About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/09/14

NEET

நீட் தேர்வு வேண்டுமா .B .E க்கு என்ட்ரன்ஸ் வேண்டுமா?

ஆம் வேண்டும்.

இது போல் ஒரு தேர்வு இருந்திருந்தால் நான் டாக்டராகி இருப்பேன்.1974,75 ல் வெறும் நேர்முக தேர்வு மட்டுமே.

அன்று என்னிடம் கேட்கப் பட்ட கேள்வி ''உனக்கு வடை பிடிக்குமா ,இல்லை முறுக்கு பிடிக்குமா ?''.என் வகுப்பில் படித்த என் தோழி என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் M .B .B .S ஸீட் கிடைத்து டாக்டரானாள் .பணமும் ,பலவும்  துணை நின்றன.

பல பள்ளிகள் +2 வில் 100% மதிப்பெண்கள் பெற வைக்கின்றன.அந்த மார்க்குகளை கொண்டு அவர்கள் மட்டுமே ஸீட் வாங்க முடியும்.அப்போதும் அந்த கிராம புற  மாணவன் i .t .i  அல்லது பாலிடெக்னிக் ல் மட்டுமே சேர்ந்தான் .

அதே போல் 100% வாங்கிய மாணவன் ஏழ்மை காரணமாக மருத்துவம் படிக்க முடியாத கதையும் உண்டு.

10000 மாணவர்களை படிக்க வைக்கிறார் ஒருவர் என்று   ஆர்ப்பாட்டம் செய்யும் ஒருவர் தன் சொந்த செலவில் படிக்க வைக்கிறாரா என்ற விளக்கம் வேண்டும்..அவருடைய பணம் 10000 மட்டும் என்று சொன்னார்கள்.பிற பல நல்ல உள்ளங்கள் பணமும் கொடுத்து உழைப்பையும் தருகிறார்கள் என்பது உண்மையா?

சரி அவ்வளவு நல்லவர் மாணவர்களுக்கு இலவச பயிற்சி தரலாமே .

நம் தமிழ் நாட்டின் சிலபஸ் நல்ல தரமான ஒன்று.ஆனால் blueprint என்ற ஒன்றை மட்டுமே நடத்தி அதிக மார்க்குகள் வாங்கி கடமை முடித்து கொள்ளப் படுகிறது .ஆங்கில பாடத்தில் practical உண்டு.telegram ,money order ,cheque ,pay  in slip ,resume ,application form ,email i .d ,interview ,debate ,railway reservation form இத்தனை இருந்தது.எந்த பள்ளியில் எத்தனை பேர் நடத்தினார்கள் .மாநில சிலபஸ்ஸை குறை சொல்ல வேண்டாம்.இந்த பாடங்களை சரியாக படித்தால் நிசசயம் நீட் பாஸ் செய்ய முடியும் .

M .G .R ஆசிரியர் வேலைக்கு T N P S C தேர்வு நடத்தியதால்தான் எனக்கு வேலையே கிடைத்தது.

இல்லை  வயது மூப்பு அடிப்படையில் என்று இருந்திருந்தால் எனக்கு வேலை கிடைத்திருக்காது.

சந்திராஷ்டமம்

இந்த ஒற்றை சொல் இப்போது மக்கள் அனைவருக்கும் தெரியும்.பலர் இன்று எனக்கு சந்திராஷ்டமம் .என்று சொல்ல கேட்கிறோம்.

அது பற்றி ஒரு விளக்கம்.ஒரு நட்சத்திரத்திற்கு 4 கால்கள்.அதாவது 4 பாதங்கள் .உதாரணமாக முதல் நட்சத்திரமான அஸ்வினி எடுத்துக் கொள்வோம்.ஒரு நட்சத்திரத்திற்கு 24 மணி நேரம் என்று கணக்கு .அப்படியானால் அஸ்வினி முதல் பாதம் '' ''6  '' ''மணி நேரம் ...அதாவது சந்திரன் அஸ்வினி முதல் பாதத்தில் '' ''6  '' '' மணி நேரம் மட்டுமே இருப்பார்.ஒருவர் பிறக்கும் போது அந்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் .

அப்போது அவர் மேஷ ராசியில் பிறக்கிறார்.அதாவது சந்திரன் அப்போது மேஷத்தில் இருப்பார்.

சந்திரன் தன் சுற்றை தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பார்.மேஷம் ,ரிஷபம் இப்படி வரும்போது மேஷத்திற்கு 8 வது ராசி விருசசிகம் .அப்போது அஸ்வினி நட்சத்திர முதல் பாதத்திற்கு சந்திராஷ்டமம் .

ஆனால்   ''6 '' மணி நேரம் மட்டுமே.

