About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/01/30

 எத்தனையோ   தாய்மார்கள் கெஞ்சியபோதும், போராடிய போதும்    கண்டு  கொள்ளாத அரசு  இப்போது  12  சிலிண்டர்கள் தரப் போகிறதாம் .அப்போது முடியாதது இப்போது நாட்டு    இளவரசர்  சொன்னவுடன் கொடுக்க முடிகிறது.என்ன நியாயமோ?

2014/01/17

Schumacher  and Karthik
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஷூமேக்கர்  ஒரு பெர்ய கார் பந்தய வீரர்.அவர் பனிச் சறுக்கு விளையாட்டின் போது சறுக்கி விழுந்து உயிருக்கு போராடி வருகிறார்.
கார்த்தி  U .S  சென்றிருந்த போது  இதே பனி சறுக்கு விளையாட்டின் போது தவறி விழுந்த வேகத்தில் கையிலிருந்த குச்சிகள் இரண்டும் எங்கோ போய்விட , சறுக்கிக் கொண்டே வந்திருக்கிறான்.எப்படியோ சமாளித்து எழுந்து நின்று விட்டிருக்கிறான்.
இதை என்னிடம் அவன் விவரித்த போது ,'' கண்ணப்பா ,பயந்து விட்டாயா ,இறந்து விடுவோம் என்று நினைத்தாயா?''
என்று கேட்டேன்.
அதற்கு கார்த்தி ''இல்லை அம்மா , எப்படி சமாளிப்பது என்றுதான் யோசித்தேன் '' என்று பதில் சொன்னான்.
அப்படி பனிசறுக்கில் தப்பியவன் பைக் விபத்தில் பலியானான்.
நேர்மாறாக 300 கி.மீ வேகத்தில் வண்டிஓட்டிய போதெல்லாம் விபத்தில் சிக்காத ஷூமாக்கர்  பனி சறுக்கில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார்.
What an IRONY
ஷூ மேக்கர் கார்த்திக்கிற்கு மிகவும் பிடித்தவர்.
விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது?
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2014/01/15

மன்மோகன் ஆட்சியின் அவலம்
திடீரனெ  ஒரு S .M .S வந்தது.கேஸ் புக்கிங் ரத்தாகிவிட்டது என்று..தொலைபேசியில் அந்த அலுவலகத்தை அழைத்தால் போனை  தொடவே மாட்டார்கள்.
சரி என்று நேராக அலுவலகம் சென்றால் எனக்கு முன்பே ஓரு 25 பேர் கத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் அதே போல் செய்தி.
விஷயம் என்னவென்றால்  9 உருளை வாங்காதவர்களுக்கும் மான்யமில்லா விலையில் பில் போட்டு அனுப்பியுள்ளார்கள்.தவறை உணர்ந்த அவர்கள் சத்தமில்லாமல் சரி செய்திருக்கலாம். அதை விட்டு எல்லோருக்கும் செய்தி அனுப்பி எல்லோரையும் குழப்பி.  
அமைச்சர் ஆதார் அட்டை அவசியமில்லை என்கிறார். துணை அமைச்சரோ கண்டிப்பாக ஆதார் அட்டை வேண்டும் என்கிறார்.
என்னதான் நடக்கிறது?
மக்கள் மிகவும் குழம்புகிறார்கள்.காங்கிரசுக்கு ஓட்டு  போடலாம் என்று நினைப்பவர்கள் அந்த நினைவை மறு பரிசீலனை செய்கிறார்கள்.
தேவயாணி விஷயமும்  எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது .
ராகுலின்  கார் பெட்ரோல்  இல்லாமல் நடு வழியில் நின்று விட்டது என்ற செய்தி அவமானமாக இருக்கிறது.
இப்போது பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது. தேர்தல் வந்தால் விலை குறையும் .
மன்மோகன் வந்த போது சந்தோஷப் பட்ட அனைவரும் இப்போது வெறுப்பில் உள்ளனர்.
வரும் அடுத்தவர் என்று நம்பப்படும் அவர் ஹிட்லராக இருப்பாரா அல்லது நல்லவராக இருப்பாரா என்ற சந்தேகம் .எதிர்காலம் மிகவும் பயமுறுத்துகிறது.