About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/06/30

நள்ளிரவு 12 மணி :
இந்தியா சுதந்திரம் பெற்ற நேரம் நள்ளிரவு 12 மணி.:
நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினோம்.
இன்னும் விடியவே இல்லை என்கிறார் ஒருவர்.
.......     .......
இப்போது எதற்கு இந்த நள்ளிரவு கொண்டாட்டம்?????????
காலையில் நடத்தினால் என்ன?
பெட்ரோல் விலையை இப்படித்தான் செய்து கொண்டிருந்தார்கள்.இப்போது நடைமுறை மாறியுள்ளது.
விடியற்காலை பொழுது நல்ல பொழுது.
அப்போது செய்திருக்கலாம்.
என்னவோ
தலையெடுத்ததெல்லாம் தண்டல்.
கார்த்திக் அம்மா

2017/06/25

ரஜினி படிக்காதவர் :
எதை வேண்டுமானாலும் பேசலாமா?
காமராஜ் படித்தவரா?
M .G .R படித்தவரா ?
கலைஞர் படித்தவரா ?
படிப்பு என்பது என்ன?
பேருக்கு பின்னால் நாலு பட்டம் போட்டுக்கொள்வதா ?
அப்படி பட்டங்கள் வாங்கி விட்டால் எல்லாமும் தெரிந்து விடுமா ?
M .B .B .S படித்தவருக்கு சட்டம் முழுதும் தெரியுமா
சட்ட வல்லுனருக்கு கட்டிட கலை தெரியுமா ?
கட்டிட கலை தெரிந்தவருக்கு மோட்டார் என்ஜின் பற்றி தெரியுமா?
ஆக படிப்பு என்பது பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.
மீதி விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களை நானும் ஏற்கிறேன் .
கார்த்திக் அம்மா

2017/06/24

தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதியவர்களில் 41% மட்டுமே தேர்ச்சி - கேரள விலிருந்து 79.5% தெலுங்கானா 77% ஆந்திரா 72.93%. Karnataka 72.85%. முதல் 25 ரேங்கில் தமிழகத்திலிருந்து ஒருவரும் பெற வில்லை. 
இது செய்தி.
 தொலைக்காட்சிகளில் கூவி கொண்டிருந்தார்கள்.
குரைத்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாடு அரசு பள்ளிகள் 'o ' தான் என்கிறார்கள்.
சரி.தமிழ்நாட்டில் CBSE பள்ளிகள் இல்லவே இல்லையா?????
 தரம் உள்ள வையாக அவை இல்லையா????
அந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் உள்ள ஒரே சிலபசைதானே படித்திருப்பார்கள்????
அப்புறம் ஏன் இந்த நிலை????
என்ன நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் ????????
எல்லோரும் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு.......
எங்கு போய்க் கொண்டிருக்கிறது?????
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  

2017/06/23

இன்று ஒரு தொலைக்காட்சி யில் 'o 'positive ரத்த வகை என்று படிப்பதற்கு பதிலாக zero positive  என்று படித்தார் அந்த செய்தி வாசிப்பாளர்.
நன்று.நன்று. வாழ்க தமிழ்

2017/06/21

செய்தி:
ஜனாதிபாதி கான்வாய் வாகன வழியில் வருவதை தெரிந்தும், காவலர் நிஜலிங்கப்பா துரிதமாக செயல்பட்டு அவசர ஊர்திக்கு வழி ஏற்படுத்தி பாதுகாப்பாக அனுப்பியதை பார்த்த பலர், அவருக்கு மனமார பாராட்டு தெரிவித்தனர்

comment :
ஜனாதிபதி கான்வாய் தனை மட்டுமே நிறுத்த முடியும்.
ஒரு பிரதமர்,
ஒரு முதல்வர் கான்வாய் தனை நிறுத்த முடியுமா??????

2017/06/18

இன்றைய நீயா   நானா :
  என் பணி சம்பந்தப் பட்ட தலைப்பில் ...அரசு vs தனியார் பள்ளிகள் ...
at the outset  let me first tell you that regarding syllabus Govt syllabus is in no way inferior to any other syllabus.
நானும் syllabus framing committee யில் இருந்திருக்கிறேன்.
Review committee யில் இருந்திருக்கிறேன்.
ஆங்கிலம் மட்டுமல்ல
என் பழைய பள்ளியில் கெமிஸ்ட்ரி பாடம் முதற்கொண்டு அப்பாட ஆசிரியர்களுடன் நானும் விவாதத்தில் இருப்பேன்.
உங்களில் எத்தனை பேருக்கு ஆங்கில பாடத்திற்கும் practical  செய்முறை தேர்வு உண்டு என்று தெரியும்??????????
Railway reservation
pay in slip
money order form
college application form
cheque
resume
dictionary
glossary
encyclopedia
இத்தனை செய்ய வேண்டும்.
இதற்கு முத்தாய்ப்பாக
ஒவ்வொரு மாணவனும் 5 நிமிடம் பேச வேண்டும்.
interview உண்டு.
இதை எத்தனை பள்ளிகளில் செய்கிறார்கள்????????
ஒரு workbook இருக்கும்.
எந்த பதிப்பகம் அதிக கமிஷன் கொடுக்கிறதோ அந்த workbook வாங்கி தருவார் தலைமை ஆசிரியர்.
அதை கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற பாணியில் செய்தால் போதும்
செய்முறை முடிந்தது.
நான் செய்தேன்
நான் செய்தேன்
என்ற பெருமைக்காக அல்ல இந்த பதிவு.ஆனால் நான் செய்தேன் .மூன்று வகை application form கொண்டு வந்து xerox செய்து மாணவர்களை அவர்களின் விவரங்களை அவர்களே பதிவு செய்தனர்.
அதே போல் resume யும் மாணவர்களின் சொந்த விவரங்கள்.
கார்த்தியின் ஆங்கில செய்முறை ரெக்கார்டு புத்தகம் எத்தனை (including  Montford ) பள்ளிகளுக்கு சென்றது.?
ஒரு பள்ளியில் அதிசயித்தனர்.
என்னுடைய tape ரெக்கார்டர் எடுத்து சென்று இதே சென்னை பள்ளியில் அனைத்து மாணவர்களையும் பேச செய்து record செய்தேன்.
எதற்கு இந்த சுய பிரதாபம்?
ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்தால் அரசு பள்ளிகள் சிறக்கும்.
நான் பணி  புரிந்த பள்ளியில் மாணவனை சேர்ப்பதற்கு அமைச்சரிடம் இருந்து recommendation கடிதம் வந்த காலம் உண்டு.
எங்கள் +2 ஆசிரிய டீம் அவ்வளவு சிறப்பாக செயல் பட்டோம்.
அடுத்து 2002ல் ஒரு பள்ளி யில் வேலை செய்த போது 100 மாணவர்கள் +1ல்  இருந்தனர்.
அந்த ஜூன் மாதம் 350 மாணவர்கள் +1ல் சேர்ந்தனர் .தலைமை ஆசிரியர் என்னை அழைத்து '' யாரோ நல்ல english  டீச்சர் வந்திருக்கிறார் '' என்று சொல்லி இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் '' ''என்கிறார்.

