About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/01/15

மன்மோகன் ஆட்சியின் அவலம்
திடீரனெ  ஒரு S .M .S வந்தது.கேஸ் புக்கிங் ரத்தாகிவிட்டது என்று..தொலைபேசியில் அந்த அலுவலகத்தை அழைத்தால் போனை  தொடவே மாட்டார்கள்.
சரி என்று நேராக அலுவலகம் சென்றால் எனக்கு முன்பே ஓரு 25 பேர் கத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் அதே போல் செய்தி.
விஷயம் என்னவென்றால்  9 உருளை வாங்காதவர்களுக்கும் மான்யமில்லா விலையில் பில் போட்டு அனுப்பியுள்ளார்கள்.தவறை உணர்ந்த அவர்கள் சத்தமில்லாமல் சரி செய்திருக்கலாம். அதை விட்டு எல்லோருக்கும் செய்தி அனுப்பி எல்லோரையும் குழப்பி.  
அமைச்சர் ஆதார் அட்டை அவசியமில்லை என்கிறார். துணை அமைச்சரோ கண்டிப்பாக ஆதார் அட்டை வேண்டும் என்கிறார்.
என்னதான் நடக்கிறது?
மக்கள் மிகவும் குழம்புகிறார்கள்.காங்கிரசுக்கு ஓட்டு  போடலாம் என்று நினைப்பவர்கள் அந்த நினைவை மறு பரிசீலனை செய்கிறார்கள்.
தேவயாணி விஷயமும்  எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது .
ராகுலின்  கார் பெட்ரோல்  இல்லாமல் நடு வழியில் நின்று விட்டது என்ற செய்தி அவமானமாக இருக்கிறது.
இப்போது பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது. தேர்தல் வந்தால் விலை குறையும் .
மன்மோகன் வந்த போது சந்தோஷப் பட்ட அனைவரும் இப்போது வெறுப்பில் உள்ளனர்.
வரும் அடுத்தவர் என்று நம்பப்படும் அவர் ஹிட்லராக இருப்பாரா அல்லது நல்லவராக இருப்பாரா என்ற சந்தேகம் .எதிர்காலம் மிகவும் பயமுறுத்துகிறது.

No comments: