About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/12/20

இந்திரா காந்தி

 1971 ம் ஆண்டு நடை பெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 ம் ஆண்டு நினைவு நாள் பெரிய விழாவாக கொண்டாட பட்டது.மகிழ்ச்சி .ஆனால் இந்த போரின் கதாநாயகி பற்றி ஒருவர் கூட பேசவில்லை.ஜாதி மதம் அரசியல் தாண்டி அவறின் வீரத்தை  தைரியத்தை திறமையை பாராட்டி இருக்க வேண்டாமா?.அத்தனை படை தளபதிகளும் தடுத்தும் என் படை வீரர்களுக்கு என்ன ஆகிறதோ அது எனக்கும் ஆகட்டும் என்று சொல்லி விட்டு போர்க்களத்திற்கு சென்று அவர்களிடம் உற்சாகமாக பேசிய அந்த மாண்பை  பாராட்டி இருக்க வேண்டாமா?.பங்களாதேஷ் உருவாக்க பட்ட போது அந்த நாட்டு மக்கள் இவர  தெய்வமாக வணங்கினார்களே  அதை நினைவு கூர்ந்திறுக்க வேண்டாமா?. emergency  நான் செய்த மிக பெரும்  தவறு என்று ஒப்பு கொண்டதை சொல்லி இருக்க வேண்டாமா?.1971 போரில் வென்றதை உலகமே வியந்து பார்த்ததே..இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று உலகிற்கு தெரிய படுத்தினாரே அதை பற்றி பேசி இருக்கலாமே .

2021/12/19

what to say?

 எதை எழுதுவது என்று தெரியவில்லை.எந்த செய்தியும் நல்ல செய்தியாகவே இல்லை.வாழ்க்கையிலும் எந்த நல்ல செய்தியும் இல்லை. காலம் வேகமாக ஓடுகிறது.

மக்களின் துன்பங்கள் நீங்கி நல்  வாழ்வு பெறட்டும்.

2021/11/21

நீயா நானா

 இன்றைய நீயா நானாவில் young grandma (இள வயது பாட்டிகள் )என்பது பேசுபொருள்.

பாட்டிகள் இத்தனை வருடம் குடும்பத்திற்காக உழைத்து விட்டோம்.

now we want to enjoy our life .எனக்கே எனக்கான வாழ்க்கையை நாங்கள் வாழ வேண்டும் என்று பேசினார்கள்.

We look young , we feel young அப்படி இருக்க எங்களை ;ஆயா ,பாட்டி, அப்பத்தா என்று கூப்பிட்டு ஏன் ஓரம் கட்டுகிறீர்கள் என்று வாதம் செய்தனர்.

எனக்கும் இந்த எரிச்சல் வரும்.எங்காவது கடைகள்,பஸ்ஸில் ஒரு 35 வயது மதிக்க தகுந்த பெண்கள் ''பாட்டி'' என்று கூப்பிடும்.

எனக்கு 50 வயது.அவர்களுக்கு 35 வயது.

பெண்பிள்ளைகள்தான் இந்த அக்கிரமம்.

அதுவே அந்த வயது பையன்கள் ''அம்மா'' என்றுதான் சொல்வார்கள்.

ஹரிகேச நல்லூர் ஐயா பேசுகையில் ஒரு முறை இதைத்தான் சொன்னார்.40 வயதுள்ளவர்கள் எல்லாம் என்னை ''தாத்தா '' என்கிறார்கள்.கோபம் கோபமாக வருகிறது என்கிறார்.

யாருக்குமே தனக்கு வயதாகி விட்டதோ என்ற பயம் வந்து விடுகிறது

என் பிரச்சினை வேறு.

இந்த நிகழ்சசியில் பேசிய பெண்கள் சொன்னது போல் எனக்கு modern dressing etc ஆசை எல்லாம் கிடையாது.

வயது தெரிந்து விடும் என்ற எண்ணம் கிடையாது.

என் கார்த்தி மகனுடைய மகனோ, மகளோ வந்து என்னை பாட்டி என்று கூப்பிட வேண்டும்.

எத்தனை கனவுகள்????

எத்தனை கற்பனைகள்?????

கார்த்தியுடன் எத்தனை விளையாட்டு பேச்சுக்கள் ?????????

அத்தனையும் கற்பனையாகவே போய்விட்டதே ....

அதனால் இந்த பாட்டி என்ற வார்த்தை என் உயிரையே உலுக்குகிறது.

2021/11/19

KARTHIK'S RUMBLES

 

Rumble in the Bronxகார்த்திக்கின் 2005 u.S பயணம்

2005 வரை கார்த்தியின்  posts .அதன் பின் நான் [கார்த்திக் அம்மா தொடர்கிறேன்.]இது ஒரு மீள் பதிவே
A travelogue in pics.[this is posted by KARTHIK ]கார்த்திக்கின் 2005 u.S பயணம்

6/17
.
Coffee with Boeing! Cafe by the airside at London Heathrow

6/18

Outside Indianapolis Speedway


Formation lap


Narain Karthikeyan


Fox reports on US GP debacle

6/25

San Antonio Sea World

6/26

SCSE2002 Texans Get-together. Herbert Jose (he is now Hose ;), Arun aka Koopi, Sibi and the honorary Texan


Jet Skiing in Lake Travis, Austin

7/2

With Vijay aka <%youknowwhat%> at College Station, TX in front of his department.


Live music at the live music capital of the world(read US). 6th Street, Austin

7/4

Independence Day, downtown Austin

7/6

Tubing in Lake Georgetown

7/8

Stranded in Cincinnati airport after the flight missed me. Was one of the only 4 people in the whole airport that night. Ironically, I was watching 'The Terminal' on my GMini.

7/9

Perumal, me and Vasanth @ Peru's apartment in Jersey City. The view out of his window in Manhattan.


Ellis Island Museum. Remember the place Will Smith takes Eva Mendes to, in Hitch?


Been There Seen That


BTST


BTST


Scene at a NewYork Times Square Subway Station


Caricature of a caricature. Times Square

7/10

At Sai's house in Washington DC.


Hope diamond at Smithsonian Museum of Natural History. This was supposedly stolen from the idol of Sita from some temple in India and hence carries a curse!


National Archives. Remember the place Nicholas Cage steals the US Constitution in National Treasure?


Nilaava thottathu yaaru? Intha Karthikeyan thaan! Piece of rock from the moon


No. This was not part of my trip. But this ruined my planned trip to London. I even got the British visa the day before the blasts. But my mom denied me visa to go to London. :( (That makes me a victim of a terrorist attack, doesn't it?)

2005/07/05

Move over, iPod! GMini is here!!

The time of plain vanilla mp3 players is over. Even before it really started, I guess.
Life is not just random, guys. Life is color. And life is both audio and video.
Check out my new 20GB Audio/Video player Archos GMini400.

Mustang, here I come! Montoya, here I come!

I am travelling to Austin tomorrow, for a month's stay. No body knows why I have to go to Austin to do the same work, I have been doing(or not doing) all the while here. Anyway, at least I will get to take that Ford Mustang for a spin again. That was the part I loved most in my last trip too.

But thats not all. We have to grow up. We gotta keep doing greater things. So I am gonna watch one Mr.Juan Pablo Montoya drive one car called Mclaren in one Indianapolis Motor Speedway in a event called Formula 1 U.S Grand Prix. Let me pinch myself again. 3 weeks ago I wasn't sure I will watch an F1 race in my life time. In two days time, its gonna be a reality. (if all goes well, that is)

What next? I am planning a vacation in London on my return journey, subject to the British Consulate in LA giving me a visa. What with my gang-mate NaveenRaj in London assuring complete sponsorship for the vacation and my company sponsoring my travel this is one helluva deal of a lifetime to tour London for free...

Have kept the rest of my schedule pretty open to accomodate any wacky ideas me and my friends there can generate(A visit to NYC is on the cards..) So stay tuned to hear my exploits.. (No. not like the one from my last visit where I banged my Mustang against a Dodge Ram! or that tumble down that ski slope without my skiing sticks!!)
mean, who framed these rules? Is this where science ends and religion starts?)

BUT, I am not ready to take 'God' as the default answer for the lack of even some flimsy piece of evidence to support it, except for people's belief(and how many billions of them for how many ages)

2005/06/02

Hasta La Vista, Chennai!

இது நாள் வரையில் நான் என்னை முழு பெங்களூர்வாசியாக நினைத்ததில்லை. வாரத்தில் 5 பகல்கள் 4 இரவுகள் பெங்களூரில், 2 பகல்கள் 1 இரவு சென்னையில், 2 இரவுகள் பெங்களூர் மெயிலில் 'Side Lower berth' இல். இது தான் என் கடந்த மூன்று ஆண்டு கால வாழ்கை. ஆனால் இந்த வாரம் முதல் நான் ஒரு முழு பெங்களூர்வாசி. கடைசியாக hosteler வாழ்க்கை முடிந்து உண்மையிலேயே day-scholar ஆக போகிறேன்! Lets see how a full-fledged life in the IT capital turns out to be.
2

2005/02/23





தீபமும் கதைகளும்

 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரை எல்லா சேனல்களும் தீப நிகழ்ச்சியை ஒளி பரப்பின.

