About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2010/10/29

என் வலைப் பதிவை படித்தவர் [ இப்படியும் கூட திடீர் திடீர் என யாராவது என் பதிவை படித்தால்தான் உண்டு. ], ,
என்னிடம் சொன்னார். 'உங்களால் இன்னும் சிறப்பாக எழுத முடியும் . ஏன் இப்படி ? '' என்று கேட்டார்.

நான் என்னை பற்றி எழுதவோ அல்லது என் திறமையை வெளிப்படுத்தவோ எழுதுவதில்லை.
கார்த்திக் ஆரம்பித்த வலைப்பதிவு நின்று விடக் கூடாதே என்றுதான் எழுதுகிறேன். அதுவும், அவன் போலவே எழுத வேண்டும் என்று ஆரம்பித்து, முடியாமல் போனதால், என்னுடைய பாணியில் எழுதுகிறேன்.
எத்தனை திறமைகள், எத்தனை சாதனைகள் , [ எல்லோரும் இன்று வலை பதிகிறார்கள் , ...இதெல்லாம் ஒரு சாதனையா என்று கேட்கலாம் ...]எந்த வேலையை, எந்தசூழ்நிலையில், எந்த வயதில் செய்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அது சாதனையா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும்.
அப்படி , வலைப் பதிவு என்பது பற்றியே அதிகம் பேர் அறிந்திராத போது, எழுத ஆரம்பித்தவன் கார்த்திக். 1999 லேயே மார்பிங் செய்தவன் அவன்.
எல்லாம் இப்படியாகி விட்டதே .இன்று காலையில் என்னிடம் பேசிய அவன் கல்லூரி நண்பர் இதைத்தான் கூறினார்.
கார்த்தியின் நினைவாக வேறு எதுவும் செய்யாத கோழையாக, கையாலாகதவளாக இருக்கும் என்னைப் போன்ற ஒரு அம்மாவை பெற்ற கார்த்தி ஒரு பாவி.
அதனால், இந்த வலைப் பதிவை கார்த்தி எழுதுவதாக நினைத்து படித்தால், அவன் அவன் மறைவை ஒரு போலியான நிகழ்வாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள த்தான் இந்த முயற்சி .
அயர்ச்சியுடன்
கார்த்திக்+அம்மா

2010/10/07

Madhan & Tamil History

நமது தமிழக முதல்வர் வருத்தப்பட்டிருக்கிறார்.
'' '' ராஜராஜ சோழனின் நினைவிடத்தைக் கூட நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லையே '' '' என்று.
ஒரு இரண்டு வருடங்கள் பின்னோக்கி போவோம் ..
எழுத்தாளர் [ அவருக்கு இன்னும் எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. ] 'மதன் ' அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
வந்தார்கள் ,வென்றார்கள் என்று வட இந்திய வரலாறு பற்றி எழுதினிர்களே , ஏன்
தமிழக வரலாறு பற்றி எழுதவில்லை என்று.
அதற்கு அவர் சொன்னார். '' தமிழர் வரலாறு பற்றி போதிய ஆவணங்கள் இல்லை '' என்று.
அப்பப்பா, அவரை உண்டு இல்லைஎன்று ஆக்கி விட்டார்கள்.
'எப்படி சொல்லப் போயிற்று , ஆ ,நீ தமீழின துரோகி ,இன்னும் என்ன என்னவோ '
அதுவும் இந்த 'பொன்னியின்செல்வன் ' என்று ஒரு கூட்டம் இருக்கிறதே ...என்னவோ அவர்கள்தான் எல்லாம் அறிந்தவர்கள் போலவும் ...அடேயப்பா ,
குறைகுடங்கள் கூத்தடித்ததே ...அந்த குழுமத்தில் பாதி பேருக்கு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற ஒரு நாவல்தான் [ ஆம், அது ஒரு கதைதானே தவிர, சரித்திர புதினம் அல்ல ] மட்டும்தான் தெரியும் . அதற்குள் அனைத்தும் அறிந்து விட்டதாக ஆணவமாக திரு . மதன் அவர்களை நார் நாராக கிழித்தது அந்த கும்பல்.
நானும் எழுதினேன்.
மதன் சொல்வதுதான் சரி ' என்று. [ நானும் திரு.நீலகண்ட சாஸ்திரிகள் முதல் இன்னும் அனைத்து ஆசிரியர்களின் புத்தகங்களையும் படித்தவள் ]
அன்று கரகமாடியர்கள் இன்று நம் முதல்வரின் கூற்றுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? திரு .மதன் மிகவும் படித்தவர். அவரை விமர்சனம் செய்ய தகுதி உண்டா என்று யோசித்திருக்க வேண்டும் .
அவர் பெருந்தன்மையாக விட்டு விட்டார். '' இவர்கள் இவ்வளவுதான். இவர்களிடம் ஏன் பேச வேண்டும் ' என்று.
There is a saying:
It is foolish to argue with fools'' may be ...

2010/10/05

this was a comment posted by me to a friend's blog post.
I thought i shall paste it in karthik's blog too.so....

// '' i accept every word of yours.100 % correct.what SIMPLICITY!!!! if he is simple, why did he have such a grand marriage ? He is the greatest hypocrite i have ever seen.
'' valu, valavidu'' what a dialogue he speaks in 'Kuselan".
what does he do in real life.
Atleast , he could have stopped the 'palabisekam' and could have asked his fans to donate that milk to some orphanage.
Simply watching all the drama with a sarcastic smile, feeling glorious inside and laughing at the foolishness of the idiotic idiots [ the DIE-HARD FANS ].
AND FOR HIS DAUGHTER'S MARRIAGE, HE SAID THAT THERE WILL be a lot of problems if the fans over crowd.
Can they overcrowd now ?
He could have given a simple meals to his fans on her daughter's marriage. Atleast a sweet distributed to everyone.!.And these fools worship him like god.
And the most important point, for the animation part of the film, they hired a U.S company, and gave them a huge amount.They could have used our animation experts which would have given them a bright opening and an unexpectable remuneration.
want to write more and more about it.
But ....
anbudan,
karthik+amma

enthiran

நிறைய பேர் நிரய்யய்ய்ய எழுதி விட்டார்கள். எனக்கு ஆயிரம் சந்தேகங்கள்.தன் வீட்டு கல்யாணத்திற்கு ரசிகர்களுக்கு ஒரு பொதுவான அழைப்பு கூட தராத ரஜினி , அப்போது கூட்ட நெரிசலாகி விடும் என்று சொன்ன ரஜினி ,இப்போது எப்படி இவ்வளவு கூட்டத்தை அனுமதித்தார்?
தன் வீட்டு கல்யாணத்திற்கு, அந்த அந்த ஊர்களிலேயே ஒரு கல்யாண மண்டபத்தில், தன் ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கலாமே ?
அவருடைய ரசிகர்கள் [ வெறியர்கள் ] அதை தன் செலவிலேயே செய்திருப்பார்களே ?
இப்போது பால்குடம் தூக்கலாம் , கட் ஒவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யலாம்.
தன் அம்மா,குழந்தை பசியில் பாலுக்கு அழுதால் , கவலைப் படாத இந்த ஜன்மங்கள் குடம் குடமாக பாலை வீணாக கொட்டுவதை பார்க்க எரிச்சலாக இருந்தது.
நாம் முட்டாளாக தயாராக இருக்கும் போது நம்மை முட்டாளாக்க விரும்புபவர்களை நாம் ஏன் குறை சொல்ல வேண்டும்.?.
இதப் பற்றி மேலும் படிக்க
http://pitchaipathiram.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்
கார்த்திக்+ அம்மா