2009/07/05
அவன் அளவுக்கு சிந்திப்பது என்பது ....
அவன் வயதில் அவனுக்கு இருந்த சிந்தனைகளும்,
mind maturity யும் ,, என்னை பல முறை வியக்க வைத்துள்ளது.
அவனின் ஒவ்வொரு சொல்லும் இன்று எனக்கு வழிகாட்டியாய் உள்ளது.
அவன் எழுதியது:
'' I don't want leisurely deadlines.
Work expands to fill available time.
I don't want impossible deadlines.
How can there be a limit to me?
Impossibility is a human concept.
I STOP WHEN I STOP
...... ...... .....
அவனுடைய team leader அவனுடன் project deadline பற்றி பேசிய போது
அவருக்கு அவன் அளித்த பதில் இது.
அவன் பேச்சே கவிதைதான்.
எண்ணற்ற திறமைகளை கொண்டிருந்த என் அன்பு மகன்
இன்று எங்கே?
2009/06/14
நல்ல வெய்யிலில் நின்று கொண்டிருக்கும் போது அதை விட பெரிய கஷ்டம் எதுவும் இல்லை என்று தோன்றும். ஆனால், நிழலுக்கு வந்தவுடன் அந்த கஷ்டம், மறைந்தும் விடுகிறது.மறந்தும் விடுகிறது.
ஒரு வயிற்று வலி வரும்போதும் அப்படித்தான். ஆனால், அந்த வலி முடிந்தவுடன்,, அதன் கொடுமையை மறந்து விடுகிறோம்
even if we try to recollect, we don't feel the same intensity.
ஆனால்,
என் கார்த்தியை பிரிந்த அந்த வலி மட்டும், அந்த கொடுமை மட்டும் சிறிதளவு கூட குறையவில்லை என்பதோடு,
நாளுக்கு நாள் அதிகமாவதுதான் இன்னும் கொடுமை.
நரகம்
Hell on Earth.
when will I get a relief?
karthik amma
.
2009/05/21
தில்லியில் நடைபெறும்
திடீர் திருப்பங்கள் நிறைந்த
நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடிய
பரபரப்பு காட்சிகள் நிறைந்த
1000 thriller movies
ஒரே நிமிடத்தில் பார்ப்பது போன்ற
ஒரு திரைப்படத்தை கண்டு தலை சுற்றி..
.... .....
யாராவது ஒரு நல்ல தலைப்பு தாருங்களேன்.
..... ..... ...
என்னென்னவோ எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
தலை சுற்றல் நிற்குமோ?
நின்றால் பார்க்கலாம்?
...... ..... ....
அடுத்து சட்டசபை தேர்தலா?
தாங்காதுடா தேவுடா.....
2009/05/17
Election.--2009
I seriously doubt whether I am ''eligible '' to write anything at all.
I am an innocent, IGNORANT , infant.
But it needs a child to tell that '' the king is naked ''.
So my ideas may be an eye opener also.!!!!
ஒரு குழந்தைதான் சொல்ல முடியும் ''அரசர் ஆடையின்றி இருக்கிறார் '' என்று.
ஆகவே , இந்த குழந்தையின் மழலையும் கூட படிக்கப் படலாம்.
So I register some sentences which are neither criticism or accusation.
First,
ஜெ.ஜெ.
ஜெயித்தால் மக்கள் தன் தலைமையை தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார். தோற்று விட்டாலோ '''பணம் விளையாடி விட்டது. ரவுடித்தனம் ஜெயித்து விட்டது '' என்கிறார்.
பணம் விளையாடியது என்பது உண்மையானால், அழகிரி 3 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் ஜெயித்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக,
அவர் வழி அராஜகம் , அவர் எல்லோரையும் மிரட்டுபவர் என்பதாக ஒரு பிரச்சாரம் நடந்தது. அப்படி என்றால் அவருக்கு எதிரான வேட்பாளர் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
அப்படியானால், அந்த 3 லட்சம் மக்களுக்கு அழகிரியிடம் பயம் இல்லையா ? அல்லது அந்த 3 லட்சம் பேருக்கு அண்ணன் பணம் தரவில்லையா ?
எந்த பட்டனை அழுத்தினாலும் தி.மு.க விற்கே லைட் எரிந்தது என்றாரே ஜெ.
அப்படியாயின், எப்படி இந்த 3 லட்சம் பேர் அழுத்திய போது எப்படி அந்த கட்சியின் லைட் எரிந்தது?
நான் ஒரு நடுநிலையாளர்.எல்லோருடைய பிரச்சாரத்தையும் தொடர்ந்து பார்த்து வந்தேன் என்பதால் சொல்கிறேன். திரு.அழகிரியின் அணுகுமுறை மக்களை அடைந்தது. அவர் சொல்லியதெல்லாம் ''நான் மதுரையை மேம்படுத்துவேன்'' என்பது மட்டுமே. அதில் ஒரு உறுதி தெரிந்தது.
ஆனால், ஜெ, தான் சென்ற இடத்தில் எல்லாம் மைனாரிடி அரசு என்ற புராணமே பாடினார். 5 வருடத்திற்கு ஒரு முறை மேடை ஏறி விட்டால் மக்கள் மயங்கி விடுவார்கள் என்ற அவருடைய எண்ணம் மாற வேண்டும்.யாருமே அவரை எளிதில் பார்க்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகவேண்டும்.
தன் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய முனைய வேண்டும். தனக்கு வாக்களித்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்.மறுபடியும் கொடநாடு, படகு, ஆங்கில நாவல்கள் ,அருமைதோழி என்று அங்கு போய் உட்கார்ந்து கொண்டு, தன் பெயரில் யாரோ எழுதி, யாரோ வாசிக்கும், அறிக்கைகள் மட்டுமே உதவும் என்ற அணுகுமுறையும் மாறவேண்டும்.
பா.ம.க.
இது எதோ வன்னியர்களை இந்த நாட்டின் அரசர்களாக மாற்றுவதற்காகவே உருவாக்கப் பட்ட கட்சி என்ற எண்ணம் பரவலாக உள்ளது.உண்மை என்னவென்றால், இந்த கட்சியால், எத்தனை வன்னியர்கள் என்ன நன்மை அடைந்திருக்கிறார்கள்? எத்தனை பேர் தொழில் அதிபர்கள் ஆகியுள்ளனர்? அதற்கு கட்சி எவ்வளவு உதவிஉள்ளது ? எத்தனை வன்னியர்கள் நினைத்த நேரத்தில் போய் மருத்துவரை நேரில் சந்திக்க முடியும்? எவ்வள்வு வன்னிய இளைஞர்கள் அவரால் உதவி பெற்றுள்ளார்கள்?
மக்கள் நிறைய படிக்கிறார்கள். நிறைய தொலைக் காட்சி செய்திகள் அனைத்து விஷயங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. 20 வருடத்திற்கு முந்தைய வாக்காளர்கள் மாறி விட்டார்கள்.
எனவே அரசியல்வாதிகளே மாறுங்கள்.
2009/04/18
செந்தில் ஆராம்பித்துள்ள " கார்த்திக் மீடியா "Real projection screen :karthik media .
I am not sure about the tech name. But it's a screen.
And he got a chance to display it in Trade Centre .
And I went there and sat for some hours ,which I should not have done at all.
This stall was the center of attraction.
Senthil and his friends were giving all details about it.
A young guy came to me and asked about it. I explained and he listened patiently.
Then he asked me , "shall I take a photo? "
I was so magnanimous and said " what's there son? you can take as many photos as you like. "
After he left Senthil's friends " ஐயோ , சொதப்பிட்டிங்களே ஆண்ட்டி , இவர் யார் தெரியுமா ? அவர் கிட்ட போய் பேர் கேட்டு , !!!!" என்று புலம்பித் தள்ளி விட்டனர்
You want to know who he is ?
See.

Not only that. Idid the same foolishness with the most famous director and his name is'KING of kings'.
Now tell me.Am I not a super genius ?
Poor guys !!!
They would not have had such a disgusting moment in their lives.
2009/04/11
என்னடா இப்படி ஒரு கேள்வி என்று ஆச்சரியமா?
முதலில் கற்பு என்ற வார்த்தையை வரையறுத்தலே கடினமான
விஷயம்.
உடலளவில் கற்பு என்பது ஒரு பெண்ணின் மீது கணவனைத் தவிர பிற
ஆடவனின் விரல் நுனி கூட படக் கூடாது என்ற கணக்கின் படி பார்த்தால் ????
பஸ்ஸில் அல்ல, கல்லூரியில் அல்ல, திருமணமான பின், தாயான பின், ஒரு குடும்ப , திருமண நிகழ்ச்சியில் என்று தெரிந்தோ, தெரியாமலோ, வேண்டுமென்றோ உரசுபவர்கள் எத்தனை பேர் ?
இந்த கணக்கின் படி பார்த்தால் நான் கற்புக்கரசி அல்ல.
சரி, மனதளவில் மணாளனை தவிர மாற்றானை மனத்தால்,,
மனதில் ஒரு கணமும் அரசாள அனுமதிக்கக் கூடாது என்ற கணக்கை
எடுத்துக் கொண்டால் ,
எந்த நிமிடம், [ வினாடி ] கார்த்தியின் முகத்தை கண்ணில் கண்டேனோ
அந்த நொடியே கணவனின் முகம் மறந்து, மறைந்து போய்,என் மனம் முழுக்க
அவனுக்கு அர்ப்பணித்து கணவனுக்கு துரோகம் செய்தவள் நான் என்பதால்
நான் கற்புக்கரசியா ? ?
2009/03/24
இந்த முயல் எந்த ஆமையுடனும் போட்டியிடவில்லை , ஏனென்றால் இந்த முயலுக்கு யாரிடத்தும் பொறாமை [ ஆமை ] இல்லை. ஆனாலும் முயலுக்கே
உரிய குணத்தால் வேக வேகமாக ஓடி அதன் தகுதிக்கேற்ற சாதனைகளை செய்தது.
கதையில் வரும் முயல் போல் இந்த முயல் சோர்ந்து போய் தூங்கி விடவில்லை.
தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்திருக்கும். ஆனால், அது ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளம் இருந்து அதில் அந்த முயல் விழுந்து விட்டது.
எழுந்திருக்க விரும்பாமல் , உணவு, உறக்கம், உறவு எதுவுமே வேண்டாம் என்று பள்ளத்திலேயே விரக்தியுடன் இருக்கிறது.
ஏன் தெரியுமா ?
தான் ஈன்ற தன் அருமைக் குட்டி முயல் தாய் முயலை விட அதிக வேகத்தில் ஓடிக் கொண்டிருந்ததை கண்ட அந்த தாய் முயல் பெருமிதத்துடன் பூரிப்படைந்தது.
தாயை விட அதிய வேகமாக ஓடிய குட்டி முயல் தாய் விழுந்த பள்ளத்தை விட ஆழமான அதல பாதாளத்தில் விழுந்து போயே போய் விட்டது.
இனி என்ன ஓட்டம் வேண்டியிருக்கிறது ? தாய் முயல் தவித்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.
வேதனை, வேதனை.
கார்த்திக் அம்மா
2009/03/19
Indian Education System
But there has been a lot of hue and cry that our system could " manufacture clerks only."
Sir.C.V.Raman, Our dear Abdhul Kalam, Chandrayan Heroes Madhavan Nair, Annadurai all studied in this system only.
But, the ' everything great U.S mania " people have introduced a lot of changes such as AOL and ABL system. Now when the great great Obama who is believed to do miracles has said that
..... " "US President Barack Obama urged Americans to raise their standards of education as they have to compete with the students of India and China.
Addressing a town hall meeting at Costa Mesa in California on Wednesday, Mr Obama emphasised on the need to raise the standards of education and put more efforts in education, which he had been stressing upon since his election campaign days. “It can’t just be a single high-stakes standardised test — but we do need to have strong, powerful measures of performance, because schools are like anything else,” Mr Obama said.
“We can’t afford our kids to be mediocre at a time when they’re competing against kids in China and India who are actually in school about a month longer than our kids,” he said. “So there’s a whole bunch of reforms that we’re going to have to do,” he added. He said that this is not the job of teachers alone and parents too have an important role to play in this regard.
“You can’t put the entire burden on a teacher. If you’re not making sure your child does their homework, if you’re not reading to them, instilling a sense of excellence and a thirst for knowledge in them, then they’re not going to do very well, no matter how good your te-acher is,” he said " "Some top officials go to foreign countries at Govt cost and after returning start implementing "all that they have seen [ the pity is that they do not learn and analyse the system ] , (they just see ) and try to implement new methods , without analyzing whether it would suit our culture and climate.
One of the top official in TN education once went to Australia , where due to Ozone depletion problem, the classes start at 8 a.m and close at 3 p.m.
This officer ordered that all schools in TN should start at 8.30 a.m. What a lot of mess. As i worked in a Govt school, I can tell you how much inconvenience it caused to our students who belonged mostly to families below poverty line. How many of them came to school without food? when asked they replied, " Mm, do we have gas stove at home? our mom struggle a lot to cook food. And we have to come out of home by 7.30 to catch a bus or walk 30 minutes to reach school. If that's the situation can we think of breakfast? "
I was almost in tears.
Even an ordinary pen from U.S is a heavenly blessing to us. After reading what Obama has said, I hope now atleast our people would come out of the MAYA that everything is great in U.s and the " cheap Indian " concept.
Wake up.
Learn to respect our culture and tradition and our ancestral systems.
with luv and luv only
karthikeyan
2009/03/03
மனம் மிக மிக சோர்ந்து உள்ளது. கார்த்தியை பற்றி எழுத மட்டுமே கை வருகிறது. பலவந்தமாக , மனதை கட்டுப் படுத்தி ,வேறு விஷயங்களை பற்றி எழுதுவேன்.
ஆனால் இன்று,
வசந்த் டி.வி யில் '' திக்கற்ற தேவதைகள் '' என்ற நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.
மனம் கலங்கி விட்டது. அப்பப்பா , வலியும் வேதனையும் அதை அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிவர்.
திருநங்கை ஷிலா சொன்னார்.'' எங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு
''கல்வி'' தான் என்று சொன்னார். அப்போது எனக்கு ஒரு யோசனை மனதில் பட்டது.
ஏன் திருநங்கைகளாக மாறும் பாலகர்களுக்கு என்று தனியாக ஒரு ஸ்பெஷல்
பள்ளி ஆரம்பிக்கக் கூடாது? அரசாங்கம் இதை செய்யலாம். அதற்கு தேவையான உதவிகள் செய்ய என் போன்றோர் தயாராகவே உள்ளோம்.
என் அன்பு சகோதரிகளே , உங்களுக்கு என் மனமார்ந்த அன்பை தெரிவித்து கொள்கிறேன்.
கார்த்திக்+அம்மா
ஜீவனின் பின்னூட்டம் பற்றி ஒரு குறிப்பு . அந்த திரு நங்கை கூறினார்." மற்ற மாணவர்கள் கேலியும் கிண்டலும் , புறக்கணிப்பின் காரணமாகவே தான் பள்ளிப் படிப்பை பாதியில் விட நேர்ந்தது " என்று. அதனால்தான், என் மனதுக்கு பட்டது இவர்களுக்கு என்று ஒரு தனி பள்ளி இருந்தால் இந்த மன உளைச்சல்கள் இல்லாமல் படிப்பை இடையில் நிறுத்தாமல் படித்து வேலை தேடிக் கொள்வார்கள் அல்லவா?