நன்றி.

ஆனால் வெறுப்பேத்திய விஷயம் என்ன என்றால் அங்கங்கே ஒருவர் உட்கார்ந்து கொண்டு கதையாய் சொன்னார்கள் பாருங்கள் ULTIMATE ...இவர்களே கடவுள் கூட இருந்த மாதிரி என்ன டயலாக்.

 சொல்லுங்க .

ஆனால் நம் முன்னோர்கள் எந்த ஒரு விழாவையும் காரணமில்லாமல் செய்யவில்லை.

ஏதோ ஒரு அறிவியல் காரணமாகவே இந்த மத சம்பிரதாயங்கள் .

இந்த மலை பற்றி கேட்டால் ஒரே வார்த்தை ''இது அக்னி ஸ்தலம் ''.அப்படி என்றால் அந்த மலையின் கல் என்ன வகை?

whats the radiation?

whats the influence of the moon's rays on the stone ?

how does it affect and effect human being?

somewhere long long ago i read that when we light lamps lakhs and lakhs together its heat and the gas released from the oil nullify the storm effect.

MAY BE TRUE or may not.

இத்தனை கதை சொல்பவர்கள் கொஞ்சம் அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் படித்து ஆராய்ந்து அதையும் விளக்குங்கள்.

நம் வாரிசுகளுக்கு தெரியட்டும்


 

2021/11/10

மழையும் டி வி சேனல்களும்

EXAGGERATION TO THE EXTREME 

அப்பப்பா இந்த {சில} டி .வி சேனல்கள் செய்யும் அட்டகாசம் ,atrocity ,அலம்பல்  ..அளவே இல்லை.

எங்கேயாவது தண்ணீர் வீட்டிற்குள் வந்து விட கூடாது.

நெல் தண்ணீரில் நனைந்து விட கூடாது.

மீனவ பெண்ணுக்கு script கொடுத்து அது  திணறும்போது prompt செய்து 

காஞ்சிபுரம் நெசவு பெண்ணை பேச வைத்து என நாடும் ,மக்களும்   துன்பத்தில்  மட்டுமேஇருப்பது போல் காட்டி மக்களை  பதை பதைக்க  வைத்து ,வெறுப்பாக வருகிறது.

ஐப்பசி அடைமழை.தெரிந்ததுதான்.

என்னவோ இப்போது மட்டும்தான் மழை வருவது போலவும் மக்கள் கஷ்ட படுவது போலவும் பேசியே தீர்க்கிறார்கள்.நான் பிறந்த ஊர் மேச்சேரி.50 % நெசவாளர்கள்.அந்த பகுதியே சாம்ராஜ்பேட் என்றுதான் பேர்.

மழை வந்தால் நெசவு இல்லை.

கஞ்சி அல்லது பாகு போடுவது என்பார்கள். மழையில் செய்ய முடியாது.

என்ன அரசுக்கு மனு போட்டார்களா? நிவாரணம் கேட்டார்களா?

அதே போல் விவசாயிகள். கன்று குட்டிகளை வீட்டிற்குள் கொன்டு வந்து வைத்து கொண்டு கஷ்டப்படுவார்கள்.

பயிர்கள் நீரில் மூழ்கி விடும் .தக்காளி பறிக்க முடியாது.காய்கள் செடிகளிலேயே வீணாகி விடும்..

அவர்கள் ஐயோ கஷ்டமே என்றுபுலம்பினார்களா?

மழை வரும் என்று தெரியும்.கஷ்டம் என்று தெரியும்.

''இந்த கஷ்டம் வாழ்வின் ஒரு பகுதி என்று தெரியும்.''

அப்போதெல்லாம் ஊட்டியில் இடி இடித்தால் சேலத்தில் கரண்ட் கட் செய்து விடுவார்கள்..விபத்து எதுவும் நடக்க கூடாது என்ற காரணத்தினால் .தமிழ் நாட்டில் எங்கே கரண்ட் கட் ஆனாலும் மேட்டூர் தெர்மல் குடியிருப்பில் மின்சாரம் .இருக்கும்.

ஆனால் அங்கும் சில விபத்துகளுக்கு பிறகு மழை என்றவுடன் மின் இணைப்பை துண்டித்தனர்.

இப்போது 30 நிமிடம் கரண்ட் இல்லையா .அவ்வளவுதான்.p .m ..c .m என்று காய்ச் சி எடுக்கிறார்கள்.

என்ன மனப்பான்மை இது????????? 


2021/10/30

புனீத் ராஜ்குமார்

 புனீத் ராஜ்குமார் :

எவ்வளவு பேர் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள்.

எவ்வளவு பேருடைய அன்பை சம்பாதித்து இருக்கிறார் .

எத்தனை அநாதை ஆசிரமங்கள் 

முதியோர் இல்லங்கள் 

எண்ணற்ற சேவைகள் .மலைப்பாக இருக்கிறது.

நடிகர்கள் என்றாலே ஒரு வித எதிர்மறை எண்ணத்தில் இருந்த நான் இவரின் சேவை லிஸ்ட்டை பார்த்து அசந்து விட்டேன்.

....

ஆனால் இவரின் ஜிம் உடற்பயிற்சி பார்த்து பயந்தே விட்டேன்.

என்ன மனிதர்.

தரையில் இருந்து 4 அடி உயரம் எழும்புகிறார்.தாவுகிறார்.குதிக்கிறார்.

ஐயோ .திகீர் என்றாகி விட்டது எனக்கு.அதிர்ந்தே விட்டேன்.

இவ்வளவு கடுமையான பயிற்சிகள் தேவையா?

..செந்திலின் நண்பன் வினோத்.L .K .G யில் இருந்து ஒன்றாக படித்தவர்கள்.

படித்து முடித்து நல்ல வேலை.அடுத்து என்ன பெண் பார்க்கும் படலம்தானே.சற்று குண்டு உடம்பு.

சில பெண்கள் மறுத்து விட்டன.

உடம்பை குறைக்கிறேன் என்று ஜிம்முக்கு போக ..அங்கு ஏதோ டயட் ..ஒரு நாள் மாலை நேரத்தில் வீடு திரும்பி இருக்கிறான்.நண்பர்கள் சேர்ந்து தங்கி இருந்தனர்.எனக்கு சோர்வாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறான்.நண்பர்கள் ரெஸ்ட் எடு என்றிருக்கிறார்.சிறிது நேரம் கழித்து நெஞ்சு வலிக்கிறது என்றிருக்கிறான்.

நண்பர்கள் பயந்து ஆட்டோவிற்கு தேட ,ஆம்புலன்ஸ் வராமல் போக ,மருத்துவமனைக்கு செல்வதற்குள்  எல்லாம் முடிந்து விட்டது.

அப்பா மேட்டூரில் இருந்து வந்து கதறி என்று வழக்கமான நடைமுறைகள்.

என் கேள்வி :

என்ன அழகு?

என்ன குண்டு ,ஒல்லி என்ற வார்த்தைகள்?

ஆரோக்கியம் முக்கியம்.

ஒரு காலத்தில் எனக்கு அநாமதேய கடிதங்கள் வரும்.

என்னுடைய 36 வது  வயதில் ஒரு கவிதை வந்தது.

..''  ''அக்கறை எடுத்து அலங்கரித்து கொண்டால் ,

ஆரணங்கு நீ என அறிவாயோ?''  ..எனக்கு தெரியும்.அது என் சக ஆசிரியை எழுதிய கவிதை.ஏனென்றால் எந்த காலத்திலும் என்னை அழகு படுத்தி கொள்ள ஆர்வம் காட்டியதில்லை.

என் மிக நெருங்கிய உறவினர் தன் மகனுக்கு என்னை திருமணம் செய்ய விரும்பியும் ''பெண் style ஆகவே இல்லை'' என்று சொன்னான்.

அழகு என்ன அழகு?

ஆயுள் வேண்டும்.

46 வயதில் இவர்.  இவரின் பாதி வயதில் KARTHI .  30 வயதில் வினோத். இன்னும் எத்தனை பேர்??

நெஞ்சம் சுய நினைவை இழந்து நிற்கிறது.

 

2021/10/24

எதை எழுதுவது

 நானும் ஏதாவது புதிய , சுவையான விஷயம் பற்றி எழுதலாம் என்று பார்க்கிறேன்.

ஆனால் 21 கிலோ தங்கம் ,500 கிலோ வெள்ளி என்ற ஊழல் செய்திகள்தான் டி .வி சேனல்களில் ஓடுகின்றன.

இல்லையேல் யார் யாருடன் ஓடி போனார்கள் ,கள்ள காதலால் மனைவி கணவனை கொலை செய்வது, நடு ரோடில் 6 பேர் சேர்ந்து ஒருவரை வெட்டி சாய்ப்பது போன்ற செய்திகள்தான்.

மக்கள் மக்களாகவே இல்லை.

ஏன் இந்த பேராசை ?

