About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2023/02/04

The great Indian Kitchen

 இந்த படத்தின் மலையாள மொழி யிலேயே பார்த்தேன்.

அப்போதே எழுத நினைத்தேன்.

இப்போது தமிழ் வடிவம் வந்துள்ளது.

எல்லோரும் பாராட்டும் இந்த படத்தை பற்றி எனக்கு மாறுபட்டகருத்துக்கள்.

ஒரு ஆணாகட்டும்.பெண்ணாகட்டும்.இவர்களுக்கு இந்த வேலை என்று வயது, உடல் வாகு ,உடல் வலிமை ,மன நிலை என்பதை பொறுத்துதான் நம் முன்னோர்கள் விதி முறைகளை வகுத்தனர். .இவர்களால் இந்த வேலைகளை செய்ய முடியும் என்று ஆராய்ந்து அறிந்து வேலைகளை ஒதுக்கினர்.

இதில் ஜாதி, மதம் போன்ற பேதங்கள் வரவில்லை.

ஜெனட்டிக் ,dna போன்ற விஷயங்கள் கணக்கில் எடுத்து கொள்ள பட்டன.

பெண்ணுக்கு என்று சில உடல் கட்டுப்பாடுகள் இருக்கிறது.

அதை மீறி நானும் ஆணுக்கு சமம் என்று உழைப்பை மேற்கொண்டவர்களில் பலர் தோல்வியையே கண்டனர்.

ஒரு பெண் மட்டுமா திரும்ப திரும்ப ஒரே மாதிரி வேலைகளை செய்கிறாள்?

ஆணும்தான் ஒரே ரொடீன் வேலைதான்.

தினமும் ஆபிஸுக்கு ஓடுவது.

பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து அலுத்து போய் களைப்பாய் உட்காருவது .

அடுத்த நாள் மீண்டும் ஓடு.

நான் ஆசிரியையாக இருந்தவள்.

தினமும் 5 மணிக்கு எழுந்து சமைத்து கார்த்தி செந்திலுக்கு சாப்பாடு கட்டி ,பள்ளிக்கு அனுப்பி விட்டு ,கணவரை அனுப்பி விட்டு ,அவசர அவசரமாய் ரெடியாகி பள்ளிக்கு போய் அதே poem ,அதே lesson ,அதே ஜோக்ஸ் ,மாத தேர்வு,விடைத் தாள் திருத்துதல்,+2 விடைத்தாள் திருத்த 50 கி.மீ பயணம் செய் என்று எத்தனை வருடங்கள்????????

பெண்தான் சமைக்க வேண்டும்.பெண்தான் எல்லா வீட்டு வேலைகளையும் கவனித்து கொள்ள வேண்டும்.குழந்தைகளின் homework பார்க்க வேண்டும்.

நான் பெண் என்பதால் நான் மட்டும்தான் செய்ய வேண்டுமா என்று ''போர்க்கொடி '' உயர்த்தி இருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது.(நான் பெண் என்றாலும் 120 ஆசிரியர்கள் மத்தியில் நம்பர் 1 என்று சாதித்து காட்டியுள்ளேன்.)

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் .குழந்தைகள் மன நிம்மதி இழந்திருப்பார்கள். 

ஆஹா தியாகம் , அன்பு என்ற வார்த்தையில் சுய மரியாதையை அடகு வைக்கிறீர்கள் என்று வாதிடுகிறார்கள்.

நானும் பெண்ணுரிமை போராளிதான்.ஆனால் குடும்பம்,குழந்தைகள் என்று வந்த போது எனக்கு மகன்கள் மட்டுமே சர்வம்.

இந்த திரை படத்தில் அந்த பெண் தாய் ஆவது பற்றி பேசவில்லை.

சரி அப்படி அந்த பெண் வெளியே வந்து சாதித்தது என்ன?

ஒரு நாள் தீராத தனிமை.

அந்த ஆண்  எந்த விதத்தில் பாதிக்க பட்டான்?

அவனுக்கு அடுத்த கல்யாணம்.அதே பழைய வாழ்க்கை.

இன்று எத்தனை டைவர்ஸ்.

நீதிமன்றம் சொல்கிறது.உங்கள் ஈகோவிற்கு குழந்தைகளை பலி கொடுக்கிறீர்கள் என்று.

ஒரு குடும்பம் என்று வரும்போது ஆணும் சரி.பெண்ணும் சரி.பல விஷயங்களை விட்டு கொடுத்தால்தான் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

நான் கிரிஞ்சுதான்.

பூமர்தான்.

ஆனால் நான் பழம் பட்டிக் காடாகவே இருக்க விரும்புகிறேன்.

2 comments:

Anonymous said...

So the wife has to cook in two different ways for the father in law, and husband.
She has to stick her hand in the sink with dirty water (sewage), and
she has to be insulted by the husband for having her period.
Looks like you are old fashioned.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

1.when u hide your identity ,there itself u fail miserably.
2.when you can read Tamil ,you could have commented in Tamil itself.
3.one child likes idly,and the other child likes noodles ,i would do both which gives me immense happiness.
4.still in many homes,during period time women are not allowed to enter the pooja room.And in temples too.The scientific reason behind it is that women need complete rest and good food in such days.
5.there are so many easy ways to clean the sink and i wondered ,how foolish this lady is,without using drainage cleaning powders.
6.It seems that you have not read my post fully and deeply.
I have declared that i am a cringe,a BOOMER,AND ''old fashioned''.
I have clearly defined that i want to be ''old fashioned'' if that makes my family happy.
If you are very modern and courageous 'REVEAL YOUR IDENTITY''.
OR ELSE SHUT YOUR DIRTY MOUTH AND KEEP QUIET.