About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/10/24

கந்து வட்டி :
கந்து வட்டி வாங்கி கடன் கட்ட முடியாமல் ஒரு குடும்பத்தில் நால்வர் தீ  வைத்து கொண்டு இறந்த சம்பவம் எல்லோராலும் பேசப் படுகிறது.
......  
மனசாட்சியே  இல்லையா ?
மனிதாபிமானமே  இல்லையா
என்று என்னை யாரும் திட்டாதீர்கள் .
என் அனுபவத்தில் சொல்கிறேன்.
என் கணவர் சிவில் பொறியாளர்.
பலரும் வீடு கட்டித் தர கேட்பர் .
நான் சொல்வேன் .
கடன் வாங்கி வீடு கட்டும் முன் நன்கு யோசியுங்கள்.
வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டி தற்கொலை வரை போனவர்கள் பலரை நான் பார்த்தேன்.
ஒரு 10000 ரூபாய்க்கு 500 மாத வட்டி.
அப்படியென்றால் 20 லட்சத்திற்கு எவ்வளவு வட்டி என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள்.
கடன் கொடுப்பவர்களை ஏன் தவறு சொல்ல வேண்டும்?
இவ்வளவு வட்டி என்று அவர்களிடம் சம்மதித்துதானே  பணம் வாங்குகிறோம்.
.....
இப்போது தற்கொலை செய்து கொண்ட குடும்பம் ''  '' காது குத்து விழா '' விற்கு 60000   (  ''அறுபதாயிரம் '' )  கடன் வாங்கி உள்ளனர்.
ஒரு ஏழை குடும்பம்.
அப்போது 60000 அதிகம் இல்லையா ?
இது அளவிற்கு மீறிய ஆடம்பரம் இல்லையா?
அதற்கப்புறம் வீடு கட்ட தனி கடன்.
வங்கிக்கு சென்றால் நம்மிடம் அவர்கள் கொடுக்கும் கடனுக்கு உரிய சொத்து உத்திரவாதம் அல்லது ஒரு பிணையாளர் இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள்.
இந்த குடும்பம் அப்படி சொத்து அல்லது திருப்பி கட்டும் வசதி இருந்திருந்தால் வங்கிக்கே சென்று கடன் வாங்கியிருப்பார்கள்.
வங்கி வட்டியும் ஆளை முழுங்கும்.
அப்படியிருக்க தனி நபரிடம் வாங்கும் கடன் பற்றி சொல்லவே வேண்டாம்.
.....
நான் சொல்ல வருவது இதுதான்.
.....விரலுக்கேற்ற வீக்கம் என்ற சொல் உண்டு.
நம் தகுதிக்கேற்ப செலவு செய்யலாம்.
அது விட்டு அகலக் கால் வைத்தாலும்
ஆடம்பர செலவு செய்தாலும் இக்கதிதான்.
ஒரு நோய் ,ஒரு படிப்பு செலவிற்கு கடன் வாங்கியிருந்தாலாவது நியாயம் என்று சொல்லலாம்.
இதில் அரசை குறை சொல்வது எப்படி சரியாகும்?
ஊதும் சங்கை ஊதி வைப்போமே.
கார்த்திக் அம்மா

1 comment:

Jeevan said...

மிகச்சரி