எதற்கு இந்த வெறி ?

பணத்தாசை 

பெண்ணாசை 

 குறுக்கு வழியில் வரும் அளவு கடந்த பணம் ,தவறான அதிகாரம் தரும் திமிர் ...எல்லாம் ..ஆர்தர் போன்ற இடங்களில் ...

அரசியல் வாதிகள் பற்றி சொல்லவே வேண்டாம் .

நாடு நாடாகவே இல்லை.

2021/09/23

ஊழல் ..ஊழல் ..ஊழல்

 ஊழல் ..ஊழல் ..ஊழல் 

தோண்ட தோண்ட பூதம் வரும் என்பது சொல்வழக்கு .
ஆனால் தோண்ட தோண்ட பூத படையே வருகிறது தமிழ் நாட்டில் .
எங்கும் ஊழல் .
எதிலும் ஊழல்.
building,  குடியிருப்பு வீடுகள்  .dams ....எல்லாமே    மணல்   மட்டும்தான்.
ஏதோ ஒரு சிவில் civil என்ஜினீயர் சிமெண்ட் கலக்காமல் கட்டிடம் கட்டும் தொழில் நுணுக்கத்தை படித்து வந்திருக்கிறார்.
அவர் தன் முழு திறமையை காட்டி கட்டிய கட்டிடங்கள் .ஆஹா .அற்புதம்.
.......
அப்புறம் நிலக்கரி .....coal ...தெர்மல் power station க்கு வராமலே காணாமல் போயிருக்கிறது.
நிலக்கரி ரயிலில் வரும்போதும் , கன்வேயர் பெல்ட்டில் செல்லும் போதுமே தீ பற்ற கூடிய தன்மை உடையது.என் கணவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணி புரிந்தவர் .civil ..அதனால் இந்த  விவரங்கள் எனக்கு தெரியும் .
ஆனால் 
இப்போது  கப்பலில்  வரும்போதே காணாமல் போய்விட்டது.
......இப்போது கிளம்பி இருக்கும் பூதம்தான் பெரிய் ய் ய் ய் ய பூதம்.cooperative பேங்க் பூதம்.5  சவரன் நகை வைத்து விவசாயிகள் கடன் வாங்கலாம்.ஒருவர்  300 சவரன் நகை வைத்து கடன் வாங்குகிறார் .300/5=60 கடன்.
இன்னொருவர் நகையே வைக்காமல் கடன் வாங்குகிறார்.
இன்னொருவர் கவரிங் நகை வைத்து கடன் வாங்குகிறார்.
ஆனால் 
ஆனால் 
இதெல்லாம் அந்த bank மேனேஜருக்கு தெரியாமலா நடக்கும்.????????
ஒரு இடத்தில் ஒருவர் சொல்கிறார்....ஒரு மேனேஜருக்கு தனி flight ,தனி தீவு ,,தனி பெண்கள் என்று புனித நீராட்டினேன்......அற்புதம்.
நன்றாக அனுபவித்திருக்கிறார்கள்....
முதலில் இந்த அதிகாரிகளை நாடு கடத்த வேண்டும் .
அந்தமான் ஜெயிலில் போட வேண்டும் .
இவ்வளவுதான் என்று நினைத்து விட வேண்டாம் .
ஆனால் 
இப்போதைக்கு இது போதும் .
..... .....
எனக்கு ஏன் வயிறு எரிகிறது என்றால் ....ஒரு ..ஒரு ரூபாயாக சேமித்து 
....அதற்கு வரி கட்டுகிறோமே ....அதனால்தான்.

2021/08/03

ஆடி 18

 காவிரி ஓடும் ஊர்களில் எல்லாம் பெரிய விழா இந்த ஆடி 18.

புது நீர் ஓடி வர ,பொங்கும் காவிரியில் நீந்தி,எதிர் நீச்சல் என்று பல கோலாகலம்.

சாமி ஆத்துக்கு போகுது (அகத்துக்கு என்பது ஆத்துக்கு ...என்றாகி விட்ட ஆத்துக்கு இல்லை....இது காவிரி  ஆறு.) .....என்று கிராம கோவில்களில் இருக்கும் உற்சவர்களை  ஆற்றுக்கு  கொண்டு சென்று புனித நீராட்டி எடுத்து வருவார்கள்.

இன்று என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. போன் செய்து பேசவில்லை.எப்படியும் திருட்டு  தனமாக சாமியை காவிரிக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

நான் திட்டுவேன் என்பதால் என்னிடம் பொய் சொல்லி விடுவார்கள்.

அவர்களுக்கு ஏன் தர்ம சங்கடம் என்பதால் பேசுவதை தவிர்த்து விட்டேன்.

என் தாய் வீடு தெருவில் பாதிக்கு மேல் இருக்கும்.அவ்வளவுக்கும்  கோலம் போட்டு ஆடி 18 என்று எழுதுவேன்.

கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் அந்த சுழி அழிக்கப் பட்டு அடி 18 என்றாகி இருக்கும்.

என் அண்ணாவின் வேலை.இப்படி ஏதாவது செய்து என்னை வம்புக்கு இழுத்து மகிழ்வதில் அவருக்கு பேரானந்தம்.(இப்போது இல்லை.)

இன்றுதான் நெல் விதைப்பார்கள்.

எல்லா பண்டிகைகளும் களை இழந்து வருகின்றன.

 

2021/08/01

1 August 2005

 1 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.

(  வாழ்க்கையின் ஒரு நொடி கூட வீணடிக்க மாட்டான்.வாழப் போகும் நாட்கள் குறைவு என்றதாலோ என்னவோ not even a single minute will he waste .மகனாக, அண்ணனாக,DELL ல் SENIOR SOFTWARE ER ஆக ,வரலாறு .COM என்பதாகட்டும் எத்தனை பரிமாணங்கள் )

இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.

இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இன்னும் 25 நாட்கள்தான் அவனுடன் இருப்பேன் என்று தெரியாமல் சந்தோஷமாக ....போனேன்.
26ம் தேதி எல்லாம் முடிந்து போனது.
எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
இன்று 01.08.2021.
எத்தனை வருடங்கள் ஓடினாலும் மனம் இன்னும் 2005 லியே இருக்கிறது .
மனம் ஓ என கத்திக் கொண்டே இருக்கிறது.
கதறிக் கொண்டே இருக்கிறது.
மகன் மீண்டும் வந்து விட மாட்டானா ?ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் அது கார்த்தியாக இருக்கும் என்று மனம் பரிதவிக்கிறது.
என்ன சொல்ல?
தாள முடியா வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2021/07/17

தேங்கா சுடுற நோம்பி

 தேங்கா சுடுற நோம்பி::

இது என்ன கமல் பாஷை  மாதிரி இருக்கா ...இது எங்க சேலத்து மொழி.

நோன்பு என்பதுதான் '''நோம்பி'''  என்று ஆகி விட்டது.வாழ்க எம் சேலம் மக்கள்.

அது என்ன பண்டிகை என்றால் ஹி ஹீ ...எல்லா டி .வி சேனல்களும் சொல்லி விட்டன.தேங்காயில் அரிசி,வெல்லம் ,எள் ,கடலை அடைத்து நெருப்பில் சுட்டு சாமிக்கு ''படைத்து'' சாமியின் represntative ஆக நாமே சாப்பிட்டு விடுவது.

HERE COMES THE SCIENCE BEHIND IT :

என்ன விஷயம் என்றால் ,

ஆடி மாதம் புது புனல் (அதாங்க  தண்ணீர் ) காவிரியில் புது தண்ணீர் (ஒரு காலத்தில் கரை புரண்டு ஓடும் ...இப்போது சிலர் தயவு செய்தால் மட்டுமே )  .புது நீர் என்பதால் நோய் தாக்கம் அதிகம் இருக்கும்.

..அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்த வேண்டும்.

தேங்காய் பாலில் அந்த சக்தி அதிகம் .+எள் +etc .மக்களை இது நல்லது என்று அறிவியல் பேசினால் கேட்க மாட்டார்கள்.

அதனால் ''சாமி'' பேரை சொல்லி பண்டிகை ஆக்கி விட்டால் ,கேள்வி கேட்காமல் செய்வார்கள்.

இதனால் அனைவருக்கும் தெரிய படுத்துவது யாதெனில் இந்த மாதம் தேங்காய் அதிகம் பயன் படுத்துங்கள் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவை உண்ணுங்கள் .எளிதில் சீரணிக்கும் உணவை உண்ணுங்கள்.

(இதனால் பலர் இந்த மாதம் அசைவம் தவிர்ப்பர் ).

'' சொல்றத சொல்லிட்டேன் ''

பி .கு.

என் அப்பாவிற்கு ஆடி மாதம் என்றால் சந்தோசம்.ஏன்  என்றால்  சளி காய்சசல் என்று நோயாளிகள் எண்ணிக்கை என் அண்ணாவின் மருத்துவ மனைக்கு அதிகரிக்கும்.அண்ணாவின் வருமானம் அதிகரிக்கும் என்பது அவர் கணக்கு.

