About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/09/27

கள்ள உறவு

கள்ள உறவு ...தகாத உறவு
நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை நான் விமர்சிக்கவில்லை.
நீதி மன்றமே கள்ள உறவு என்று சொல்லியிருக்கிறது.ஆண்  பெண் உறவு என்று சொல்லலாம்.
கலாச்சாரம்  என்று ஒன்றுமில்லை.
ஒரு வாழ்க்கை நெறி முறை.
ஒரு ஆணும் பெண்ணும் எப்போது தாய் தந்தை ஆகின்றனரோ அப்போது அனைத்து முறைகளும் மாறுபடுகிறது.
தாய் வேறு வழிகளில் ஈடுபாடு கொள்ளும்போது  அந்த குழந்தைகளை நினைத்து பாருங்கள்.
பசி என்று ஒரு குழந்தை அழும்போது ஓடி வருபவள் தாய்.
அதற்கான பணம் தர வேண்டியது தந்தை.
குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக  மாறும்போது  தீவிரவாதிகளும் குற்றவாளிகளும்  உருவாகிறார்கள்.
இத தடுத்து நல்ல குடிமகன்கள்  வேண்டும் என்றுதான் நம் பெரியவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொன்னார்கள்.
அதிலும் குழந்தைகளை பொறுத்தவரை  தாயின் பங்களிப்பு மிக மிக அதிகம்.
பெண்ணுக்கு உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா என்றால்
.....
ஆணுக்கும் சரி...
பெண்ணுக்கும் சரி ....சமூக நலன் கருதி ..கட்டுப் பாடுகள் தேவை.
நம் ஊரில் கணவன் மனைவிக்கு என தனி அறை  இல்லாத காரணமே பல குற்றங்களுக்கு காரணமாகிறது.
பல கற்பழிப்புகள் .....
தனி மனித சுதந்திரம்தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்வீர்கள் என்றால் ...
தனி மனிதர்களாக மட்டும் இருங்கள்.
தாய் தந்தை ஆகாதீர்கள் .
நாய்கள் போல்,
விலங்குகள் போல்
எங்கு வேண்டு மென்றாலும்,
எப்போது வேண்டுமென்றாலும்
உறவு கொள்ளுங்கள்.

2018/09/11

கலைஞர் +கார்த்தி சிலை

செய்தி
 // //  கருணாநிதிக்கு.  சிலை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ளது. இந்த சிலை இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது. அறிவாலயத்தில் ஏற்பாடு அறிவாலயத்தில் ஏற்பாடு இந்த சிலை அறிவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அறிவாலயம் உள்ளே நுழைந்ததும் நடுவில் தற்போது அண்ணா சிலை இருக்கிறது. அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே கருணாநிதியின் சிலை வைக்கப்பட இருக்கிறது. இதற்காக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க வெண்கல சிலை முழுக்க முழுக்க வெண்கல சிலை இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இன்னும் இதில் சில கடைசி கட்ட பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது. யார் செய்கிறார் யார் செய்கிறார் இந்த சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிமைக்கிறார். இவர் இதற்கு முன்பே தலைவர்களுக்கு சிலை வடிவமைத்துக் கொடுத்தவர். சில கோவில் சிலைகளையும் வடிவமைத்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.// //

இது கார்த்தியின் சிலை.இதை செய்து தந்தவர் இந்த தீனதயாளன் அவர்தான்.fiber ல் செய்தது . வீட்டிற்கு வருபவர்கள் கார்த்திதான் நிற்கிறான் என்றே நினைத்து கொள்வர்.
சொலவதில் பெருமை இல்லை .
வேதனைதான்.
கார்த்திக் அம்மா

2018/09/10

8,12,20 சாலை

8 வழி சாலை
12 வழி சாலை
20 அடி  ரோடு
எவ்வளவ் வேண்டுமானாலும் போட்டு தூள் அடிங்க .நல்ல விஷயம்.ஏன் என்றால் பெட்ரோல் போட முடியாமல் மக்கள் நடந்துதான் போக வேணடும் .அதற்கு  இப்படியான பிரமாண்டமான சாலைகள் நிச்சயம் தேவை.
அரசை குறை சொன்னவர்களே ,இப்போது புரிகிறதா அரசு மக்களுக்காக நிறைய சிந்த்தித்து ,யோசனை செய்து  கருணை எண்ணத்துடன் செயல் படுகிறது என்பது .
sorry .Govt .

2018/09/06

அபிராமி+கண்ணடி

ஒரு பாட்டில் ஒரு பெண் கண்ணடிப்பது போன்ற காட்சி  இஸ்ரோ சாதனை போல் பேசப்பட்டது .
இப்போது பார் .
அபிராமி கண்ணடிக்கிறாள்.
சினிமாவில் இது போன்ற காட்சிகள் மக்களை எந்த எல்லை வரை கொண்டு விடுகிறது பாருங்கள்.
அந்த பாடலில் வகுப்பறையில்  கண்ணடிப்பது ,flying kiss கொடுப்பது பார்த்து எத்தனை வகுப்பறைகளில்  இந்த கொடுமை நடக்கிறதோ.
மாணவர்கள் படிப்பதை விட்டு இந்த சாதனைகளைத்தான் செய்வர்.
மீடியா வே  மக்களை கெடுக்காதே.

2018/09/04

கண்ணடி

அந்த காலத்தில் கண்ணடிப்பது என்பது ஓர் இழிவான கேவலமான செயலாக பார்க்கப்பட்டது .
இப்போது ஏதோ ஒரு பாடலில் ஒரு பெண் கண்ணடிப்பது  இமாலய சாதனையாக பேசப்படுகிறது .
நீதி மன்றத்தில் இதற்கு விளக்கம் சொல்லப் படுகிறது .
எல்லாம் சரிதான்.
ஆனால் ...
 வகுப்பறையில் கண்ணடிப்பது ,flying kiss கொடுப்பது எல்லாம் மிகப் பெரிய தவறான விஷயம் ...
அப்படின்ன  ஏன் யாரும் சொல்லவில்லை ????????
யாரும் கண்டிக்கவில்லை ???????????????
கார்த்திக் அம்மா