மற்றபடி என் அன்பு ஜீவனின் கருத்துக்கு என் முழு ஆதரவு உண்டு.
2009/02/04
Almost 30 years, and still it continues. Even if they get any land of their own, I guess that only Prabakaran and his family will be there to enjoy the whole land, as all other civilians would have been killed by that time.
****** ********** **** ****
This reminds me one thing which I want to tell you if you don't beat me.
When I was a studying in college our class room was positioned in such a way that we can see anyone entering the gate [ though there was 5 minutes walk distance. ]. When ever there is a rumor about any strike we will be sitting on tenterhooks waiting for the Students' association Presidents to come and meet our Principal and demand a holiday. Then only she will declare a holiday. So all our eyes will be waiting for them.
On the first glimpse one of our friends will say ''O. S'' [O.Yes].From then all will start the chorus
O.yes Mm. Our prof would be thrilled to get such an enormous response to her teaching.
But the actual story is
[O.S means 'opposite sex ], that means the boys have come and any minute a holiday will be declared.How is it?
College days are 'college days.!!!1
2009/01/28
அதற்காக இப்படியா கவிழ்ப்பார்?
எல்லாம் இந்த இலங்கை விவகாரம்தான்.
ராஜபக்ஷே [இலங்கை அதிபர்] தி..மு.க தலைவரையும் , அ.தி.மு.க தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.
அவரின் உள்நோக்கம் என்னவாக வேண்டுமாக இருந்தாலும் இருக்கட்டும்.
இது ஒரு நல்ல வாய்ப்பல்லவா? உடனடியாக போய் பேசித்தான் பார்ப்போமே .
அதை விட்டு ''நான் அவர்களுக்கு எதிரி. கலைஞர்தான் புலிகளுக்கு நண்பர் ''
என்றெல்லாம் பேசி தன் பொறுப்பை எப்படி தட்டிக் கழிக்கிறார்?
நாம் என்ன பிரபாகரனை இலங்கை அதிபராக்க சொன்னோமா?
அல்லது பிரபாகரனுடன் பேசி சண்டையை நிறுத்த சொன்னோமா?
நம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்களுக்கு சட்ட சபையில் உரிய
பிரதிநித்துவமும், அமைச்சரவையிலும் இடம் அளிக்க வேண்டும். போன்ற உரிமைகளை பேசி பெறலாமே.
அதை விட்டு 'யார் எக்கேடு கேட்டால் என்ன? என் கொட நாடு உண்டு. தோழி உண்டு. படகு சவாரி உண்டு.ரோஜா தோட்டம் உண்டு.' என்பது சரியல்ல.
இவருடைய துணிவும், இவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும் எனக்கு இவர் மேல் ஒரு பிடிப்பை ஏற்படித்தியிருந்தது. ஆனால், இப்படி பேசுவது , பழி வாங்குவது, மூச்சுக்கு முன்னூறு முறை 'மைனாரிடி அரசு' என்று சொல்வதும் ,
அவருடைய மதிப்பை குறைக்கின்றன என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
உடனடியாக தன் முடிவை மாற்றிக் கொண்டு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு நீங்களும் மக்கள் நலம் நாடும் ஒரு தலைவிதான் என்று நிரூபியுங்கள்.
கார்த்திக் +அம்மா
2009/01/25
என் காலத்து படங்களை கூட இப்போதுதான் பார்க்கிறேன்.
ஆஹா,
உண்மையிலேயே ஜெயலலிதா நன்றாகத்தான் செய்திருக்கிறார்.
எந்த உடையும் அவருக்கு அவ்வளவு பாந்தமாக பொருந்துகிறது.
எந்த பாஷையும் விளையாடுகிறது.
எந்த நடனமானாலும், துள்ளிக் குதிக்கிறார்.
கொஞ்சலிலும் கலக்கல்தான்.
அதிலும் அவருக்கும் எம்.ஜி.ஆர் உக்கும் கெமிஸ்ட்ரி மிக அற்புதம்.
[ அது என்ன கெமிஸ்ட்ரி? ஏன் இகனாமிக்ஸ் , காமர்ஸ், பயாலஜி , கம்ப்யுட்டர் எல்லாம் இல்லையா?]
தமன்னா, திரிஷா பற்றியெல்லாம் எழுதாமல், இது தேவையா ? என்று கேட்காதீர்கள். மனதில் தோன்றியதை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?
அன்பிலும் அன்பான
கார்த்திக் +அம்மா
2009/01/22
Puzzle-Riddle
On his [ Ramalinga Raju's ] mother's and his brother's name...
I find it a ''PUZZLE''
A ''Riddle''
extremely ''ridiculous''
why should he save so much money and spend sleepless nights in the jail on a hard floor, sharing a room with 30 others and being treated as a '' c '' class prisoner.
It is the fact , that he will come out on bail as all other sophisticated criminals do, and enjoy a normal life , [ and the pitiest fact is that such criminals get qualified to contest as MP and MLA and become ministers.], keeping this fact apart, though they come out of jail,
WILL NOT THAT ONE DAY IN JAIL enough for a life time?
I am a simpleton , a traditionalist, a conservative and this is all beyond my comprehension.
with luv and luv only,
karthik+amma
2009/01/18
courtesy : Deccon Chronlcle 2009/01/15
முதல்வர் ஆணையால் பொங்கல் புது பொலிவு பெற்று ஜொலிக்கிறது.
ஆனால்,
ஆளாளுக்கொரு விளக்கம். ஒரொரு டி .வியிலும் , பத்திரிக்கைகளிலும் ஒரொரு விளக்கம்.
நான் ஒரு விவசாயி என்ற முறையில் சொல்லும் விளக்கம் இது.
நான் சிறுமியாக இருந்த பொது என் தாத்தா வீடுகளில் ''குதிர், சேர் '' என்ற ஒரு வீடு போன்ற தானிய கிடங்கு இருக்கும். சுமார் ௨0 அடி ஆழமும் ௨0 அடி அகலமும் உள்ள அந்த கிடங்கு நான்கு அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்..
இந்த தை மாதத்தில் [ மார்கழி மாதம் முழுவதும் அறுவடை வேலை தலை நிமிர முடியாத அளவுக்கு இருக்கும். அதனால்தான் அந்த மாதம் கல்யாணம் போன்ற + பண்டிகைகளோ இருக்காது. ] அனைத்து வகையான தானியங்களும் (நெல், கேழ்வரகு, கம்பு, அவரை, துவரை ) வீடு வந்து சேரும். வீடே கலகலத்து விடும்.
இந்த வருடத்து தானியங்கள் வந்தவுடன் அதற்கு முந்தைய வருட மிச்ச மீதி பழைய தானியங்களை அந்த குதிரிலிருந்து வெளியே எடுத்து விட்டு, அந்த [ஸ்டோர் ஹௌஸ் )_கிடங்கின் தரையில், பூச்சி,வண்டுகள் தாக்காதிருக்க சுவருக்கு வெள்ளையடித்து, பூலாப்பு , ஆவாரம்பூ ,வேப்பிலை போன்றவற்றை அடியில் பரப்பி அதன் மேல் தானியங்களை கொட்டி ஒரு ஜன்னல் போன்ற திட்டிக் கதவை மூடி விடுவர். மாதம் ஒரு முறை வீட்டிற்கு தேவையான தானியத்தை எடுத்துக் கொள்வர்.