மற்றவரின் துன்பத்தில் இப்படி ஒரு கணக்கா என்று அவரிடம் கேட்டு விட்டால் எனக்கு திட்டு.

இன்னொரு பி .கு 

சேலம் விட்டு சென்னை வந்து 21 வருடங்கள் ஆகி விட்டது.சேலம் பாதி மறந்து விட்டது.

2021/07/14

காரும் வரியும்

இன்று ஒரு பெண்ணை பார்த்தேன்.வறுமை.வறுமை.ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டது அந்த வறுமையின் திரு உருவம்.வேலை இல்லை என்று சொல்லி விட்டு ஒரு சிறு தொகையை கையில் கொடுத்தேன்.அந்த பணம் கிடைத்ததே என்று  மகிழ்ச்சி  இல்லை அந்த .வேலை  இல்லை என்ற வேதனைதான் . இப்படி மக்கள் உணவிற்காக தவிக்கும் வேளையில் 100 கோடி என்று சம்பளம் வாங்குவதாக சொல்லப் படும் பிரபலங்கள் செய்யும் தவறுகள் மனதை வேதனை படுத்துகிறது.

சச்சின் வாங்கிய காருக்கு வரி விலக்கு கொடுத்தது நியாயமா?

அவர் காசு வாங்காமல் விளையாட வில்லையே?.பணத்திற்காகவும் புகழுக்காகவும் விளையாடினார்.பணம் வேண்டாம் .நாட்டுக்கு நான் செய்யும் சேவை என்று சொல்லியிருந்தால் பாராட்டலாம் .வரி விலக்கு தரலாம்.

அதே போல் அவர் மகன் பயிற்சிக்கு சென்ற போது தனி வீடு எடுக்கும் அளவிற்கு வசதி இல்லை என்று சொல்லி அரசு விடுதியை 18 ரூ வாடகைக்கு அபகரித்தார்.அதை ஒரு ஏழை க்கு கொடுத்து இருக்கலாம்.

இப்போது நடிகர்கள்.தன் கடைக்கு வாடகை கட்ட முடியாது என்று ஒருவர்.

ஏழைகள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கு வாடகை தரவில்லை .

இப்போது இவர்.

அவர் வீட்டையும் கார்களையும் காட்டுகிறார்கள்.மலைப்பாக இருக்கிறது.150 கோடியில் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.அதில் 10ல் ஒரு பங்கு கூட இல்லை இந்த வரி.

இவர் இந்த வரியை கட்டினால் பல பள்ளிகள் ,மருத்துவ மனைகள் ,சாலைகள் என்று எத்தனையோ செய்யலாம்.

1986ல் பணியில் சேர்ந்தேன்.2 வருடம் வரி கட்டவில்லை.NSC BONDS வாங்கினால் வரி கட்ட வேண்டாம் என்று வரி கட்ட விடாமல் செய்தார்கள்.......3வது  வருடம் சிங்கம் சிலிர்த்து கொண்டது.

வரி கட்டுவேன் என்று (ஒற்றை காலில் அல்ல )  2 காலிலும் நின்றேன்.அன்றிலிருந்து இன்று வரை தவறாமல் வரி கட்டுகிறேன்.

அதனினும் கொடுமை ...என்னுடன் பணி புரிந்தவர்களை மிரட்டி, உருட்டி,கெஞ்சி , கொஞ்சி எல்லோரையும் வரி கட்ட வைத்தேன்.

அப்போதெல்லாம் சம்பளம் மிகவும் கம்மி .ஆனாலும் சந்தோஷமாக வரி கட்டினோம்.5கோடி கார்,150 கோடி வீடு என்றெல்லாம் பார்க்கும் போது  ??????????.

இத்தனை கேள்விகள் கேட்ட நீதிபதிக்கு வணக்கங்கள்.

2021/07/12

poster, teaser

 ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் speaker கட்டி துண்டு சீட்டு கொடுத்து என்ன சினிமா என்று தெரிய படுத்துவார்கள்.

பெட்டி வந்துடுச்சு என்று உற்சாகமாக படம் பார்த்த காலம் போய் ,

டிஜிட்டல் vfx  என்று ஏதோ தோ வந்து விட்டது.

ஆனால் இந்த firstlook ,டீஸர்,போஸ்டர் ,மோஷன் போஸ்டர் என்ற அலப்பறைகள் எல்லை மீறி போகிறது.

update என்ற வார்த்தை உலகத்தையே ஆட்டி படைக்கிறது.

கொண்டாட்டம் ,வைரல் ,ட்ரெண்டிங் என்று 10 மில்லியன் பார்வை ,உலக சாதனை என்று இந்த வியாதி அதிசயமாக இருக்கிறது.

இப்படி ஒரு teaser வந்து விட்டதால் தங்க விலை குறைந்து விடும்.

கொரோனா ஓடியே போய்விடும்.மக்கள் அனைவருக்கும் எல்லா  கஷ்டங்களும் தீர்ந்து சொர்க்க வாழ்க்கை வாழ போகிறார்கள்.

இந்த பைத்தியக்கார வியாதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

2021/06/21

Sivaji

 பல வருடங்களாக சிவாஜி கணேசன் என்ற சிறந்த நடிகரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.அவரை பார்த்தாலே ஒரு கோபம், ஒரு அருவெறுப்பு வரும்.

என்ன காரணம் என்று புரியவே இல்லை.

அப்புறம் ஒரு நாள் திடீரென அறிவுக் கண் (அப்படி எதுவும் எனக்கு இருக்கிறதா என்ன) திறந்தது.சிறு வயதில் காந்தி நேரு போன்ற பலரையும் ஆராதித்த காரணத்தால் smoking ,drinking என்பதெல்லாம் மிக மிக கெட்டவர்கள்தான் செய்வார்கள் என்று மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

எனக்கு விவரம் தெரிந்து நான் சினிமா பார்த்த போது  சிவாஜி எப்போதும் ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் மது டம்பளருமாகவே வருவார்.புதிய பறவை, பாசமலர் , வசந்த மாளிகை போன்ற படங்களை சொல்லலாம்.

இப்போது பார்க்கும் போது இவர் மேல் இத்தனை நாட்களாக கோப பட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது

2021/06/03

3RD JUNE 2005

 JUNE 3 2005
மீண்டும் மீண்டும் அதே புலம்பல்
//...//இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.அப்போது எழுதியது..//..//
// //1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)// //

இது இன்று 03/06/2021
தம்பி செந்திலின் படிப்பு முடியும் வரைதான் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டும்.
அப்புறம் என்னுடன் இருக்க பெங்களூரு வந்து விட வேண்டும் என்று கார்த்தி அன்பு கட்டளை இட்டதால் பணி  மாறுதலுக்கு விண்ணப்பித்து விட்டு (கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் long leave ) என்று சொல்லி விட்டு வேளச்சேரியில்  இருந்து வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு பெங்களூரு கிளம்பி விட்டேன்.
இனி வாழ்நாள் முழுக்க பெங்களூருதான் என்பது திட்டம்.
எனக்கு பெங்களூரு பிடித்த நகரம் அல்ல 
சென்னை பிடிக்காத ஊரும் அல்ல .
மகன் இருக்கும் இடம் என் சொர்க்கபுரி. 
அவனுடன் சேர்ந்து வாழ்வது தலையாய இன்பம்.
அவ்வளவுதான்.
நான்+கார்த்தி+செந்தில் ...போதும்.
வேறு என்ன வேண்டும் ஒரு தாய்க்கு .
விதி இவ்வளவு கோரமாக விளையாடும் என்று தெரியவில்லை.
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா..கார்த்திக் அம்மா

2021/05/24

THANK YOU C.M

 நன்றி.நன்றி.

முதல்வருக்கு நன்றி.

2020ல் கோவிட பரவ தொடங்கிய போது நான் தனியாக புலம்பி கொண்டிருந்தேன்.

எல்லா   காய்கடைகளையும்   மூடுங்கள்.

ஒரு வண்டியில் கொண்டு வந்து ஒரு குடியிருப்பில் நிறுத்துங்கள்.அந்த வீடுகளில் உள்ளவர்கள் அவர்கள் வீட்டு எண் படி வந்து வாங்கி செல்லட்டும்.

உதாரணமாக முதல் தளம்.எண் 1.என்று சத்தம் கொடுத்தவுடன் அந்த வீட்டு நபர் வந்து காய் வாங்கி செல்லட்டும்.

அடுத்து 2ம் தளம்.

இப்படி வாங்கும் போது கொரோனா பரவலுக்கு வாய்ப்பே இல்லை.

அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது.

....ஆனால் 

இப்போதைய முதல்வர் அதை செயல் படுத்தி உள்ளார்.

நல்ல செயல்.

நன்றி.

நன்றி 

முதல்வருக்கு நன்றி

2021/05/08

மருத்துவ மனை கொடுமை

 மருத்துவ மனை கொடுமை .கொடுமையிலும் கொடுமை என்பது மருத்துவ மனையில் தன் உயிருக்கு உயிரான ஒருவரை சேர்த்து விட்டு அவர் படும் கொடுமைகளை பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் ...

