About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2023/02/20

widow

 இந்த வார நீயா நானா வில் விவாதிக்க பட்ட பொருள் single parent .

கணவனை இழந்த பெண்கள் பற்றி.(single parent )மனைவியை இழந்த கணவன்கள் பற்றி பேச்சே இல்லை.

விதவைகள் என்று பேசினால் எதிர்ப்பு வரும் என்பதால் இப்படி தலைப்பு.

தமிழில்தான் '' விதவன் '' என்ற சொல் இல்லை.

பேசிய பெண்கள் அனைவரும் தங்களின் கஷ்டங்களை, தங்களுக்கு உடன் பிறந்தவர்கள்,சொந்தங்கள் தரும் பிரச்சினைகள் பற்றியும் ,சமுதாயத்தில்,வேலை பார்க்கும் இடங்களில் படும் இன்னல்களையும் பேசினார்கள்.

நானும் ஒரு தனி மனிதிதான்.என்னை விதவை என்று சொல்லிக் கொள்ளவே மாட்டேன்.

எவனோ ஒருவன் என் பெற்றோரிடம் பேரம் பேசி வரதட்சினை ஒத்து வந்தால் பெரிய தியாகி போல் தாலி கட்டுவான்.வரதட்சினை பேரம் படியாவிட்டால் பக்கத்து வீட்டு பெண்ணை பெண் பார்க்க போய்விடுவான்.

இப்படிப்பட்ட பிசினஸ் திருமணத்தை பற்றிய ஒரு வெறுப்புணர்வு எப்போதுமே எனக்கு உண்டு.

அந்த உத்தம புருஷன் போய் விட்டால் ஒரு பெண்ணுக்கு எத்தனை கொடுமைகள்?

அவள் வெளியே வர கூடாது..குடும்ப உறுப்பினர் யாராவது வெளியே போகும்போது அவள் அவர்கள் பார்வையில் படாத வாறு எங்காவது ஒளிந்து கொள்ள வேண்டும்.

எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள கூடாது.

அது வரை '' ஆஹா அவரின் படிப்பென்ன?

வேலை என்ன?

திறமை என்ன?

சாமர்த்தியம் என்ன?

ஆளுமை என்ன ?

சம்பாத்தியம் என்ன ?'' ''

என்று இமயமலையின் உச்சியில் வைத்து கொண்டாடிய அனைவரும் அப்படியே தலை கீழாக மாறி 

''உனக்கு என்ன தெரியும்?

நாங்கள் சொல்வது போல்தான் நீ நடக்க வேண்டும் என்று கட்டளை இடுவதென்ன ?

3, 4 வயது குழந்தை கூட என்னை இளக்காரமாக ,கேவலமாக பார்த்து முகவாய்  கட்டையை தோளில் இடித்துக் கொண்டு சென்ற கொடூரம் என்ன?

ஒரு நல்ல உடை உடுத்தி வந்தால் அந்த தாயே வெறிக்க பார்த்த அவலம் என்ன ?

என் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட நீதான் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்ற அகங்காரம் என்ன?

எத்தனை கொடுமைகள்?

எத்தனை சிறுமைகள்?

எத்தனை அவமானங்கள்?

இன்னும் மாறவில்லையா என்று நெறியாளர் ஒன்றும் அறியாதவர் போல் கேட்கிறார்.

நகரங்களிலும் இப்படியா என்று வியக்கிறார்.

படித்த குடும்பம்.

நாகரிகமான குடும்பம் .என்ற குடும்பத்தில்தான் கொடுமைகள் அதிகம்.

போதும் பட்டது என்று வீட்டிற்குள் முடங்கும்  நிலைக்கு தள்ளும் இந்த சமுதாயம்.

போராட்டம்.

போராட்டம்.

மனம் சலித்து விட்டது.

உறவை வெறுத்து விட்டது.

கலா கார்த்திக்

2023/02/19

House rent

 வீட்டு வாடகை 40 % உயர்ந்துள்ளதாக தரவுகள் சொல்கின்றன.

வீட்டு விற்பனையும் உயர்ந்துள்ளது.

ஆனால் விலைதான் பயமுறுத்துகிறது.

வீட்டு கடன் வட்டியும் உயர்ந்துள்ளது.

சாமான்ய மக்களின் கத்தி?????????

2023/02/18

vaththi and so

இப்போதைய படங்கள் : ஒரு விமர்சனம் : 

ஜெய்பிம் 

வாத்தி 

கர்ணன் 

அசுரன்

அயலி 

இந்த படங்களில் சொல்லப் பட்ட கருத்துக்களும் காட்சிகளும் 2023 ல் நடக்கிறதா?

or ,அட் தி லீஸ்ட் 2000 த்திலாவது நடக்கிறதா?

என் அம்மா 1933 ல் பிறந்தவர் .

ஆங்கிலேய அரசு.