எல்லோரும் சொல்வது போல் 2.5 நாட்கள் அல்ல .அந்த 6 மணி நேரம் என்பது இரவு 10 மணி முதல்முதல் 4 a .m வரைஎன்றால் அப்போதுதான் சந்திராஷ்டமம்.தூக்கம் சரியாக இல்லாமல் இருக்கலாம் .கெட்ட கனவுகள் வரலாம் .லேசான தலைவலி இருக்கலாம்.

இப்படி ஏதோ ஒரு சிறிய அசௌகரியம் .அவ்வளவுதான் 

ஆஹா சந்திரன் 8 ல் இருக்கும்போது அறிவு சரியாக செயல்படாது .அதனால் சரியான முடிவு எடுக்க முடியாது என்பது ஜோசியர்கள் வாதம்.

ஐய்யோ ,அப்படின்னா எனக்கு எல்லா நாளும் சந்திராஷ்டமம்தான் .எப்போது அறிவு!!!!!! வேலை செய்தது???????????.பல பேர் என் போல்தான் 

ஹி ஹி (just  kidding ).அதனால் என் பிளாக் படிக்கும் அற்ப சொற்ப // வாசக பெருமக்களே //ஜோசியர்கள் பயமுறுத்துவது போல் இது ஒன்றும் பெரிய பூதமல்ல.

NEXT 

ராகு ,கேது .

உண்மையில் 7 கிரகங்கள் .

அதனால்தான் வாரத்திற்கு 7 நாட்கள்.

வானவில் 7 நிறங்கள் .VIBGYOR 

அதனால்தான் சூரியன் 7 குதிரை பூட்டிய வண்டியை வாகனமாக கொண்டார் .

அப்படியானால் ராகு ,கேது ?

INFRA RED  and ULTRA VIOLET .அக சிவப்பு +புற ஊதா .அம்புட்டுதாங்க .

காலங்காலையில முடிஞ்ச வர குழப்பிட்டங்க .சோளி முடிஞ்சுதுங்க .காஃபி போட போவோணுமுங்க .

கலாகார்த்திக் ..கார்த்திக் அம்மா

2020/09/10

நீட் ..தற்கொலை

 அரசு 7 லட்சம் நிதி ..

இது நிதி அல்ல அநீதி .

அரசு என் மீது கோபம் வேண்டாம் .

இந்த அரியலூர் மாணவன் நீட்டிற்கு தயாராகி வந்தான் .தோல்வி பயத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான் என்கிறார்கள் .

(  // என் பழைய பதிவு ஒன்றில் இப்படித்தான் சுஷாந்த் தற்கொலை பற்றி பாவம் என்று ஒரு பதிவிட இப்போது அவர் பற்றி வரும் செய்திகளை படிக்கும் போது வேதனையாக இருக்கிறது .//)

அதே போல் இந்த மாணவன் தற்கொலை பற்றி ஆராய வேண்டும் .

சரி, அப்படியே அவன் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டால் அதை ஏன் நியாய படுத்த வேண்டும் ?இந்த தேர்வை எதிர் கொள்ள முடியாத இவன் மருத்துவ தேர்வுகளை எப்படி எழுதுவான் ?

அதென்ன படித்தால் M .B .B .S மட்டுமே படிக்க வேண்டும்?

மற்ற படிப்புகளை படித்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாதா ?

யார் கிளப்பி விட்டார்கள் இந்த தப்பை ?

Flashback :நான் என் மாணவர்களிடம் கேட்பேன் ''நீங்கள் மேற்படிப்பு என்ன படிக்க விரும்புகிறீர்கள் ? ''

பல மாணவர்கள் M .B .B .S என்றுதான் சொல்வார்கள் .ஏனென்றால் அப்போதுதான் நிறைய சம்பாதிக்க முடியும் என்பது .

எத்தனைடாக்டர்கள் அப்படி 1001 கோடி சம்பாத்தித்து விட்டார்கள்?

நான் சொல்வேன்,  நீ 100 கோடி சம்பாதித்து 500அடி bedroom ல் 100 அடி படுக்கையில் படுத்தாலும்   உன் உயரத்திற்கும் அகலத்துக்கும் மட்டும்தான் படுக்க முடியும்....அப்போதும் நிம்மதியான தூக்கம் வர வேண்டும் ...

மருத்துவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற எண்ணத்தை வேறு உருவாக்கி வைத்துள்ளார்கள்.

நானும் மருத்துவம் படிக்க ஆசை பட்டேன்  .போதிய மார்க் இருந்தாலும் பெண்பிள்ளை என்பதால் தந்தை ஆர்வம் காட்டவில்லை .நான் சாதிக்கவில்லையா ?

NEXT :அரசு அறிவிக்கும் நிதி ./ இப்படியே எல்லா மாணவர்களுக்கும் நிதி தந்தால்  மாணவர்கள் தற்கொலை தொடரும் .

23 அரியர்ஸ் எல்லாம் என்ன செய்யும்? இது ஒரு தப்பு.மாணவர்கள் படிக்க உதவலாம் .அவனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் தரலாம் .அதை மீறி அவன் பெயில் என்றால் அது அவன் தப்பு .அந்த படிப்பை விட்டு அவனால் முடிந்த படிப்பை படிக்க வேண்டும்.

2020/09/08

arrears

 B.E  மாணவர்கள் அரியர் தேர்வு விவகாரம் குறித்து சில கருத்துக்கள்.மாணவர்களின் பிரசினை .

12ம் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் படித்து 100%  மதிப்பெண்களை பெற்று விடுகிறான் .( இதற்கு காரணம் ''blue print '' )

அப்படி மதிப்பெண் பெட்ற  மாணவன் தன்னை மிக புத்திசாலியாக நினைத்துக் கொண்டு கல்லூரிக்கு வருகிறான் ,அங்கு M 1, M 2, M 3 என்ற 3 பூதங்கள் அவனுக்கு எதிரே நிற்கின்றன .+2 வில்  கணிதத்திற்கும்  இந்த கணிதத்திற்கு துளியும் சம்பந்தமில்லை .+1 ல் கணிதமே நடத்த மாட்டார்கள் .

M 1ல் fail .SHOCK .+2வில்  200 க்கு 200. இப்போ FAIL .மச்சி ,,,,நண்பனும் FAIL .அவமானம் .ஆத்திரம் .தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரு குரூப் .சிகரெட் ,தண்ணி ஆரம்பிக்கிறது .தோல்வி தொடர்கிறது.

.     அதுதான் ///23...///அரியர்ஸ் க்கு முதல் காரணம் .

2  வது ..பாடம் நடத்துபவர்கள் ...பாதி பேர் தகுதி குறைந்தவர்கள் .நடத்த தெரியாதவர்கள் ..நானே பார்த்தேன் ..ஒரு ஆசிரியர் 25 பக்க குறிப்புகள் கொண்டு வந்தார் .படிக்கத்தான் தெரிந்தது .சொல்லித் தர தெரியவில்லை.மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .மாணவர்களை பார்த்தால் பாவமாக இருந்தது .

மாணவர்களுக்கு புரியும்படி நடத்த தெரியவில்லை என்று ஒத்துக் கொள்ளாமல் மாணவர்கள் முட்டாள்கள் என்று பழி அவர்கள் மேல் .

பழைய கதை ....ஒரு நாள் கணித பாடம் முடிந்து அடுத்த பாடவேளை என்னுடையது .ஆங்கிலம் ...மாணவர்கள் கணித ஆசிரியர் போர்டில் எழுதி சென்றதை அவசரமாக எழுதிக் கொண்டிருந்தனர்.

.....மாணவர்கள் கேட்டனர் ..மிஸ் இதை படித்து எங்களுக்கு என்ன பயன்?...நான் அப்போதுதான்...M .B .A படித்து கொண்டிருந்தேன்.உடனே அந்த கணிதம் அடிப்படையில்தான் 8 வது E M I எவ்வளவு ,என்பது எல்லாம் கணக்கிட முடியும் என்று ஒரு விளக்கம் கொடுத்தேன் .மாணவர்கள் ''மிஸ் இப்படி சொல்லிக் கொடுத்தால் எங்களுக்கு புரியுமே என்றனர் ''

அதுதான் விஷயம்.no application based .வெறும் தியரி .

NEXT :அடனோமாஸ் கல்லூரிகள் ..இங்கு அனைவரும் பாஸ் .80%.அவர்களுக்கு புத்தகத்தை பார்த்து விடை எழுதும் வசதி.அவர்கள் ஆசிரியர்களே விடைத்தாள் திருத்தி மதிப்பெண் வழங்குவர் .

இவர்களின் தரம் என்ன ???

NEXT ...இப்போது வழக்கு போட்டிருக்கும் அந்த பதவிக்கு வருவதற்கு எத்தனை கோடி லஞ்சம் கொடுத்தார் தெரியுமா ????????

அவர் பேசுகிறார் தரம் பற்றி ...சரி 2018 ல் எத்தனை மாணவர்களுக்கு '0 ' மதிப்பெண் போட்டு அவர்களை போனில் அழைத்து பேரம் பேசி பாஸ் செய்ய வைத்த போது அந்த V .C என்ன செய்தார் ????அன்று fail ஆன மாணவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை .இவர்கள் பண வெறிக்கு ஆளான மாணவர்கள் ARREARS மாணவர்கள் .அந்த விடைத் தாட்களை எரித்து விட்டார்களே .அப்போது யார் V .C .

கேள்விகள் இங்கே ....பதில் எங்கே ...

இப்படி தர்ம பாஸ் பெரும் மாணவர்களுக்கு உடனே வேலை கிடைக்காது .கம்பெனி வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் . அங்கே திறமை உள்ளவனுக்குத்தான் வேலை கிடைக்கும்.