அவர்கள் முன்னால்  அழவும் முடியாமல் நிற்கும் நிலை இருக்கிறதே.

என்ன வேதனை.

நான் பட்டேனே 

கணவரை அப்போல்லோவில் வைத்துக் கொண்டு நான் பட்ட வேதனை.அவர் இறந்து விடுவார் என்று அறிவு சொல்லியும் 

அன்பு அதை ஏற்க மறுத்து 

நாம்தான் இவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம் 

கோவில் கட்டி இருக்கிறோம் 

ஏழை மாணவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம் 

உறவு அனைத்துக்கும் கடமையை அன்பாக செய்திருக்கிறோம் 

அதனால் நமக்கு கெட்டது நடக்கவே நடக்காது என்று நம்பி 

நம்பி 

அவரை உயிரற்ற உடலாக ஆம்புலன்சில் கொண்டு வந்த கொடுமை 

........

இப்போது கோவிட் பிரசினையில் மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போது மனம் பரிதவிக்கிறது.

2021/05/01

kovid

 என்னடா இந்த உலகத்துக்கு வந்த சோதனை?

மரணம் அடைபவர்களின் உறவினர்கள் படும் பாடுதான் கொடுமையிலும் கொடுமை.

இறப்பிற்கு அழக்  கூட முடியாமல் அவர்களை நல்லடக்கம் செய்ய மக்கள் படும் பாடு ...அப்பப்பா ....

இது என்ன வேதனை.

வர வர சமையல் செய்ய பிடிக்கவில்லை.சாப்பிட பிடிக்கவில்லை.

ஏற்கனவே அப்படி இப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது

.யாருக்கோ வரும் துன்பம்தானே என்று நினைக்க முடியவில்லை. 

மனது அல்லாடுகிறது.

இந்த கொடுமை விரைவில் முடியட்டும்.

2021/04/21

 இது புது பதிவு அல்ல .ஏப்ரல் 2020 யில் எழுதியது .மறுபடியும் இதை பற்றியே எழுதுவேன் என்று நினைக்கவே இல்லை ,//

 மஹாராஷ்டிராவில படித்துக் கொண்டிருந்த ஒரு 22 வயது மாணவன் அங்கிருந்து நடந்தே வந்திருக்கிறான் .350 கிலோ மீட்டர் ...
சாத்தியமா ?
ஏன் நடக்க வேண்டும் ?
அந்தந்த மாநில முதல்வர்கள் சொல்லி இருக்கலாம் .எல்லோரும் அவரவர் இடத்திலேயே இருங்கள்.
உங்களுக்கு நாங்கள் எல்லா உதவிகளையும்  செய்கிறோம்.
உணவும்  இருக்கும் இடமும் இருந்தால் போதும் .
உணவு கொடுக்க வேண்டியது அரசு.
இதை உடனடியாக செய்து இருந்தால் இத்தனை பேர் புலம் ,இடம் விட்டு இடம் போயிருக்க மாட்டார்கள்.
காசு கொடுங்க என்று மட்டும்தான் கேட்க வேண்டுமா .
மக்களும் கொஞ்சம் அறிவு பூர்வமாக செயல் பட வேண்டும்.
உணர்வு பூர்வமாகவே நடப்பதே நம் பழக்கம்.
..... 9 மணிக்கு செய்தி ....emergency declare ....என்ற பயத்தில் பலர் உறைந்து போயிருக்க ....

no comments ....

இப்போது மறுபடியும் அதே கதை.

எல்லோரும் சொந்த ஊர் திரும்புகிறார்கள் .மீண்டும் நடை.

தன் உரையில் கொரோனாவை ஜெயிப்போம் என்றுதான் சூளுரைக்கிறார் தலைவர்.

இப்போதும் உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்ற உத்தரவாதம் இல்லை.

நிறுவனங்கள் தன்னை நம்பி வந்த தொழிலாளர்களை காப்பாற்ற மனமில்லாமல்   கையை விரிக்க ....மீண்டும் ஊர்  நோக்கி நடக்கிறார்கள் .

குறைந்த பட்சம் அவர்களுக்கு ஒரு ரயில் ஏற்பாடு செய்யலாம் .

என் மாணவன் ஒருவன் போன லாக் டௌனிலேயே அத்தனை தொழிலாளர்களையும் கம்பெனியிலேயே வைத்து  சோறு போட்டு நல்லது செய்திருக்கிறான்.

அவன் சொன்னான்.''உங்களிடம் படித்த நாங்கள் எப்படி இருப்போம் ...என்றாலும் இதில் ஒரு சுயநலமும் இருக்கிறது.சகஜ நிலை திரும்பும் போது இவர்கள் திரும்பி வராமல் போனால் புதியவர்களை வேலைக்கு எடுத்து பயிற்சி கொடுத்து ....என்ற பிரசினைகள் ...''

என்று சொன்ன போது  மனம் நிறைந்தது.

ஒரு நண்பியிடம் போன வருடம் பேசிய போது சொன்னாள் .''இவர்கள் எல்லாம் சாகட்டும் .இவர்களுக்கு சோறு போடுவதற்கு அரசிடம் காசு இல்லை.''

அரசின் ஒரு ஆண்டு வருமானம் என்ன .இது போன்ற பேரிடற்கு ஒதுக்கப் படும் தொகை பற்றி எல்லாம் அவளிடம் பேசவில்லை .செத்து ஒழி என்பவளிடம் என்ன பேச முடியும்?

அதுவும் இந்த பி * பி ஆட்களிடம் பேசவே முடியாது.

ITS FOOLISH TO ARGUE WITH FOOLS என்று சொல்வார்கள்.
 

2021/04/07

தேர்தல் அலப்பறைகள்

 எல்லோரும் ஜனநாயக கடமை ஆற்றி யாகி விட்டிர்களா .

நான் காஃபி மட்டும்தான் ஆற்றினேன்.

 வோட் போட்டிர்களா என்று சொல்லலாம்.என்ன ஜனநாயக கடமை?

வர வர கடு கடு தமிழ் .சனாதன தர்மம்..என்பது போல் பல தமிழ் சொற்கள்..ஆக தமிழ் நாட்டில் தமிழும் தெரியவில்லை.ஆங்கிலமும் தெரியவில்லை .இதுல இந்தி படி என்ற காமெடி வேறு.

ஒரு புலி இதோ பாரு நான் வர்றேன் பாரு என்று கேட்டை திறந்த நேரத்தில் இருந்து கேமரா பக்காவா செட் செய்து வந்து சீறி விட்டு மேலே இருந்து வந்த காற்றில்  அசைந்த இலையை பார்த்தவுடன் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து அங்க பிரதட்சணம் செய்து அப்படி எல்லாம்  இல்லங்கன்னா என்று வாலை  சுருட்டி கக்கத்தில் வச்சுட்டு போய் ஒளிஞ்சுக்கிச்சு .

அட நாட்ல நடிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா .இவர் வந்தார்.அவர் வந்தார்.என்று நாள் முழுக்க அந்த முகங்களையே பார்க்க வைத்தார்கள்.

யாரோ '' வேசி ஊடகங்கள் '' என்று சொன்னது நினைவிற்கு வந்து போனது.

....கொரோனா காலத்தில்  குழந்தைகளை வெளியே கொண்டு வராதீர்கள் என்று உலகமே அலறிக்  கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பாச மிகு தாத்தா தன் பேரனுடன் வந்து ''ஜனநாயக கடமை ''ஆற்றி '' விட்டு சென்றார்.

இவன்தான் பணம் கொடுத்தான் என்று A சொல்ல இல்லை இல்லை இவன்தான் கொடுத்தான் B சொல்லி உத்தமர்கள் ஆகிக் கொண்டிருந்தார்கள்.

அம்மியில் அரைத்து,டான்ஸ் ஆடி,  ''பூ வைத்து விட்டு ''  துணி துவைத்து ETC  நாடகங்களை நடத்தி மக்களை  வாழ வைக்கவே இதையெல்லாம்  செய்கிறோம் என்று டன் டன்னாக பூ சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆஹா இந்த தொகுதியில் குப்பை கூட அள்ளவில்லை .10 வருடமாக இந்த தொகுதி M .L .A என்ன செய்தார் என்று  எம் .எல்.ஏ  வை பக்கத்தில் வைத்துக் கொண்டே முழங்கினார் ஒரு அம்மணி.

இன்னொரு தேவதை ஜி எல்லா பேய்களுக்கும் சேவை செய்திருக்கிறார் என்று மக்களை எல்லாம் பேய்களாக்கி விட்டு சென்றார்.

ஒரு வழியாக எல்லா DRAMAA வும் முடிந்து விட்டது.

 காமெடி போதும்.''வேதனையான விஷயம் ''

கழுதை மேல் EVM  எல்லாம் ஏற்றி கொண்டு போகும் காட்சியை பார்த்த போது மனம் மிக மிக வேதனை பட்டது .

சுதந்திரம் வாங்கி 73 வருடங்கள் ஆகி விட்டது.இன்னும் அந்த மக்களுக்கு ஒரு சாலை வசதி கூட செய்து தரவில்லை என்பது எவ்வளவு அவலமான அவமானமான விஷயம்.

8 வழி சாலை, 8000 கோடி விமானம் , 3000 கோடி சிலை .....

2024ல் எல்லோருக்கும் rest room என்று சொல்லும் போது ஒரே ஒரு நொடி மனம் இடித்துரைக்காதா .

போதும் புலம்பல்.

BYE

 https://youtu.be/lGbx3May-DQ







2021/03/18

AMK

 எ .மு .கே :

என்னங்க .ங்கே என்று முழிக்கிறிங்களா :

நிறைய நேரம் செய்தி பார்ப்பதால் வந்த வினை.

ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கறாங்க .

நான்தான் முதல்வர் .

நீதான் துணை முதல்வர் .என்று இப்போதே பத்திர பதிவு அலுவலகத்தில் தமிழ் நாட்டை தங்கள் பெயருக்கு பதிவு செய்ய நேரம் கேட்டு விண்ணப்பித்து விட்டார்களாம்.

அட நானும் ஒரிஜினல் ,ஒரிஜினல் தமிழச்சிதானே .நான் மட்டும் சும்மா இருப்பேனா .

நானும் ஒரு கட்சி ஆரம்பித்து விட்டேன்.

எ .மு.க.

என் முன்னேற்ற கட்சி .

ஆமாங்க .என்னை மட்டுமே முன்னேற்றிக் கொள்ளும் கட்சி .

நானே 234 தொகுதிகளிலும் வேட்பாளர்.

நானே முதல்வர்.நானே துணை முதல்வர்.எல்லாம் நானே.

விருப்பம் இருப்பவர்கள் வோட் பதிவு செய்யலாம்.

பண பட்டுவாடா விற்கு ஆளுக்கொரு நாமக் கட்டி கொடுக்கப் படும்.

இலவசம் எல்லாம் இல்லைங்க .காசுக்குத்தான்.

மறக்காம வோட் போடுங்க .

கார்த்திக் அம்மா

2021/03/14

இலவசம்+ குடும்ப தலைவன்

   ஆரம்பித்ததோ எந்த அரசு ஆரம்பித்ததோ இந்த இலவசம் என்ற ஒரு தீராத ஒரு  நோய் .

 எல்லாம் இலவசம்.குழந்தை கருவில் உருவான நாளில்  இருந்து சத்துணவு ,இலவச பிரசவம் ,பால்,தொட்டில் என்று ஆரம்பித்து படிப்பு முடியும் வரை இலவசம்.

பிரசினை என்ன என்பதை புரிந்து கொள்ளவில்லை.ஆண்மகன் தன பெருமையை,குடும்ப தலைவன் ,கணவன் ,தந்தை என்ற அத்தனை பெருமைகளில் இருந்தும் ,பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்க படுகிறான்.

'' அப்பா,எனக்கு பேனா வாங்கி தருகிறாயா '' என்ற மகளின் கொஞ்சலான வேண்டுகோள் இல்லை.

அப்பா எனக்கு சைக்கிள் வாங்கி தருகிறாய் என்று மகனிடம் இருந்து அன்பு கட்டளை இல்லை.

மாறாக ''நீ யார் ?உன்னிடம் நான் என்ன கேட்க வேண்டும் '' என்ற விட்டேத்தி குணம் வளர்கிறது.

மனக் குமுறல் ஆரம்பிக்கிறது.

it  leads to depression .

குடும்பம் பின்னி பிருகும் பந்தத்தை இழக்கிறது.

அப்படியானால் ஏழை மக்கள் கஷ்ட பட வேண்டுமா .இல்லை ...

நிசசயமாக இல்லை.

அவர்களை ஏழைகளாகவே வைத்திருக்காதீர்கள் .

அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துங்கள்.

வேலை கொடுங்கள்.

சம்பளம் அதிகம் கொடுங்கள்.

அவர்களுக்கு வேண்டியதை அவர்களே வாங்கிக் கொள்ளும் வசதியை செய்து தாருங்கள்.

தொழிற்சாலை கட்டுங்கள்.

விவசாயத்தை விரிவு படுத்துங்கள்.

இலவசம் கொடுத்து அவர்களை அவமானப் படுத்துவதை நிறுத்துங்கள்.

அது எந்த அரசாக இருந்தாலும் சரிதான்.


2021/03/11

Bits

 Living is the art of getting used to what we did not expect....


What cannot be cured must be endured....

.........


ஆறடி உயரத்தில் அழகாய் இருந்தவனை அரை அடி ஜாடியில் அஸ்தியாய் அடக்கிய பாவி நான் ....

பாவி நான்.....

பாவி நான் .

2021/02/26

கல்வி

  கல்வி .பாட குறைப்பு .

 Disclaimer : நான் எந்த கட்சியும் சேராதவள் .யார் சார்பாகவும் பேசவில்லை.

ஒரு ஆசிரியை என்ற உணர்வு ரத்தத்தில் ஊறி விட்டதால் ..இந்த பதிவு.

தற்போது இருக்கும் பாட திட்டம் மிகவும் எளிதானது..

அதிலேயே பாதி பாடம்தான் நடத்த படுகிறது.அப்படியிருக்க எந்த போட்டி தேர்விற்கும் மாணவனால் தயாராக முடிவதில்லை..

இன்னும் அதிகமான பாடங்கள் சேர்க்க பட வேண்டும்.

ஒரு நல்ல மாணவன் இந்த பாட திட்டத்தை 3 just 3 மாதங்களில் படித்து முடித்து விடுவான்.

ஒரு ஆசிரியையாக (ஆங்கிலம் ...என்னடா எப்போது பார்த்தாலும் ஆங்கில ஆசிரியை என்றே சொல்கிறேன் என்றால் ...தமிழ் நாடு அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஒரு subject மட்டுமே நடத்துவார்.

கெமிஸ்ட்ரி என்றால் அது மட்டுமே.

Math என்றால் கணித பாடம் மட்டுமே .

 மாணவர்கள் எங்கள் bio teacher ,எகனாமிக்ஸ் tr என்றே சொல்வார்கள்.)

நான் என் மாணவர்களிடம் சொல்வேன் .தேர்விற்கு முதல் நாள் மட்டுமே ஆங்கிலம் படி.வகுப்பை நன்றாக  கவனி .80% மார்க் வாங்கலாம்.

தகுதி மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் ,தமிழ் சேர்க்க படுவதில்லை.அதனால் அதில் 80% மார்க் போதும் .

அதற்கான பாடங்களுக்கு  3மாதம்  போதும்.Grammar முக்கியம் .spoken English ம் சிலபஸ்சில் உண்டு .அதை மட்டும் அவன் நன்றாக படிக்க வேண்டும்.மற்ற படி lessons ,poems மனதை பக்குவப்படுத்தும் கருவியே .அந்த summary மனப் பாடம் செய்வதையே முழு நேர கடமையாக செய்ய வைப்பார்கள்.

when he goes for competitive exams he fails miserably .

SO PLEASE INCREASE SYLLABUS .பாடங்களை கடினமாக்குங்கள் .ஓடும் குதிரையை கட்டி போடாமல் ஓட விடுங்கள்.

2021/02/15

டி .வி .உளறல்கள்

 யார் வேண்டுமானாலும் எது  வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகி விட்டது.

படித்தவர்கள், படிக்காதவர்கள்,என்று கட்சி பேதமின்றி உளறுகிறார்கள் .

அதுவும் அந்த 4 பேர் பேசுகிறார்களே (கத்துகிறார்கள்) 4dogs குரைத்தால் எப்படியோ , அப்படியே இருக்கிறது.

அபத்தமான பேச்சு .ஆரவாரமான பேச்சு.கர்வமான பேச்சு.

ஒரு அம்மா சொல்கிறார் .''எங்கள் ஆட்சியில் மார்கழி மாதம் கூட மழை பெய்கிறது''

கொடுமையே 

மார்கழியில் மழை பெய்து அத்தனை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணானது தெரியவில்லை.

இன்று வெங்காயம் இந்த விலைக்கு உயர்ந்து வர காரணம் இந்த மார்கழி மாத மழைதான்.

.....அடுத்த ஒருத்தர் பெங்களூரிலிருந்து சேலம் வழியாகத்தானே சென்னை செல்ல வேண்டும் ..அப்போது பார்த்து கொள்கிறோம் ....என்று சபதம் செய்கிறார்.

சென்னை செல்ல சேலம் எதற்கு?

தெரியவில்லை என்றாலும் இவ்வளவு தைரியமாக இவர்களால் எப்படி பேச முடிகிறது?

முழுவதும் எழுதினால் 100 பக்கம் எழுத வேண்டும்.

தலை விதி.

2021/02/12

காதல்னா இது காதல்

நீலகிரியில் சங்கர் என்ற காட்டு யானை 3 பேரை கொன்று விட்டது.( ஒரு சேனலில் கொலை செய்தது )என்று போட்டார்கள்.

அந்த யானையை வன  துறையினர் விரட்ட போக அது கேரளா எல்லைக்குள் சென்று விட்டான் சங்கர். சேனலின் பில்ட் அப் .

அந்த சங்கர் என்ற கொலைகாரன் மறுபடியும் நீலகிரிக்கு வந்து விட்டான்.

எப்படி தெரியுமா ?

தன காதலிகள் இருவருடன்.

காதலிகள் (சங்கர் என்று பெயர் வைத்தவர்கள் காதலிகளுக்கு  பெயர் வைக்கவில்லை.பெண் என்றால் அவ்வளவு கேவலமா ).

பொறுங்கள் .இனிமேல் வைப்பார்கள்.

சரி .இப்போது என்ன நடக்கிறது?

காதலிகள் சங்கரின் இரு பக்கமும் அரணாக நின்று கொண்டு ஒரு நிமிடம் கூட நகர மாட்டேன் என்கிறார்களாம்.

எப்படி மயக்க ஊசி போடுவது ,எப்படி சங்கரை பிடிப்பது என்று வன  துறை மண் டையை உடைத்து கொள்கிறதாம்.

இதெல்லாம் நான் சொல்லலிங்கோ .சேனல் சொன்னதுங்கோ .

கொடுத்து வைத்த சங்கர்.

ரூம் போட்டு யோசிப்பாங்களோ 

என்று சொல்வது போல் சங்கரும் ரூம் போட்டு யோசித்திருப்பானோ ????????

அல்லது I .T WING ஏதாவது இருக்குமோ ?

புலனாய்வில் இதெல்லாம் தெரிய வரலாம்.

2021/02/08

 இது கார்த்திக் 2005ல் போஸ்ட் செய்தது .

2005/02/14

The Art of Programming

'A computer is like a violin. You can imagine a novice trying first a phonograph and then a violin. The latter, he says, sounds terrible. That is the argument we have heard from our humanists and most of our computer scientists. Computer programs are good, they say, for particular purposes, but they aren't flexible. Neither is a violin, or a typewriter, until you learn how to use it.'

- Marvin Minsky, 'Why Programming Is a Good Medium for Expressing Poorly-Understood and Sloppily-Formulated Ideas'

2021/02/07

நீயா நானா

இந்த வாரம் நீயா நானா நன்றாக சென்றது.

தலை மகன்,இரண்டாவது மகன் .

தாய்க்கு தலை மகன் மேல்தான் பாசம் என்று தம்பிகள் பொங்கி விட்டனர்.

சொல்லாமல் விட பட்ட சில கருத்துகள் :

விருந்தினர் துரை  சொன்னது உண்மை :முதல் பைக் ,முதல் கார் என்று அந்த முதல் என்பது ஒரு special .

அதுதான்.

அதுதான்.

முதன் முதலில் அம்மா என்ற சொல் .அதற்கான மகன்.

இரண்டாவது பெரிய காரணம்.இரண்டாவது குழந்தை பிறக்கும் போது முதல் மகன் L .K .G படிப்பான்.அவன் வீட்டு பாடம் ,தேர்வு என்று அவன் மேல் அதிக கவனமும் ,அதிக நேரமும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது.அப்போது இவன் சின்னவன்தானே ,இன்னும் பள்ளியில் சேரவில்லை ,விளையாடட்டும் என்று விடுவது இயல்பு .

அடுத்து,

முதல் குழந்தை பிறப்பின் போது தாய்க்கு பல விஷயங்கள் தெரியாது.

புரியாது .

குழந்தை பசிக்கு அழுகிறானா ,வலிக்கு அழுகிறானா என்ற புரிதல் இருக்காது.

அதுவே இரண்டாவது குழந்தையின் போது தாய்க்கு அனுபவம், அது தந்த தைரியம் அதிகம்,

அதனால் இரண்டாவது குழந்தை மேல் அல்டசியமாக இருப்பது போல் தோன்றலாம்.

அம்மா அண்ணனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கும் அந்த ஒரு மணி நேரம் சின்னவன் தனியே விளையாடிக் கொண்டிருப்பான்.அதனால் அவனுக்கு ஒரு சுய தைரியம் வருகிறது.

பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாலும் இந்தமகன் மீதும் ஒரு கண் இருந்து கொண்டேதான் இருக்கும்.

ஆனால் சில அம்மாக்கள் சொன்னது போல் பெரிய மகனுக்கு அதிக மட்டன் சின்னவனுக்கு கொஞ்சம்தான் என்பதெல்லாம் மிக மிக தவறு.

என் வீட்டில் பிள்ளையார்(கார்த்தி) பாவம்.

முருகன்தான்(வேறு யார்? செந்தில்தான் . "முடிந்தால் எல்லோரும் என்னை வந்து பாருங்கள் ரகம்.)

ஒரு மூத்த மகன் அம்மாவை நினைத்தால் கல்யாணமே வேண்டாம் என்று தோன்றுகிறது.என்கிறார். அம்மாவையும் மனைவியையும் எப்படி சமாளிப்பேன் என்று குழம்புகிறார்.கார்த்தி கூட அப்படி யோ ...

அடித்து ஆடும் தம்பிகள்.

கிழவி என்ன ரொம்ப நடிக்கிற எனும் தம்பிகள் .அம்மா என்று சத்தமாக சொன்னால் கூட அம்மா வருத்தப் படுவார்களோ என்று நினைக்கும் அண்ணன்கள் .

காந்தாரிக்கு 100 மகன்கள்.99 மகன்கள் இறந்த போதும் அழும் அந்த தாய் துரியோதனன் இறப்பின் போது முற்றிலுமாக உடைந்து போகிறாள்.

பாசம் அதிகம் ,குறைவு என்ற கேள்வியே தப்பு.

முதல் மகன் மீது ஒரு soft corner .ஒரு 10%.

எப்படி இருந்தாலும் எல்லா குழந்தைகள் மீதும் தாய்க்கு ஒரே அளவு பாசம்தான் இருக்கும்.

இருக்க வேண்டும்.

'

2021/02/05

டெல்லியும் ஆணியும்

its 1988.என்னடா 

டெல்லி 

ஆணி 

ஹா ,ஹா 

நான் விவசாயி போராட்டம் பத்தி ஏதோ சொல்வேன்னு பார்த்திங்களா ....

1998 .கார்த்தியின் கௌன்சலிங் .முடிந்து இரவு மேட்டூருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம் .சிறிது நேரம் காரை ஓட்டிய என் கணவர் தூக்கம் வர ,கார்த்தியிடம் ஓட்ட கொடுத்து விட்டு கண் அசர ,நல்ல சாலை,டிராஃபிக் இல்லை ,கார் ஓட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.

அப்போது எங்களுக்கே இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியாது.

அந்த இரவு நேரத்தில் போலீஸ் வண்டி வாகன சோதனை செய்வார்கள் என்று.

நம் வண்டியை போலீஸ் கை காட்டி நிறுத்த சொல்ல ,

இதை எதிர்பார்க்காத கார்த்தி வண்டியை நிறுத்த வேண்டும் என்று தெரியாமல் தொடர்ந்து ஓட்ட ,

போலீஸ் அடுத்த செக்கிங் போலீஸ் க்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.அவர்கள் இந்த முள் கட்டையை சாலையின் குறுக்கே போட்டு விட்டார்கள்.

just one second .கார் முள்ளின் மேல் ஏறி டயர் கிழிந்து என ஏகப் பட்ட விளைவுகள் நடந்திருக்கும்.

கார்த்தி காரை டக்கென நிறுத்தி விட,நானும் என் கணவரும் இறங்கி போலீசிடம் பேச ....HIGHLIGHT ...

கார்த்தி ட்ரைவர் ஸீட்டில்  இருந்து பேசஞ்சர் ஸீட்டிற்கு நகர்ந்து விட,

..போலீஸ் பாவம்... என் கணவர்தான் வண்டி ஓட்டினார் என்று முழுமையாக நம்பி 

''sir ,நீங்க படிச்சவங்க ,பெரிய ஆபிஸர் ,நீங்களே இப்படி ஓட்டலாமா ''என்று கேட்டு முடிப்பதற்குள் ..

நான் காச் மூச் என்று 

''அது எப்படி எங்க வண்டிய நீங்க நிறுத்த போச்சு ''என்று பயங்கர அதிகார தோரணையில் மிரட்ட ,

குழம்பிய போலீஸ் ,

''ஸாரி மேடம் ''என்று 

''எங்கோ எக்கு தப்பான பெரிய இடத்தில் பிரச்சினை செய்து விட்டோமா ''

என்று ஆளை விட்டால் போதும் சாமி ...என்று எங்களை அனுப்பி வைத்தனர்.

என் அறியாத தனம் ,

முட்டாள்தனம் 

இப்படித்தானே எங்களை காப்பாற்றியது.

.....உனக்கு அறிவே இல்லையா ,போலீசிடம் இப்படி கத்துவாயா ....''