வீடு வீடாக சென்று பெண்பிள்ளைகளை இழுத்து வந்து பள்ளியில் சேர்த்தனர்.சில பெண்கள் விருப்பம் இல்லாமல்தான் பாதியில் படிப்பை நிறுத்தினர்.

என் அம்மாவின் தோழிகள் அத்துணை பேரும் அரசு பணியில் சேர்ந்தனர்.

என் உறவு பெண் ஒருவர் 14 வயதில் கணவனை இழந்தார் .

ஆனால் அவருடைய அப்பா அந்த பெண்ணை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து அரசு பணியில் சேர்த்தார்.

இதெல்லாம் நடந்தது 1950 களில் .

என்னவோ ' பொட்டை பிள்ளையாம் .'படிக்க கூடாதாம்.வேறு ஊருக்கு போய் படிக்க கூடாதாம்.

19ம் நூற்றாண்டின் கதை இது.இதை இப்போது எடுத்து ?????????

இந்த காலத்து பெண்கள் (சிறுமிகள்) விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து ,தலித்துகள் உரிமைகள் மறுக்க படுகின்றன.கல்வி கற்க தடை.

எங்கோ ஒரு இரண்டு சம்பவங்கள் நடக்கலாம்.ஆனால் இன்றைய நிலை என்ன????

90% பட்டியலினத்தவர் நன்கு படித்து மிக மிக நல்ல வேலையில் இருக்கின்றனர்.அவர்களுடைய வாழ்க்கை தரம் மிக மிக உயர்ந்து உள்ளது.

ஜெய் பீம் படத்தில் வருவது போல் எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளன???

சரி .RIGHT .அப்படி அவர்களின் பரிதாப நிலை இது .அவர்களின் கஷ்டங்களை தோலுரித்து காட்டுகிறேன் பார் என்று ஆர்ப்பரித்த டைரக்டரும், அதில் நடித்த அந்த நடிகர்களும் பாதிக்க பட்டவர்களுக்கு என்ன உதவி செய்தனர்?

ஒரு வீடு கட்டி கொடுத்தாரா?

ஒரு 4 பையன்களை தத்து எடுத்து படிக்க வைத்தனரா?

பலரின் நன்கொடையில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அவர்களின் உழைப்பில் வரும் நல்லவைகளை தானே செய்தது போல் தம்பட்டம் அடித்து கொள்ள மட்டும்தான் செய்கின்றனர்.

அதுவும் அல்லாமல் நாட்டு நடப்பு என்ன என்பதே கூட தெரியவில்லை இவர்களுக்கு.

ஒரு படத்தில் ,'' இலவச கல்வி வேண்டும்.இலவச மருத்துவம் வேண்டும் '' '' என்று ஒரு நாயகன் முழங்குகிறார்.

அட கொடுமையே...அரசு பள்ளிகளும், அரசு மருத்துவ மனைகளும் இருப்பதும் இவர்களுக்கு தெரியாதா????

நாளைக்கு சி .எம் ஆக வேண்டும் என்ற கனவில் மிதப்பவர்களுக்கு இது கூட தெரியவில்லை.இது போன்ற அபத்தங்கள் கொட்டி கிடக்கின்றன.

இதில் பரிதாபம் என்ன என்றால் இதை பார்க்கும் ஒரு இளைஞர் கூட்டம் ,கத்தி எடுத்து கொண்டு அலைவதும்,பஸ் கண்ணாடியை உடைப்பதும்,நாங்களும் காதலிக்கிறோம் என்ற கருமத்தை செய்து விட்டு ஆணவ கொலையில் உயிரை விடுகின்றன.

அல்லது ,காதலிக்கும் போது தெரியாத பொருளாதார நிலை ,கல்யாணம் செய்த பின் அந்த பெண்ணுக்கு தெரிய அவள் அவனை விட்டு வேறு ஒருவனுடன் ஓடுகிறாள்.

லவ் டே படத்திலும் செல் போன் தான் பிரசினை.ஆனால் '' ''நீ எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவில் இரு.நானும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உறவில் இருக்கிறேன் ''என்று சொல்லும் படம் கொண்டாட படுகிறது.

ஆனால் செல் போனால்  எத்தனை தீமைகள் என்று சொன்ன ஒரு படத்தை ஒரு ஆங்கில நாளிதழ் அது எப்படி அப்படி படம் எடுக்கலாம் .எங்கள் இளைய சமுதாயத்தின் சுதந்திரம் என்ன ஆகும் என்று கதறுகிறது. 

பி .கு :இந்த பதிவிற்கும் முகத்தை காட்டிக் கொள்ள தைரியமில்லாத ஒரு ஐந்து நான் ''old fashioned '' என்று கருத்திடும்.

உண்மை என்ன என்று யோசித்து பாருங்கள்.

