About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/08/26

26.o8.2005

தன்னுயிரோடு என் உயிரையும் எடுத்துக் கொண்டு, என்னை நடமாடும் பிணமாக மாற்றி , என்னை நெருப்பில் இட்ட புழுவாக நிரந்தரமாக துடிக்க விட்டு விட்டு, என் உயிர் கார்த்தி என்னை விட்டு பிரிந்த நாள்.
என் அருமையிலும் அருமையான,அருமையான, உயிரான, உயிரான, என் தெய்வ மகன், என் தாய், என் அம்மா, என் கடவுள், என் எல்லாமுமான, என் கார்த்தி மகன்,....விதி இப்படி கூட என்னை துரத்துமா? வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகள், போராட்டங்கள் என ஓடி சோர்ந்தவளுக்கு மிகப் பெரிய ஊன்று கோலாக இருந்த என் மகன் , யாருடைய தைரியத்தில் என் கணவரின் பிரிவைத் தாங்கினேனோ, அந்த இமயமலை உருகி மாயமாய் மறைத்த மாயமென்ன? விதி என்னை துரத்தியது, போதும். சோர்ந்து விட்டேன்.தளர்ந்து விட்டேன். .completely exhausted. karthi come back. I am not able to tolerate your departure. come back. please, please,please come back.
amma, amma, amma

2011/08/23

தமிழ் புத்தாண்டு

சிரிப்பதா அல்லது அழுவதா ????
ஒரு ஆட்சியில் தை ஒன்று தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கிறார்கள்.
அடுத்த ஆட்சியில் சித்திரை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிக்கிறார்கள் .
இவர்கள் முடிவு செய்து சொல்லிவிட்டால் அதுதான் வேதமா?
எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அந்த நாளில் நான் கொண்டாடிக் கொள்ள எனக்கு உரிமை உள்ளதே.
என்ன, இவர்கள் விடுமுறை அறிவிக்க மாட்டார்கள் , அவ்வளவுதானே?
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், தை ஒன்று பொங்கல் என்பதால் அன்று கண்டிப்பாக விடுமுறைதான்.
சித்திரை ஒன்று என்பது, ஏப்ரில் 14 அம்பேத்கார் பிறந்த தினமாக , மத்திய அரசே விடுமுறைதான். ஆக இரு அறிவிப்புகளினாலும் எந்த குடியும் முழுகப் போவதில்லை.
அதற்கும் அடுத்த விஷயம் ,கொண்டாட்டம் என்பது டி.வி.நிகழ்ச்சிகள் என்று ஆகி விட்டது. ஒரு பட்டி மன்றம், சொத்தையாய் ஒரு காமெடி , ஒரு நடிகையின் புல்லரிக்க வைக்கும் தங்க தமிழ் பேட்டி, சாலையில் பேருந்துக்கு காத்திருப்போரை எல்லாம் இழுத்து வந்து கையில் மைக் கொடுத்து கத்த சொல்லி சூப்பர் சிங்கர் என்று ஒரு நிகழ்ச்சி என்று அன்றைய நாளை தமிழகம் '' '' கொண்டாடி ''???? முடித்து விடுகிறது.

எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது. இதை ஏன் இமாலய விஷயமாக்க வேண்டும் ?
இந்த நானா, நீயா போட்டி ஓயவே ஓயாதா?
karthik+ amma

2011/08/21

This day that year 2005......21.08.2005
I and Karthik and Senthil were in Karur to attend karthik's friend's marriage. I was extremely happy, as karthik was with me and because he was so happy to have his mother and brother with him, AND his dearest friends all at one place .His friends were making fun of him, that he will be the next bridegroom, and it will be a happiest occasion to all. All of us were planning the type of garland, the kalyana mandapam, the stage type, the food menu ,and the gift list of his friends .....with the least hint that everything will be just going to be nothing in 4 more days.
அப்பப்பா ,எத்தனை கற்பனைகள். என் அருமை மகனை கல்யாண கோலத்தில் அத்தனை கோணத்திலும் கற்பனை செய்து விட்டேன்.தாலி கட்டி முடித்தவுடன், என்னைத்தான் அவன் கண் தேடும் .கண்களிலேயே என்னிடம் அனைத்தும் சொல்லிவிடுவான்.
முதலிரவு முடிந்து வெளியே வந்தவுடன், ஓடி வந்து என் மடியில் படுத்துக் கொள்வான் என்பது வரை கற்பனை செய்து விட்டேன்.எல்லாமே இல்லை, இல்லை என்று ஆன சோகத்தை தாங்க முடியாமல் துடி துடிக்கும் என் நிலையை எப்படி சொல்வேன்?
கார்த்திக் அம்மா