இப்படி scientific ஆன ஒரு விஷயத்தை காலப் போக்கில் பழையன கழித்தல் என்ற மாதிரி மாற்றி பழைய டயர் , துணி போன்றவற்றை எரிக்கும் வழக்கமாக
மாற்றி விட்டனர்.
இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். அப்போது பானை, மண் சட்டியில்தான் சமையல். இந்த மண் பாத்திரங்கள் ஒரு வருடத்துக்குதான் உபயோகப் படுத்த வேண்டும். அதே போல் பாய்களும். அதனால், தை மாதம், இவற்றையும் மாற்றுவர்.
இதுவே பழையன '' போக்கி '' . போக்கியே நாளடைவில் ''போகி '' ஆகிவிட்டது.
பொங்கல்:
பொங்கல் வைப்பதிலும் சில காரணங்கள் ...முதலில், பானையில் பாலை ஊற்றி பால் பொங்கி எந்த திசையில் வழிகிறது என்பதை கவனித்து, அதைக் கொண்டு நீரோட்டத்தையும், மண்ணின் பலத்தையும் கணக்கிட்டு, அடுத்த ஆண்டுக்கான விவசாயத்தை திட்டமிடுவார். என் தாத்தா இப்படி செய்வதை நானே பார்த்திருக்கிறேன்.
ஆனால், இப்போது யாருக்காவது இந்த திசையும் கணக்கும் தெரியுமா என்று தெரியவில்லை.
எப்படியோ , பொங்கல் பொங்கினால் சரிதான்.
if someone, ( whose blog is widely read ) can post this in their blog, so that it could reach more readers i will be happy.
அன்பிலும் அன்பான
கார்த்திக் +ammaa
2009/01/10
தமிழ் நாட்டின் தலையாய குடும்பத்தை சார்ந்த பெண்மணி " தமிழ் மக்கள் எல்லோரும் தமிழில்தான் பேச வேண்டும் என்று " தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான ' சுடிதாரில் ' வந்து மேடையில் வேண்டுகோள் விடுக்கிறார்.
கொடுமைடா சாமி....
தமிழ் நாட்டின் தமிழ் எங்கே போகிறது என்றே புரியவில்லை...சமைத்து பாருங்கள் நிகழ்ச்சி பாருங்கள்..தமிழ் வார்த்தைகள் மிகவும் குறைவு. 'மேத்தி , கோங்குரா, தனியா, மிர்ச்சி ,யோகர்ட் ' என்று ஒரே கலப்படம். நம் புளிச்சகீரை , வெந்தயக்கீரை, மிளகாய் எல்லாம் மறந்தே போய்விடும் போல் இருக்கிறது.
[ இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் ''ஆனியன்'' [கொடுமை என்னவென்றால் அதன் சரியான ஆங்கில உச்சரிப்பு அனியன் என்பதே.]
எதற்கு இந்த அரைகுறை ஆங்கில மோகம் ? எனக்கு ரத்த அழுத்தம், டென்சன் எல்லாம் எகிறி விடும்.
கடையிலும் கோங்குரா என்றால்தான் தெரிகிற அளவுக்குத்தான் நிலைமை.
என்னை ஒருவர் கேட்டார் " நீங்கள் இலங்கை தமிழரா ? ''... திகைத்து போன நான் கேட்டேன் " எதனால் அப்படி கேட்கிறீர்கள் ? '' என்றேன் வியப்புடன்.
"இல்லை, இவ்வளவு சுத்தமாக தமிழ் பேசுகிறீர்களே '' என்றார். மயக்கம் வராத குறைதான்..
ஆனால், தமிழில் பேசினால் ஒரு கேவலமான பார்வைதான். இரண்டு வார்த்தையாவது ஆங்கிலத்தில் பேசினால்தான் ஒரு மனுஷியாக கருதி திரும்பி பார்ப்பார்கள். காலத்தின் கோலம்!!!
அன்பிலும் அன்பான
கார்த்தியுடன் +அம்மா
2009/01/07
அபி அப்பாவும் நானும்
உடனே என் flash back:
கார்த்திக் 2 1/2 வயது குழந்தையாக இருக்கும்போதே அவனை LKG யில் சேர்த்துவிட்டோம். [ நாங்கள் குடியிருந்தது மின்வாரிய குடியிருப்பு. அங்கிருந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நேரம் கார்த்தியின் ரகளை தாங்காது. ' நானும் ஸ்கூலுக்கு போவேன் ' என்று ஒரே அடம். அப்போது அவனுக்கு வயது இரண்டுதான். ஆனால். alphabet, colours, animals, birds.days, months, numbers என்று அத்தனையும் அத்துபடி. என்ன செய்வது?
தப்புதான் என்றாலும் , அவனுக்கு பொய்யான Date of Birth Certificate தயார் செய்து மூன்று வயது என்று சொல்லி பள்ளியில் அட்மிஷன் வாங்கிவிட்டோம்.அப்போது செந்தில் 6 மாத கைக் குழந்தை.
பள்ளியில் முதல் நாள் :
பையில் feeding bottle , பால் etc யுடன் [ அச்சோ, feeding bottle செந்திலுக்கு என்று நினைத்தீர்களா ,உச், அது கார்த்திக்கிற்கு...செந்தில் ஆறு மாத குழந்தையாக இரு்ந்தாலும் டம்ளரில்தான் பால் குடிப்பான். இந்த எல்.கே.ஜி. குழந்தைக்குதான் பாட்டிலில் பால் ] எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு போனால், ஒரு 100 குழந்தைகள். ஆஹா, என் மகன் என்னை விடுவானா? நானும் வகுப்பறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டேன். [அவனுக்காகத்தானே நான Asst.Professor வேலையையே விட்டேன்.].அப்படியிருக்க அவனை பள்ளியில் தனியாக விட்டு செல்வேனா?.... நானும் அவனுடன் ...செந்திலின் உபயம்தான். "பாவம் ,கார்த்திக் அம்மா, கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறார்கள் " என்று ஒரு குரல் கேட்க "பளிச் " என்று ஒரு ஐடியா. " ஆமாம். வீடும் தூரம் " என்று காரணம் சொல்லிவிட்டு கார்த்தியின் வகுப்பிற்குள் ஐக்கியமாகி விட்டேன். அங்கே ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது. நான் அதில் உட்கார்ந்து கொள்ள , என் மடியில் ஜம்மென்று கார்த்திக். [ ஆஹா, மறுபடியும் செந்தில் என்று நினைத்தீர்களா] அந்த வகுப்பறை எப்படியென்றால், இந்த எல்.கே.ஜி. முதல் 3 மாதத்திற்கு 100 குழந்தைகளும் ஒரே ஹாலில். அப்புரம்தான் தனி தனி க்ளாஸ்ரூம். இது செந்திலுக்கு வசதியாக போய்விட்டது. அவர் பாட்டிற்கு எல்லோரிடமும் விளையாடிக் கொண்டிரு்ப்பார்.]
இந்த அம்மா கோண்டு கார்த்திக் மட்டும் அம்மா மடியில் ..மற்ற எல்லா குழந்தைகளும் அழுவதை இவர் கூலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். Principal [Sister] மிகவும் கண்டிப்பானவர்தான். ஆனால் என்ன நினைத்தாரோ, மற்ற எல்லா அம்மாக்களையும் வெளியேற்றும் அவர், நான் வகுப்பறைக்குள் இருப்பதை ' கவனிக்காதது ' போல் இருந்து விட்டார்.
இப்படியாகத்தானே , 3 மாதம், நானும் மகனுமாக படித்து, என் செல்லமகன் கார்த்தி மற்ற மாணவர்களுடன் பழகி அவர்களுடன் விளையாட ஆரம்பித்து , அந்த சூழநிலைக்கு முற்றிலும் பழகியபிறகே அவனை தனியே விட்டு வந்தேன்.
