About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/10/15

கோவிலும் ...கொடிமரமும் 
இப்போது ஒரு டி .வி நிகழ்ச்சியில்  பெண்ணியம் பற்றி ஒரு பெண்ணியவாதி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சியாக இருந்தது.
கொடிமரமும்  ஆண் பிறப்புறுப்பின்  அடையாளம் என்று.
அடக்  கொடுமையே 
பேச வாய்ப்பு கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா ??????????
கொடி மரம் ஒரு செய்தி ஊடகம் .
அந்த காலத்தில் கோவிலில் என்ன விஷேசம் என்பதை மக்களுக்கு தெரிய படுத்த கொடியில் (ஒரு துணியில் )எழுதி  எல்லோரும் பார்க்கும் வண்ணம் உயரத்தில் இருக்க செய்ய பயன் பட்டது தான் கொடிமரம்.
மூவர்ண  கொடியை எங்கு  பார்த்தாலும்   ""இந்தியா "" என்பது போல் தான் .
அந்த கொடிமரம் வழிபாட்டு பொருள் அல்ல.
இப்போது கொடிமரத்தை  அண்ணாந்து பார்த்து விட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுவோரை பார்த்தால் எனக்கு பரிதாபமாக  இருக்கும்.
எத்தகைய அறியாமை.

I    AM  SCIENTIFICALLY     RELIGIOUS
.
மதமோ கடவுளோ 
உண்மையோ 
பொய்யோ 
நமக்கு மீறிய ஒரு விஷயம் உள்ளது.
நம்முடைய ambitions ,aims ,wishes ,plans ,future  எல்லாம் ஒரே ஒரு நிமிடத்தில் சுக்கு நூறாக உடைகிறது.
ஆனால் கடவுள் , பரிகாரம் , முன்ஜென்ம பாவம், முன்னோர் சாபம்  என்று ஒரே அடியாக நம்மை முட்டாளாக்கி அடிமைப் படுத்துதலில் எனக்கு நம்பிக்கையில்லை.
குழந்தை இல்லையென்று 3000 அடி  உயரத்தில் கிரிவலம் சுற்றுகிறேன் என்று பரிகாரம் செய்யப் போய் விழுந்த இடம் தெரியாமல் ....
என்ன மடமை????
அரச மரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்றால் 
அந்த காற்றில் உள்ள வேதி பொருள் ஹார்மோன் அதிகப் படுத்தும் காரணியாய் இருக்கும்.
அரசனை நம்பி புருஷனை விட்டாளாம் என்பதன் அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்.
இனி கோவிலுக்கு சென்றால் கொடியில் அந்த கோவிலில் என்ன விசேஷம் என்று பாருங்கள்.
இல்லை நான் கும்பிடுவேன் என்றால் தவறு ஒன்றும் இல்லை.
நல்ல உடற்பயிற்சி.
செய்யலாம்.
நம்பிக்கை ஒரு motivating  catalyst .

நேற்று என் மாணவர்கள் என்னை அழைத்து பூங்கொத்து கொடுத்து பெருமை படுத்தினர்.
சந்தோஷமாக இருந்தது.
நன்றி.
கார்த்திக் அம்மா  

No comments: