About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/02/27

இரும்பு கரம்

iron கரம் (ஐரன் )கரம் (the right pronunciation is 'ian' and not iran) அயன் கரம் கொண்டு அடக்க வேண்டுமாம்.
மக்கள் போராடினால் அவர்களை கூப்பிட்டு பேசி அவர்கள் குறைகள் என்ன ,தேவைகள் என்ன ,போராட்டம் எதற்காக அதற்கான தீர்வு என்ன என்று விவாதித்து மக்களின் பயமோ தேவையோ அதை போக்குவதுதான் நியாயம்.அதை விட்டு இரும்பு கரம் கொண்டு அடக்குங்கள் என்றால் ...என்ன சொல்வது என்று தெரியவில்லை.

2020/02/23

ஆக்ரா சுவர்

கொடுமையிலும் கொடுமை .
ட்ரம்ப்  வரும் வழியில் குடிசைகள் இருக்கிறதாம் .அதை அவர் பார்க்க கூடாதாம்.அதனால் 7 அடி  உயர சுவர் எழுப்புகிறார்களாம் .7 நாட்களில் ஒரு பெரிய மருத்துவ மனையையே கட்டி முடிக்கிறது சீனா .
இந்த சுவர் எழுப்பும் செலவிற்கு பதில் அந்த குடிசைகளை இடித்து விட்டு புது வீடுகளை கட்டி  தரலாமே .பூக்கள் கொண்டு அலங்கரிப்பதற்கு எத்தனையோ கோடி செலவு செய்கிறார்கள்.அதில் ஒரு 10% செலவு செய்தால் இந்த குடிசைகளை வீடுகளாக மாற்றி விடலாம்.
அடுத்த myth .அமெரிக்காவில் ஏழைகளே இல்லாதது போல ஒரு இமேஜ் இருக்கிறது.
அங்கும் ஏழ்மை ,வீடு இல்லாதவர்கள் ,சரியான சாப்பாடு கிடைக்காதவர்கள் இருக்கின்றனர்.
குஜராத் மாடல் என்றெல்லாம் சொன்னார்கள்.
கடைசியில் இதுதான் அதுவா ????????

2020/02/17

காலை சத்துணவு

காலை சத்துணவு :
24 கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கு காலை சத்துணவு கொடுக்க அக்சய என்ற நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து கவர்னர்,முதல்வர் எல்லோரும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
நானும் அந்த நிறுவனம் தன சொந்த காசில் உணவு தருகிறது என்று நினைத்தேன்.
ஆனால் அரசு 250 கோடி தருகிறது.
20000 சதுர அடி  சமையல் அறை ,நீர் ,மின்சாரம் எல்லாம் அரசு தருகிறது.
500 கோடி மதிப்புள்ள நிலம் தருகிறது அரசு.
அப்புறம் என்ன தொண்டு நிறுவனம்?
அதை விட பெரிய கொடுமை ...
சாத்விக உணவு மட்டும்தான் தருவார்களாம் .
வெங்காயம் ,பூண்டு இருக்காதாம் .
இது அசைவம் என்று யார் சொன்னது?
இது இரண்டும் உடலுக்கு மிக மிக நல்லது.ஆன்டி ஆக்சிஜன் அதிகமாக இருக்கும் .
அசைவம் சாப்பிடுபவர்கள் கொலைவெறி யுடன் திரிபவர்கள் போல சித்தரிக்கிறார்கள் .
சைவம் சாப்பிடுபவர்கள் உத்தமர்களா?
என்ன என்னவோ நடக்கிறது.
காலம் கலிகாலம் .

paint

ஒரு நாள் கார்த்தியுடன் ஒரு வங்கிக்கு சென்று இருந்தேன்.அங்கு மேனேஜருடன் பேசிக் கொண்டிருந்த போது திரும்பி பார்த்த பொழுது ஒரு பெரிய்ய்ய்ய ஹால் .அதை பார்த்தவுடன் கார்த்தியிடம் சொன்னேன் " "கார்த்திம்மா , ,எனக்கும் இவ்வளவு பெரிய bedroom வேண்டும் .நானும் என் பேரக் குழந்தைகளும் சந்தோஷமாக விளையாடுவோம் " "
........
சிறு வயதிலிருந்தே என் சின்ன சின்னஆசைகள் கூட எதுவுமே நடந்ததில்லை.ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று நினைத்தால் ஒன்று கடை மூடியிருக்கும் .அல்லது எனக்கு பிடித்தது இல்லாமல் இருக்கும் .
வாழ்க்கையில் ஏமாற்றங்களையே சந்தித்த எனக்கு    இவ்வளவு    பெரிய ஆசை வரலாமா ???????????
இப்போது அந்த jenson  அண்ட் nicolsan விளம்பரம் பார்க்கும் போதெல்லாம்
  " " " ஏய் அதிர்ஷ்டம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டிய ஜென்மமே ,உனக்கு இப்படிப் பட்ட ஆசை வந்திருக்கலாமா ???  "" "'என்று என்னை நானே கேட்டு கொள்கிறேன் .
கண்ணீருடன்தான் .
கண்ணீர்தான் கண்ணில் நிரந்தரமாகி விட்டதே.
கார்த்திக் அம்மா                                                     '

2020/02/02

நீயா நானா

குழந்தை பிறப்பு :
இந்த கால இளைஞர்கள் +பெண்களும் ஏன் இப்படி குழப்பிக் கொள்கிறார்கள்???
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமாம் .அதற்கு 4 வருடங்கள் வேண்டுமாம் .
காலம் காலமாக நாங்கள் கல்யாணம் செய்யவில்லையா ?
எல்லோரையும் புரிந்து கொள்ளவில்லையா ?
ஒருவரை ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவில்லையா ?
in laws 'களை புரிந்து கொள்ளவே வேண்டாம் .
அன்பு செலுத்துங்கள் .போதும்.
எந்த பிரச்சினையும் வராது .என்னவோ நாங்கள் யாரும் படிக்காதது போலவும்,
வேலைக்கு போகாதது போலவும்
இந்த தலைமுறையினர் மட்டும்தான் சாதிப்பது போலவும் ...அலட்டல் ..அலட்டல்.
1930 களில் படித்து வேலையும் செய்தும்,சம்பாதித்தும் ,குடும்பத்தை எவ்வளவு அழகாக கொண்டு சென்றார்கள்.
குழந்தைக்கு தடுப்பு ஊசி க்கு மட்டும் 45000 செலவு செய்தேன்  என்கிறாள் ஒரு பெண் .
நம்பும்படி இருக்கிறதா ?
இளைஞர்களே பெண்களே
வாழ்க்கையை இயல்பாக வாழுங்கள் .
விதி வலியது.அது என்ன முடிவு செய்து வைத்திருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது.
ஆடாதீர்கள் .
அடங்கி வாழுங்கள் .carrier என்கிறீர்களே .கார்த்திக்காக நான் என் assistant professor ) English in 1981//வேலையை விட்டேன்.
குழந்தை தரும் சந்தோசம் வேறு எதுவும் தராது .
கேரியர் முக்கியம் எனும் பெண்களே .முட்டாள்கள் .