HOW is it?
அன்பான கார்த்தியின் அன்பான அம்மா
From some comments I understand that some find it difficult to read Tamil. So I think i shall give the English version of it too.
Here IT IS.
I happened to view a program on the Movie 'Abiyum Naanum' by Pirakash Raj. During the discussion , he was narrating a scene where he has to leave his daughter in school and how he cried on the first day. [ I have not seen the movie ]. This kindled my flash back.
When karthik was just 2 1/2 years old , we were living in EB quarters , apartment system.where many school going kids lived. When they will be leaving for school, Karthik would start crying ' I want to go to school.' By that age itself, he had learnt alphabet,numbers, dates, days, animals. birds,,,,almost the whole thing that would be taught in LKG.
Unable to appease him we decided to admit him in LKG, though he was underage. Though it was wrong, we managed to get a False Date of Birth Certificate, saying that he was 3 years old, and admitted him in LKG.
Senthil was jyust SIX months old baby then.
First day in school:
I had 'feeding bottle' [ you are wrong if you guessed that it was for senthil.. though Senthil was 6 months old , he used to drink milk in tumbler only..] This feeding bottle, was for my dearest son karthik ,the LKG child.
I reached school to find 100 children crying, hugging to their moms and etc. Slowly I creeped into karthik's classroom, found a stool, sat on it with my child on my lap[ again you are wrong, if you had guessed that it would be Senthil.] Senthil started playing with other children, and it was karthik who sat very comfortably on my lap, watching cooly, while the children were crying horribly.
Its all Senthil's help. Someone observed,'oh, this karthik amma, managing two kids' .FLASH. An idea clicked. Using this trump card , I have strongly settled in karthik's classroom.The Principal,[[ sister] , usually very strict, played a trick of 'not noticing me' (I still wonder what made her be so kind to me ), and so I sat with karthik all through the first three months.By then he became friends with his classmates and got accustomed to the situation.
HOW IS IT ?
I
2009/01/03
karthik's shorts
Then I used to wonder what will they do with these 9 or 10 cm lengthy drawers. I guessed that they would sell it in the seconds market.
But now I understand that they donate it to the dancers both in the small and BIG screen.
Don't come out with the question " why it took such a long time to know this ? "
I had TV at home till 1995 and when Karthik entered +1 , I disposed all electronic entertainment gadgets, so that their concentration should be in studies only.
And now I have TV and lots and lots of time with nothing to do but ' ' 'see ' ' ' [ viewing, watching are different from seeing,, and I see only ].
And now when I look at the dances I understand that six , seven years old boys' shorts are really very useful to them.
Simply superb dress sense.
karthik +amma
2008/12/25
சென்னை சுனாமி : 26.12
என் சுனாமி : 26.08. 05
என்ன சொல்ல ?
2008/12/14
நான் 7,8 வயது சிறுமியாக இருக்கும்போதே இந்த கொடுமையை எதிர்த்துள்ளேன்.
எந்த ஜாதியினராக இருந்தால் என்ன, எல்லோரும் மனிதர்கள்தானே எங்கள்வயலில் வேலை செய்யும் அனைவரையும் " அக்கா, அண்ணா " என்ற உறவு முறையில்தான் அழைப்பேன்...அவர்கள் நெகிழ்ந்து விடுவார்கள்.
**** நான் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தபோது ' வேலன் ' என்ற ப்யூன் [ office assistant ] இருந்தார்.அவரை யாரும் பெயர் சொல்லியே கூப்பிட்டதில்லை. "டேய் " etc.தான்.
..........நானோ " வேலண்ணா " என்றுதான் அழைப்பேன். ஒரு நாள் வீட்டிற்கு வந்த அவர் " அம்மா, நீங்க்ள் வந்த பிறகுதான், பள்ளியில் என்னை ஒரு மனிதனாக பார்க்கிறார்கள்.இது வரை ஒரு நாயை அழைப்பது போல், 'ஏய், டேய் ' என்று அழைத்தவர்கள் இப்போதுதான் பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள் " என்று கண் கலங்கிவிட்டார்.
யாராயிருந்தாலும் வீட்டிற்குள் அமர வைத்துதான் சாப்பாடு போடுவேன். [கொடுமை என்னவென்றால், அவர்கள் வெளியில் நின்று தேங்காய் மூடியில் அல்லது நெல் அளக்கும் "படி " [a vessel ,this present generation may not have even seen that ] யில்தான் பழையதை கரைத்து கொடுப்பார்கள். அந்த படியில்தான் நெல் , அரிசி அளப்பார்கள்.அப்போது 'தீட்டு ' கிடையாதா? என்று இந்த சிறுமிக்கு ஆச்சரியமாக இருக்கும்.
எனக்கு திருமணமான பின் , [மாமியார் வீடு பயங்கர பட்டிக்காடு.].
அங்கே போனால், ???? சினிமாவில் பார்ப்பது போல் இருக்கும். நானோ வழக்கம்போல் எல்லோரையும் "அண்ணா ".
அந்த கிராமத்திலிருந்து வருபவர்களுக்கும் வீட்டில்தான் சாப்பாடு. என் 'சக சகோதரி' [ ஓர்ப்படி, co-sister ] " கலா, மாமியாருக்கு தெரிந்தால் உன்னை வீட்டிற்குள்ளேயே விட மாட்டார்கள் " என்று எச்சரிக்கை மணி. அப்படியும் நான் 'திருந்தவில்லை '!' ..இது மாமியாருக்கு தெரியவர
" கலா , இது நம் சாமிக்கு ஆகாது, சாமி குத்தம் " என்று மிரட்டினார்கள்.
இது உண்மையிலேயே சாமி [ அப்படி என்று ஒன்று இருந்தால் ] , இது சாமி குத்தமா ? அதனால்தான் எனக்கு இவ்வளவு பெரிய இழப்புகளா ? எனக்கு வந்த இந்த இழப்புகள் எல்லாம் அவர்களுக்கு வெற்றிக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. ' ஆடினாள் பார். இன்று அனுபவிக்கிறாள் பார் ' என்று கொக்கரிப்பு வேறு.
சாமிக்கு என் மனித நேயம் புரியவில்லையா ? சாமியும் உயர் ஜாதிக்குதானா? சாமிக்கும் தீண்டாமை உண்டா ?
இது தண்டனையாகவே இருந்தாலும், இன்றும் நான் மாறவில்லை. இன்றும் அவர்கள் என் சக மனிதர்களே, என் உடன் பிறப்புகளே.
ஆனாலும், இழப்பு என்னை மிகவும் நோகடித்து விட்டது. மனம் கந்தலாக நைந்து விட்டது. கார்த்தி வருவானா, கதவை தட்டுவானா என்று கண்களும், காதுகளும் ஏங்கி செயலிளந்து விட்டன.
ஏக்கத்துடனும், துக்கத்துடனும்,
கார்த்திக் அம்மா
'
2008/12/09
ஷீலா தீக்ஷித் மேடம்
ஹாட் ட்ரிக்
ஹாட்ஸ் ஆஃப்
***** ******
TN jokers
பேரனின் பிறந்த நாள் விழாவிற்காக லண்டன் பறக்கும் தலைவர்.
இங்கே ஒரு வேளை உணவுக்கு அழும் எத்தனையோ பேரன்கள்..தன்னலமற்ற தலைவர் என்றால், [ மற்றவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள் ]
**** ***** *******
தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று சொல்லிய சோனியாஜியை
நிச்சயம் இங்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை...எங்கோ இருக்கும் இத்தாலியில் பிறந்தும், இந்த கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி புடவை கட்டி வரும் அவர் எங்கே? இந்த மண்ணில் பிறந்து, ஒரு மாநில முதல்வராக ஆன பின், fashion show ல் கலந்து கொண்டு catwalk போகும் வசுந்தரா எங்கே?
2008/12/05
சன்தீப் உண்ணிகிருஷ்ணனின் அருகில் அவருடைய தாயை பார்த்தபோது ,,,, நானும் அப்படித்தான் என் மகனுடன் பேசினேன்." கார்த்தி போகாதே, நீ வாழ பிறந்தவன், நீ வாழ வேண்டும் ,,போகாதே என் மகனே" என்றுதான் அவனிடம் பேசினேன். Just replace myself and Karthik there.. கத்தவில்லை,,, கதறவில்லை..ஆடவில்லை,,ஆர்ப்பரிக்கவில்லை. உடற்கூறு சோதனைக்கு அவனை கூட்டி சென்றபிறகு, வெளியில் உட்கார்ந்திருந்த அந்த ஒவ்வொரு மணித்துளியும் மனம் கதறிக் கொண்டேயிருந்தது. "கார்த்தி , எழுந்துவிடு, எழுந்துவிடு" என்று. ஆனால், சினிமாவில்தான் இதெல்லாம் நடக்கும். அந்த வீரனின் தாயின் அழுகை எல்லோர் மனதிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், என் மனதில் அது வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
*** ** **
அடுத்து உண்ணிகிருஷ்ணனின் தந்தையின் கோபம்.:
என் கணவரின் இழப்பின் போது நானும் அதே போல் " போங்கடா நாய்களா" என்றேதான் கத்தினேன். இத்தனை நாட்கள் நான் over ஆக react செய்து விட்டோமா என்று தோன்றியதுண்டு. ஆனால், ஒருவரின் இழப்பை, இன்னொருவர் தன் சுய நலத்திற்கும், பகட்டுக்கும் பணத்துக்கும் பயன்படுத்தினால், இது போன்ற கோபம்தான் வரும், அது சரிதான் என்று இன்று மனம் தெளிந்து விட்டது
2008/12/04
Saluations
But more than them , the real heroes are those who have lost their dearest and behaved the 'best and the most courageous.
Yes, I mean the wife of Karkere who refused the one crore and gave a good lesson to the dirty politicians who would like to seek cheap popularity and mint money using this opportunity. Are we all politicians who would grab any dirty money coming by any dirty route.
Money may be an essential thing to our life. But money is not the only thing that can make life happy.
Next is Sandeep Unni 's father. Yes.. show them the doors.
What follows is my rumination.
1) I have always been wondering about the practice of calling one's wife as 'widow of so and so'.
Why? Till her death, any lady remains to be his wife only.So tell that 'wife of ex' .Stop this hurting ,piercing, foolish practice.
2) This is from my own life. Though extremely sad to explain this I would like to tell this. I (karthik's mother), was offered some sort of pension. But i sent a message saying, 'till now i don't accept that my karthik is not with me. If I accept this pension that would mean that I acknowledge his d****, which I am not ready to do in any situation and circumstance.
.... ......
What follows is an episode from my life. In 1971 the India pakistan war broke out. I was some 11 or 12 years old and my younger brother was 10 years old. We two underwent a fasting 'demanding ' permission from our mother to go and join army and sacrifice our lives for our country. Like the scenes in the movie ,Inaintha Kaikal , which came much later, we had dreams of going all alone to the war front and kill all the pakistanis!!!!!. ...Dear Sandeep joined the forces with the sole intention of saving our dear country. Never mind if it costs the dearest life. Exactly. my mind set up is also the same. I will die happily in the war to save my country. Even now , at the age of 50, I am ready to join the army. 1971 or 2008. No difference. Don't come digging saying 'mentally still I am 11 years old' .I am happy to accept it.
..... .....
anbilum anbana
karthik + amma
Z +
The next most important issue is, or the 100 billion dollar question is , DO WE NOT HAVE EQUALLY [ rather More ] CAPABLE " EXECUTIVES " [ erase the word 'Leader' , which is quite loathsome and nauseating in the present scenario ] to manage [ once again delete the OBSOLETE word "RULE " ] the country, Our GREAT INDIA.
There are lakhs and lakhs of 'youngies' in our country with more vigour, fire, intelligence, selflessness, and managing and conducting our country in a progressive route. Fire these 'OLDIES ' out .
Once [in 1990s when I was teaching in a class I told my students ' Make me the CM for just one day with all powers and see how much I change the whole thing.'....My students burst in to laughter and said " The next day the population will be half, because you would shoot the corrupt, the culprits etc '".Ironically, soon this movie 'Muthalvan ' was released and my students in a way felt elated and a sense of satisfaction [ because all of my students wished that corruption and all such non-sense should be eradicated. And when our hands are tied ,?] so they felt so happy about that movie.
And now i say this. Give this country to them. What if one BJP head or a PM or a CM or a would be CM die ? There are hundreds to take the charge and do better. So call back this "z" security.All are Indian citizens. All need protection.
As I have already written in a request to the so called terrorists kill those who are directly connected with you.PLEASE stop killing innocent people.
with luv and luv only
karthik+ amma
2008/11/13
Karthik's B'day--D'day--strange similarities
My birthday : 14.11.1958
marriage: 14.12.1980
karthik's birthday: 14.11.1981
As soon as i got married we [my hubby and i settled in TNEB quarters near Bhavani. ] my hubby was working as A.E .நான் கல்லூரி முடித்த உடன் திருமணம் . ஒன்றும் சரிவர புரியாத நிலை. தஸ் புஸ் என்று ஆங்கில இலக்கியம் M.A படித்துவிட்டு, டான்ஸ் , ட்ராமா, என்று காலேஜை கலக்கி விட்டு ,திடீரென சூழ்நிலை [ மாமனார், மாமியார் etc, etc ] என மாற சற்று தடுமாறிக் கொண்டிருந்த வேளை.
ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தது போல், என் கணவர் ஒரு workaholic.புது மனைவி, தனிக் குடித்தனம் என்றவுடன், சினிமாவில் வருவது போல் ஆடல், பாடல் , etc எல்லாம் தெரியாது அவருக்கு.
சரி. பதிவின் விஷயத்திற்கு வருவோம்.
விடிந்தால் Nov.14 th. அன்று இரவு 12 மணிக்கு சுரீர் என வயிற்று வலி. [ தனிக் குடித்தனம்] flats exclusively built for EB staff in an isolated area 25 km away from nearest town and 75 km away from Salem.
அன்று என் பிறந்த நாள் என்பதால், 20 கி.மி.தூரத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு , சேலம் சென்று சினிமா பார்த்து விட்டு அங்கிருந்து என் அம்மா வீட்டிற்கு சென்று b'day celebration முடிப்பது என்று திட்டம். இதில் இன்னொரு மிகவும், மிகவும் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்த ஊர் சுற்றல் எல்லாம் by bike. [ 350 cc bullet. ]
இப்படி கூட ஒரு அறிவில்லாத பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா? ஒரு நிறை மாத கர்ப்பிணி. பைக்கில் ஊர் சுற்ற திட்டம்.
மணி 12. இரவு. வயிற்றில் வலி ஆரம்பம். கணவரை எழுப்பி " என்னங்க " என்றேன். அரைத் தூக்கத்திலேயே 'happy birthday ' என்று சொல்லிவிட்டு தூகத்தை தொடர்ந்தார். ஒரு 5 நிமிடம் கழித்து மீண்டும் அவரை எழுப்பி ' என்னங்க " என்றேன். " என்ன " என கேட்டார். "எனக்கு வயிறு வலிக்குதுங்க " என்றேன்.
