது.
நன்றி.
கார்த்திக் அம்மா  

2017/10/09

கார் விபத்தும்  நடவடிக்கையும்:
தரமணியில் ஆடி கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா முதல், நடிகர் அருண் விஜய், போர்சே காரை குடிபோதையில் ஓட்டி வந்து டிரைவர் உயிரை பறித்த விகாஷ் வரை இப்போது ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் ஜெய் குடிபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தினார். இதற்காக அபராதமும் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.(அவருடைய லைசென்ஸ் பறிக்கப்பட்டு 6 மாதம் வண்டி ஓட்டக் கூடாது என்றும் தடை விதிக்கப் பட்டுள்ளதாக சொன்னார்கள்.)
ஆமாம் 
தெரியாமல்தான் கேட்கிறேன்.
ஐஸ்வர்யா 
விகாஷ் 
இருவர் மேலும் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது???????????
என்ன தண்டனை?????????????
நடிகர் ஜெய்  மேல் மட்டும் ஏன் உடனை நடவடிக்கை????????
இன்று செய்தி படி ஒரு பெண் குடிபோதையில் கார் ஓட்டி  விபத்து நடந்துள்ளது.
பெரிய இடமாம்.
இவர் மேல் என்ன கேஸ் போடுவார்கள்?
முதலில் அந்த பெண்ணே வண்டி ஒட்டவில்லை 
ட்ரைவர்தான் ஓட்டினார் என்று கதை சொல்வார்களோ???????
காலம் கலிகாலம்.

2017/10/08

சரியான உச்சரிப்பு :

receipt     ரிசிட்

yacht     யாட்

Aisle    எய்ல்   ( பஸ்ஸில் W  A  என போட்டிருக்குமே )

orange    ஒரிஞ்

buses   பஷீஸ்   buziz

roses   ரோசிஸ்  ரொஸிஸ்

most senior  என்று சொல்ல வேண்டும்  senior most  தவறு

அதே போல் most  junior

postponed  ( preponed  தவறு   advanced  என்று சொல்ல வேண்டும் )

தொடரலாமா 

உத்தரவு தந்தால்  மேற்கொண்டு இது போல் சில டிப்ஸ் வரும்.

அன்புடன்

கார்த்திக் அம்மா




2017/10/07

M .G .R  இருந்திருந்தால் ::::;
ஊரெங்கும் மக்கள் படும் அவதிகள் சொல்ல முடியாத அளவு இருக்கிறது.
ஒரு புறம் டெங்கு.
எத்தனை  உயிர் இழப்புகள்.
மக்கள் அழுகுரல் மனதை கஷ்டப் படுத்துகிறது.
வறுமை
வேலையின்மை.
கல்வி கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை கை  விடுகிற அவலம் .
விவசாயிகள் கஷ்டம்.
......     ........ இன்று M .G .R இருந்திருந்தால் எனக்கு எந்த விழாவும் வேண்டாம்.
அதற்கு செலவு செய்யும் பணத்தில் ஏழைகளுக்கு  கொசு வலை வாங்கி கொடுங்கள்.
கொசு மருந்து அடியுங்கள்.
கல்வி கட்டணத்தை குறையுங்கள்.
என்று எத்தனை செய்திருப்பார்.
கொசு வலையில் அவர் பெயர் போட்டு மக்களுக்கு கொடுத்தால் தினமும் அவரை நினைத்து போற்றுவார்களே.
வயிற்றுக்கு உணவில்லாத போது  வான வேடிக்கை தேவையா ?????????????
கார்த்திக் அம்மா