என்று என் கணவரிடம் செம டோஸ் வாங்கியது சொல்லக் கூடாத கதை.

//  //

ஆ கத சொன்னாலும் பொருந்த சொல்லணும் .அது எப்படி அவர் பெரிய ஆபிஸர் என்று போலீசுக்கு தெரியும்??????

நாம பொய் கதையெல்லாம் சொல்றதில்லிங்கோ ...

வண்டியில MTPS  என்று தெர்மல் அடையாள லோகோ கொடுக்கப் பட்டு அதை வண்டியில் ஒட்டி இருப்போம்.

அதனால் இந்த வண்டி யாரும் நிறுத்த மாட்டார்கள்.

மேட்டூர் அணைக்கு வரும் கவர்னரின் கார் கூட செக் செய்யப் படும்.

அனால் இந்த கார் வருவதற்குள் அனைத்து GATE கதவுகளும் திறக்கும்.

அதுவும் ஒரு காலம்.// //

கார்த்திக்கிற்கு அப்போது என்ன வயது ?லைசென்ஸ் ?

தப்புதான்.கார்த்தி 17 வயது .ஆனால் 10 வயதில் இருந்து கார் பைக் இரண்டும் ஓட்டுவார்கள் அண்ணனும் தம்பியும் (கார்த்தியும்  செந்திலும்.)ஒரே விபத்து கூட இல்லை.முதலும் கடைசியுமாக 2005 .

விபத்து.

என் உயிரை பறித்த விபத்து.

2021/02/01

சின்ன சின்ன

 தின ராசி பலனில் சொன்னார்கள்.

"இன்று வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள் " "

.....காய் கடைக்கு போய் காய் வாங்கி பில் பார்த்தப்புறம்தான் புரிந்தது..

..ஆஹா ஜோதிடம் உண்மைதான் என்று.

2021/01/09

என் பெண் friend

 my  pen friend .

it should be 1970 -1973.

உங்களில் பாதி பேருடைய அம்மா கூட பிறந்திருக்க மாட்டார்கள் .

அப்போது நான் 7th அல்லது 8th படித்து கொண்டிருந்தேன்..எப்படி என்று தெரியாது .எனக்கு அமெரிக்காவில் ஒரு pen friend தொடர்பானார் .might be a govt scheme .otherwise how a little girl from a  remote village could get such a connection ?

என் அம்மாதான் என் பள்ளி தலைமை ஆசிரியர் .என் அம்மா பற்றி சொல்லவே வேண்டாம்.பல்கலை வித்தகர்.பாடகி,ஓவியர்,மேடை பேச்சாளர் ,விவசாயி,தையல்,நீச்சல் என எதையும் விட்டு வைக்காத திறமைசாலி .

இப்படி இருக்கும்போது தாய் போல மகள் நானும் அப்படியே.

இருவருக்கும் இந்த சான்ஸ் ஒரு வரம்.

நாங்கள் எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பிச்சு உதற 15 நாட்களுக்கு ஒரு கடிதம் .saana (sona )jacopsan ...சரியான பெயரா?...ஸ்பெல்லிங் நினைவில்லை.அங்கிருந்து எனக்கு பரிசு கிப்ட் வர ...

நானும் அம்மாவும் இருந்த கொஞ்ச நஞ்ச மூளையை குழப்பி பட்டு துணி வாங்கி அனுப்ப ..பாவம் அந்த பெண் ...எங்கள் பரிசு பொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாரோ?????????

imagine its 50 years back .

...ஆனால் பாருங்கள் ..காலம் உருண்டோட ..வாழ்க்கை பல விதத்திலும் மாற ...

அந்த நண்பியின் முகம், அந்த பரிசு பொருட்கள் எல்லாம் மறக்கவே இல்லை.

மறுபடியும் அவரை தொடர்பு கொள்ளவோ பேசவோ முடியுமா?

2021/01/06

Karthik's varalaaru.com

இது கார்த்தியின் வரலாறு.காம் .கார்த்தி ஒரு வரலாற்று history பைத்தியம்.பொன்னியின் செல்வன் படம் எடுக்க வேண்டும் என்ற வெறி .கல்கி+சாண்டில்யன் நாவல்கள் அனைத்தும் தலைகீழ் மனப்பாடம்.படம் எடுக்க ஸ்கிரிப்ட் கூட எழுதிக் கொண்டிருந்தான் .

''மலரும் முன்னே பறித்தானே .

கீழே இருப்பது போல் எத்தனையோ வரலாறு பதிவுகள் இருக்கின்றன.எல்லாம் 2002ல் எழுதியது.18 வருடங்கள் ஓடி விட்டன.டெக்னாலஜி மிக வளர்ந்து விட்டது.அப்போது அவனுக்கு இருந்த சாதாரண கேமராக்கள் கொண்டு அவன் எடுத்த சரித்திர இட போட்டோக்கள் 1000. அவை அனைத்தையும் கொண்டு வர முயற்சசிக்கிறேண் .நிறைய கற்று கொள்ள வேண்டும்.

bject    Body    From: (Name)    From: (Address)    From: (Type)    To: (Name)    To: (Address)    To: (Type)    CC: (Name)    CC: (Address)    CC: (Type)    BCC: (Name)    BCC: (Address)    BCC: (Type)    Billing Information    Categories    Importance    Mileage    Sensitivity

[ps-varalaaru] Count me in    "Anaivarukkum Vanakkam,

It is so heartening to see such an active bunch of PS lovers.

First lemme introduce myself. I am S.Karthikeyan. Born in Mettur Dam, Salem
Dt, Studied in Chennai, working in Bangalore.

A few years back, while in college, tried to create a website for Tamil
Historical Novels http://www.geocities.com/ponniyinselvaa. But left it half
way, since I found my knowledge of history was insufficient. Dont curse me
after seeing the site. Athu oru aarva kolaaril uruvaana muyarchi. Full of
blunders. Along with my roommate undertook a similar effort for an exclusive
site for PS. (Its link is available in our links sections as 'By
Balasubramanian Jeyaraman')

Also check out my photos from Hampi http://bidjanagar.topcities.com (If you
have problem accessing the site try after one day. Coz there is a download
limit on the site). As you can see I am fascinated and mesmerized by
anything related to our history.

I have added myself in the databases as translator for both the sites. I am
comfortable with translating from Tamil to English. And I am available from
June second week after my exams. I have also created HTML pages in FrontPage
for my site, but not familiar with DW. (BTW, kudos to the web-designers and
graphic-designers, the site design prototype really professional and
pleasing)

BTW, Is this site restricted only to PS or do we have plans to expand it to
other books? (Sorry, if this has been discussed in previous threads. I donno
much of what discussions went on in the previous threads)

luv,
S.Karthikeyan,
Jr. Software Development Engineer,
Dell Inc.

Ph: 8419110 Extn:77254
Mobile:+91-80-31850189

---------------------------------
Do you think it is air that you are breathing?
                                                              - Morpheus



------------------------ Yahoo! Groups Sponsor ---------------------~-->
Get A Free Psychic Reading! Your Online Answer To Life's Important Questions.
http://us.click.yahoo.com/Lj3uPC/Me7FAA/CNxFAA/5XOolB/TM
---------------------------------------------------------------------~->

To unsubscribe from this group, send an email to:
ps-varalaaru-unsubscribe@yahoogroups.com

 

Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/


"    Karthikeyan_K@Dell.com    /O=DELL/OU=AUSTIN/CN=RECIPIENTS/CN=KARTHIKEYAN_K    EX    ps-varalaaru@yahoogroups.com    ps-varalaaru@yahoogroups.com    SMTP                                    Normal        Normal
RE: [ps-varalaaru] Welcome to karthik    "Hi Gokul,

The correct URL is http://www.geocities.com/ponniyinselvaa

There was a 'dot' at the end that was causing the error.

(Statutory warning : The site is highly incomplete. There are write ups only
on very few books like PS, SS and a couple of akilan's work.)

And I am eagerly looking forward to starting my work as a translator for the
sites. Maybe as we progress I will try to contribute articles. But right now
my aim is to gather as much knowledge as possible.

luv,
S.Karthikeyan,
Jr. Software Development Engineer,
Dell Inc.

Ph: 8419110 Extn:77254
Mobile:+91-80-31850189

---------------------------------
Do you think it is air that you are breathing?
                                                              - Morpheus


-----Original Message-----
From: S.Gokul Sent: Wednesday, May 28, 2003 2:08 PM
To: ps-varalaaru@yahoogroups.com
Subject: [ps-varalaaru] Welcome to karthik


Anbin Karthik

2021/01/01

மகிழ்ச்சி தரும் 2021

 பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் சந்தோசம் தரும் நல்லாண்டாக இருக்கட்டும்.

கோவிட் கொடுமையால் கடவுள் etc நம்பிக்கை நிறைய குறைந்து விட்டது.

புனிதமான மனதின் வார்த்தைகளே தெய்வ வாக்கு.

அதனால் இந்த 2021 எல்லோருக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும் என வாழ்த்தும் 

கார்த்திக் அம்மா