இளைய சமுதாயத்தை உணர்சசி பூர்வமாக தூண்டி விட்டு அவர்களின் எதிர்காலத்தை கெடுத்து நீங்கள் 40 கோடி லாபம் சம்பாதிக்க வேண்டாம்.

2023/02/04

The great Indian Kitchen

 இந்த படத்தின் மலையாள மொழி யிலேயே பார்த்தேன்.

அப்போதே எழுத நினைத்தேன்.

இப்போது தமிழ் வடிவம் வந்துள்ளது.

எல்லோரும் பாராட்டும் இந்த படத்தை பற்றி எனக்கு மாறுபட்டகருத்துக்கள்.

ஒரு ஆணாகட்டும்.பெண்ணாகட்டும்.இவர்களுக்கு இந்த வேலை என்று வயது, உடல் வாகு ,உடல் வலிமை ,மன நிலை என்பதை பொறுத்துதான் நம் முன்னோர்கள் விதி முறைகளை வகுத்தனர். .இவர்களால் இந்த வேலைகளை செய்ய முடியும் என்று ஆராய்ந்து அறிந்து வேலைகளை ஒதுக்கினர்.

இதில் ஜாதி, மதம் போன்ற பேதங்கள் வரவில்லை.

ஜெனட்டிக் ,dna போன்ற விஷயங்கள் கணக்கில் எடுத்து கொள்ள பட்டன.

பெண்ணுக்கு என்று சில உடல் கட்டுப்பாடுகள் இருக்கிறது.

அதை மீறி நானும் ஆணுக்கு சமம் என்று உழைப்பை மேற்கொண்டவர்களில் பலர் தோல்வியையே கண்டனர்.

ஒரு பெண் மட்டுமா திரும்ப திரும்ப ஒரே மாதிரி வேலைகளை செய்கிறாள்?

ஆணும்தான் ஒரே ரொடீன் வேலைதான்.

தினமும் ஆபிஸுக்கு ஓடுவது.

பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து அலுத்து போய் களைப்பாய் உட்காருவது .

அடுத்த நாள் மீண்டும் ஓடு.

நான் ஆசிரியையாக இருந்தவள்.

தினமும் 5 மணிக்கு எழுந்து சமைத்து கார்த்தி செந்திலுக்கு சாப்பாடு கட்டி ,பள்ளிக்கு அனுப்பி விட்டு ,கணவரை அனுப்பி விட்டு ,அவசர அவசரமாய் ரெடியாகி பள்ளிக்கு போய் அதே poem ,அதே lesson ,அதே ஜோக்ஸ் ,மாத தேர்வு,விடைத் தாள் திருத்துதல்,+2 விடைத்தாள் திருத்த 50 கி.மீ பயணம் செய் என்று எத்தனை வருடங்கள்????????

பெண்தான் சமைக்க வேண்டும்.பெண்தான் எல்லா வீட்டு வேலைகளையும் கவனித்து கொள்ள வேண்டும்.குழந்தைகளின் homework பார்க்க வேண்டும்.

நான் பெண் என்பதால் நான் மட்டும்தான் செய்ய வேண்டுமா என்று ''போர்க்கொடி '' உயர்த்தி இருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது.(நான் பெண் என்றாலும் 120 ஆசிரியர்கள் மத்தியில் நம்பர் 1 என்று சாதித்து காட்டியுள்ளேன்.)

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் .குழந்தைகள் மன நிம்மதி இழந்திருப்பார்கள். 

ஆஹா தியாகம் , அன்பு என்ற வார்த்தையில் சுய மரியாதையை அடகு வைக்கிறீர்கள் என்று வாதிடுகிறார்கள்.

நானும் பெண்ணுரிமை போராளிதான்.ஆனால் குடும்பம்,குழந்தைகள் என்று வந்த போது எனக்கு மகன்கள் மட்டுமே சர்வம்.

இந்த திரை படத்தில் அந்த பெண் தாய் ஆவது பற்றி பேசவில்லை.

சரி அப்படி அந்த பெண் வெளியே வந்து சாதித்தது என்ன?

ஒரு நாள் தீராத தனிமை.

அந்த ஆண்  எந்த விதத்தில் பாதிக்க பட்டான்?

அவனுக்கு அடுத்த கல்யாணம்.அதே பழைய வாழ்க்கை.

இன்று எத்தனை டைவர்ஸ்.

நீதிமன்றம் சொல்கிறது.உங்கள் ஈகோவிற்கு குழந்தைகளை பலி கொடுக்கிறீர்கள் என்று.

ஒரு குடும்பம் என்று வரும்போது ஆணும் சரி.பெண்ணும் சரி.பல விஷயங்களை விட்டு கொடுத்தால்தான் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

நான் கிரிஞ்சுதான்.

பூமர்தான்.

ஆனால் நான் பழம் பட்டிக் காடாகவே இருக்க விரும்புகிறேன்.