எழுந்து உட்கார்ந்தவர், " இப்போது என்ன செய்யலாம் ? " என்றார். [ மனைவிக்கு பிரசவ வலி. கூலாக கேள்வி. ] . " சரி. தூங்குங்கள்..சற்று நேரம் கழித்து பார்க்கலாம் " என்றேன். படுத்த மனிதர் அடுத்த வினாடி ஆழ்ந்த தூக்கம்.
மணி 1 a.m,,,2 a.m,,,,,,,3 a.m,,, நான் படுக்கை அறைகுள்ளேயே நடந்து கொண்டிருக்கிறேன். 4 மணிக்கு மேல் வலி அதிகரிக்க , மிக மிக புத்திச்சலித்தனமாக சுடுதண்ணீர் வைத்து குளித்து விட்டு, அவருக்கும் சுடுதண்ணீர் வைத்து எழுப்பினால், மனிதர் எழுந்து ஆசுவாசமாக குளித்தார்.
மணி 5a.m.... 5.30....5.45 ....அதற்கு மேல் முடியவில்லை. " ஏங்க , ஜீப் வர சொல்லுங்க " என்றேன். அது ப்ரொஜெக்ட் என்பதால், எல்லா A.E ஸுக்கும் ஒரு வண்டி [ஜீப் அல்லது வேன் ] கொடுத்திருப்பார்கள்.] [ 6 A.E s. in our flats there were 8 A.Es. so there would be 8 vechicles. *there's another episode about these jeeps which i will tell you later. ]
Phone செய்து ஜீப் ட்ரைவர் வந்து விட்டார். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பாட்டி தானும் துணக்கு வருகிறேன் என்று கூறியும் வேண்டாம் என மறுத்து விட்டு நானும் என் கணவரும் மட்டும் ஜீப்பில் 75 கி.மீ. [ சேலம் ] செல்கிறோம். போகும் வழியில்தான் அம்மா வீடு. போய் அம்மாவையும் அப்பா்வையும் கூட்டிக் கொண்டு செல்வதாக திட்டம். அம்மா வீட்டிற்கு அடுத்த வீடே ஒரு மருத்துவ தம்பதிகள். ஜீப்பில் இருந்து இறங்கி, நான் " நீங்கள் போய் அம்மாவை அழைத்து வாருங்கள் " என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவரிடம் செக்கப்பிற்கு ? சென்றால் , அவர்கள் திகைத்து, மலைத்து, அலறி, "கலா, உனக்கு சீரியஸ்னே புரியவில்லையா? உடனடியாக சேலம் போ " என்று [ 30 k.m from there } பதற "சரி " என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டிற்குள் நுழைந்தால்,,,,மாமியார் [ ஒரு ஸ்கூல் H.M ] தன் செல்ல மருமகனுக்கு காபி போட்டுக் கொண்டிருக்கிறார்.
நிலைமை புரிய , கை கால் உதறலெடுக்க என் அம்மா போட்டது போட்டபடி ,ஓடி வந்து ஜீப்பில் ஏற [ என் தந்தை எங்கோ வெளியில் சென்றிருந்தார் .] ஜீப் ட்ரைவர் எமர்ஜென்சி விளக்கை போட்டுக் கொண்டு பறந்தார்.
மருத்துவ மனையை அடையும்பொழுது மணி 8.35. கார்த்தி பிறந்தது 8.45.மருத்துவ மனையே அலறிவிட்டது.
விஷயம் கேள்விப்பட்டு அலறிக் கொண்டு தந்தை ஓடிவர , எல்லாம் அவசர கதிதான்.
கார்த்தியின் பாதிப் பிறப்பு ரோட்டில்தான்.
NOW,
Aug.26. 2005. time 8.45. B'lore.
karthik and i have breakfast and karthik leaves home by 8.50,a.m the exact time ,,,i saw his face on 14.11 .1981.
travels by bike. accident at 9 a.m. taken in an auto. reaches hospital and ***********.
பாதி பிறப்பும் ரோட்டிலே. பாதி *றப்பும் ரோட்டிலே.
என்ன ஒரு வேதனையான ஒற்றுமை?
இன்று என் செல்ல மகன் பிறந்த நாள். ...... ........ஊமையாக நான்
2008/11/06
இந்த சர்ச்சை தீரவே தீராது.இதன் பிண்ணனி என்ன? இதன் தாத்பரியம் என்ன ? என்பது புரியாமல் ஒரு தாழ்வு மனப்பாண்மையில் இந்த நூலை பார்த்து பயந்து நாம் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.
நான் ஒன்றும் மெத்தப் படித்தவளும் அல்ல . மேதாவியும் அல்ல. ஆனால் . எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். [ அனைத்து வகையான விமரிசனங்களும வாக்கு வாதங்களும் வரவேற்கப் படுகின்றன ]
முன்னொரு காலத்தில், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற கல்லூரிகளும் இல்லை. இப்போது இருப்பது போல் கல்வித் துறை, மருத்துவ துறை, மின்வாரியம் என்று அரசாங்க அங்கங்கள் இல்லை. அதனால், ஒரு தொழிலுக்கு ஒரு குடும்பம் என்று வகைப் படுத்த பட்டனர்.
இந்த நிலையில்தான் அவரவர்க்கு உரிய பொறுப்பை நினைவில் நிறுத்த ஒரு கருவியாகத்தான் இந்த பூணூலை நடைமுறைப் படுத்தினர்.
பிராமணர்களுக்கு 5 நூல்.
அவர்களுடைய கடமைகள் 1] தன் குடும்பத்தை காத்தல், மன்னருக்கு ஆலோசகர், படிப்பு சொல்லித் தரும் ஆசான் [மந்திரங்கள் ], கோவில் கைன்கரியம், என 5 கடமைகள். எனவே அவர்கள் 5 நூல் கொண்ட பூணூலை அணிவர்.
அடுத்து சத்திரியன்: 4 நூல்: கடமைகள் 4: தலையாய கடமை நாட்டை காப்பது. நாட்டில் எந்த ஒரு குடிமகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவனைக் காக்க தன் உயிரை தியாகம் செய்தாவது காப்பாற்றுதல் ,மற்றும் மேற் சொன்ன பிற கடமைகள்.
சத்திரிய பிரம்மசாரிக்கு மூன்று கடமைகள்.
அத்னால்தான், கந்த சஷ்டி கவசத்தில்,
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
என்று சொல்வது.
அடுத்த குலமாகிய வேளாண் பெருமக்கள். இவர்களுக்கு தாய் தந்தை குடும்பத்தை காத்தல் என்ற கடமையும், வேளாண்மை செய்து மற்ற குடிகளுக்கு உணவு தருவதும் ....ஆக அவர்கள் பூணூலில், இரண்டு நூல்கள்.
பெண்ணுக்கு மாங்கல்யமும் இதே கணக்குதான்.
ஆனால், காலப் போக்கில், பல பழக்கங்கள் மாறி விட்டன. என்னுடைய தாத்தா, பெரியப்பா இருவரும் இறுதி வரை பூணூல் அணிந்திருந்தனர். என் தந்தை மட்டும் தன் ஆங்கிலேய கல்லுரி கல்வியினால், பூனூல் அணிய வெட்கப் பட்டுக் கொண்டு கழ்ற்றி விட்டார். ஆனால், இன்னும் எங்கள் திருமண சடங்குகளில் ஒன்றாக வெள்ளி பூனூல் அணிவர். [ நான் ஜாதியை பற்றி சொல்ல விரும்பவில்லை. எனக்கும் கார்த்திகிற்கும் அது பிடிக்காத விஷயம் ]
ஆனால், காலம், பல விஷயங்களை மாற்றி விட்டது என் று கூறவருகிறேன்,.
இப்படி உண்மை ஒரு புறமிருக்க, பூணூல் ஒரு குலத்திற்கு சொந்தம் என்று அவ்ர்களும் '' ''பெருமையாக,, கர்வமாக '' '' நினைத்துக் கொள்ள , நாமும் அவர்களை பார்த்து ஒரு தாழ்வு மனப்பாண்மையில் மறுகுவதும்,,,
Gandhiji once said '' It's not that they feel superior, but that we feel inferior.''
என்ன ஒரு அருமையான பொன்மொழி.
அடுத்து திருநீறு:
இதுவும் நம் முன்னோர்களால் அறிவியல் பூர்வமாக ஒரு skin cream and powder என தோலை பாதுகாக்க பயன்படுத்தப் பட்டதே ஒழிய எந்த மத்மோ , கடவுளோ இதில் சம்பந்தப் படவேயில்லை.
காலம், + சில சுயநலவாதிகள செய்த தந்திரம் இது.
இன்றும் காயப் பட்ட இடத்தில் திருநீறை பூசி குணமாக்குதல வழக்கத்தில் உண்டு.
ஏற்கனவே குழம்பிக் கொண்டிருக்கும் நம் நாட்டில், இன்னும் புதுப்புது சர்ச்சைகளும் சண்டைகளும் வேண்டாமே என்பதற்கே இந்த பதிவு
அன்பிலும் அன்பான கார்த்தியுடன்+ கார்த்திக் அம்மா
2008/10/30
The Best Joke of the Year
" " நான் மத சார்பற்றவன்" "
ஐயோ, ஐயோ, என்ன சொல்வது????????
2008/10/06
அவசியம் இந்த பதிவை படித்து விட்டு முடிந்தவரை பிறருக்கும் அனுப்புங்கள்.
இது என் சொந்த கதை, ஆனால் , நாளை உங்கள் கதையாக மாறவேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.
நான் 1983 ல் ஒரு நிலம் வாங்கினேன். அந்த நிலத்தை " கிரயம்" [registration] செய்து பத்திரத்தை [documents], பத்திரமாக [ஜாக்கிரதையாக ] கொண்டுவந்து விட்டில் வைத்துக் கொண்டுவிட்டேன். இப்போது, சுமார் 25 வருடங்களுக்கு பிறகு, அந்த நிலத்திற்கு வேலி போட செல்லும் போது, சர்வேயர் வைத்து நிலம் அளக்க வேண்டும் என்று பக்கத்து நிலத்துக்கு உரியவர் [ இத்தனைக்கும் நெருங்கிய சொந்தம் ] சொன்னதால், வி.ஏ.ஒ. ஆபிஸ் போனால், அந்த வி.ஏ.ஒ. ஒரு காலண நோட்டைsome good old ,tattered record எடுத்து நான்கு பக்கங்கள் திருப்பி பார்த்து விட்டு, '' நிலம் உங்கள் பேரிலேயே இல்லை. '' என்று திருவாய் மலர்ந்தார். அதிர்ந்து போன நான், என் கிரய பத்திரம் இது என எடுத்து காட்டினாலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ''எங்கள் ரெகார்டில் இப்படித்தான் இருக்கிறது '' என்று அடித்து கூறி விட்டார்.
பிறகு ஈ.சிE.C [ENCUMBERANCE CERTIFICATE ]என்ற ஒன்றையும்Rs 4000 செலவு செய்து அதிலும் என் பெயர்தான் இருக்கிறது என்று வாதாடியும் அவர் காட்டிய தெனாவெட்டு !!
என்னை கேட்ட கேள்விகள் ???? ஒரு மடத்தனமான கேள்வியை கேட்டுவிட்டு ''உங்களுக்கு இது கூட புரியவில்லையா ?'' '' என்று நக்கல் வேறு. நீங்கள் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் ,எந்த கலெக்டரிடம் போய் சொன்னாலும் கடைசியாக என்னிடம்தான் வரவேண்டும் . நான்தான் ரெகார்டில் பெயர் மாற்றித் தர முடியும் '' என்று சவால் விட்டுள்ளார். அவர்களாகவே ஏதோ ஒரு பெயரை எழுதி கொள்வார்களாம். அதுதான் சட்டப் படியும் செல்லுமாம். ''''உண்மை.''
இந்த சமயத்தில்தான், விசுவின் அரட்டை அரங்கம் பார்க்க நேர்ந்தது .அதில் ஒருவர் இதே கதையை சொல்லி, '' இவர்களிடம் சட்டம் பேசினால் காரியம் நடக்கவே நடக்காது. செய்ய வேண்டிய ''பரிகாரங்களை '' [கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொடுத்து ] பட்டா எண் [பட்டா நம்பர் ] பெற்றுக் கொள்ளுங்கள் .அப்போதுதான் நிலம் உங்களுக்கு சொந்தம் என்று சொன்னார்.
இந்த பதிவின் நோக்கமே இதுதான். கஷ்டப் பட்டு லோன் வாங்கி ஈ.எம்.ஐ. கணக்கு செய்து, வட்டி கட்டி நாம் வாங்கும் நிலத்திற்கு, இவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. இளைய சமுதாயமே, உங்களுடைய கணினி அறிவு எல்லாம் அந்த எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்த v.a.o. விடம் செல்லாது. எனவே எடுக்க வேண்டிய , கொடுக்க வேண்டிய எல்லாம் முறைப் படி செய்து உங்கள் சொத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள். பி.கு.
இந்த லஞ்சம் கொடுப்பது , வாங்குவது என்ற விசயத்திற்கு நான் மிகப் பெரிய எதிரி. இன்னும் லஞ்சம் கொடுக்கவும் இல்லை. பட்டா நம்பர் என் பெயரில் மாறவும் இல்லை ..... so my dearest friends, please take all precautionary measures to ensure that the land is yours. Regarding flats, 'what must be done?' ...better get to know everything before you buy anything, be it land or flat. I guess there is little problem with flats and especially, with the reputed builders we have no problems at all.
Wishing you all the best
2008/10/03
IDBI--Ad
இரு சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பந்து ஒரு புதருக்குள் விழுகிறது. எடுக்க போனால், ஒரு யானை. பையன் பயந்து பின்வாங்குகிறான். யானை அந்த பந்தை அவனிடம் தள்ளிவிட்டு காட்டுக்குள் போய்விடுகிறது. அப்பாடா, என்று ஆட்டத்தை தொடரலாம் எனும்போது மீண்டும் யானை.
இப்போது தன் செல்ல குட்டியுடன்......அவரும் பந்து விளையாடுவாராம்,,,, இவர்கள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். குட்டி யானையார் பின்காலால் வேறு பந்தை உதைப்பாராம்...ஆஹா ...என்ன ஒரு அருமையான விளம்பரம்.....அந்த தாய் யானை தன் குட்டி அந்த விளையாட்டை அனுபவிக்க எண்ணுவது ...அருமையான தாய்மை. இப்படியெல்லாம் விளம்பரங்கள் கொடுக்கலாமே .. அதை விட்டு, கையகல துணியுடன் , அரை நிர்வாண பெண்களை ஆட விட்டு.......
இனியாவது இது போன்று மனதை மெல்லிதாக தாலாட்டி செல்லும் விளம்பரங்களை தாருங்கள்
இனிமையிலும் இனிமையான
கார்த்திக்
2008/09/26
CHENNAI: A lecturer of Anna University was killed in a road accident here on Thursday.
Police said Prema Rajeshwari (39) of Velachery working in the Computer Science Department was riding a moped when a private bus knocked her down on the Sardar Patel Road. Though the victim was wearing a helmet, she suffered a head injury and died after admission to Royapettah Government Hospital.*******
No comments
karthik amma