ஒரு ஆசிரியை தன்னுடைய 42 வது  வயதில் வேலை கிடைத்து என்னுடைய பள்ளியில், ,  அரசு பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.
அவர் சொன்னது,'' என்னுடைய கணவர் இது நாள் வரை தனியார் பள்ளியில் (4000)சம்பளத்திற்கு நாயாய் உழைத்தது போதும்.இது அரசு பள்ளி.ஓய்வு எடுத்துக்கொள் '' ''
இதுதான்.
அரசு என்றால் வேலை செய்ய வேண்டாம். சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனப் போக்கு மாறி அரசு பணியாளர்கள் உண்மையாய் உழைத்தால் வேறு யாரும் போட்டிக்கு வர முடியாது.
ஒரு பள்ளியில் வங்கிக்கு சென்று pay in slip form எடுத்து வர சொன்னேன்.அந்த மாணவர்கள் ஆர்வ மிகுதியில் அனைத்து form களையும் எடுத்து வந்து விட்டனர்,
வங்கி மேலாளர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விட்டார்.
தலைமை ஆசிரியர் என்னை அழைத்து ''உங்கள் கடன் கட்ட மாணவர்களை விட்டு form எடுத்து வர சொல்விர்களா என்று மிரட்டினார்.என் விளக்கத்தை கேட்ட பிறகு அவரும் வங்கி மேலாளரும் என்னை பாராட்டினர் .
என் வேண்டுகோள் இதுதான்.
அரசு ஆசிரியர்களே
நிறைய சம்பளம் கொடுக்கிறது அரசு.
Do justice to that .
கார்த்திக் அம்மா

2017/06/14

தெர்மோகோலும் அதிகாரிகளும்:
இன்று சட்ட சபையில் செல்லூர் ராஜு அமைசசரை பார்த்து தி .மு.க தெர்மோகோல் என்று கூவி கேலி செய்துள்ளார்கள்.
இது மிகவும் தவறு.
நான் ஒன்றும் அந்த அமைசசருக்கு ஆதரவாக சொல்லவில்லை.
இப்போதைய அரசியல்வாதிகள் பற்றி NO COMMENTS .
ஆனால் என் மில்லியன் டாலர் கேள்வி ???????????
அதிகாரிகளின் பங்கு என்ன??????
அதிகாரிகள் படித்தவர்கள்தானே .
அவர்களுக்கு தெரியாதா ??????
ஒரு குழந்தை கூட சொல்லும்.
இந்த அதிகாரிகள் கொடுத்த ஆலோசனை படிதானே
அமைச்சர் செயல்பட்டார்.
சட்டசபையில் கூவியவர்கள் ஏன் அந்த அதிகாரிகளை பற்றி வாய் திறக்கவில்லை??????????
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா

2017/06/11

என்னதான் டென்ஷன் ஆகக் கூடாது என்று உறுதி செய்தாலும்

          ''  ''  ஒங்க கனவுக்கு '' '' என்ற விளம்பரத்தை கேட்கும் போது தமிழ் இப்படி சாகிறதே என்று ரத்த அழுத்தம் ஜிவ்வென்று எம்புகிறது.

       அப்பாடா  இந்த விளம்பரம் முடிந்தது என்று மூச்சு விடலாம் என்று பார்த்தால் உங்களுக்கு தங்க நகை இலவச சேவை செய்யவே நான் ஜென்மம் எடுத்தேன் என்று ஒருவர்.
...........ஒரு விளம்பரம் ஒரு 10 முறை வந்தால் சகித்துக் கொள்ளலாம்.
....ஒரு நாளைக்கு 100 முறை என்றால் தாங்க முடியலடா தேவுடா
நான் பச்சை தமிழனுமல்ல
நான் சிகப்பு தமிழனுமல்ல :
நீ எச்ச கல நாய் ??????????
நீதான் எச்ச கல நாய்??????
போடா பிச்சகார நாய் ???
நீ திருடிக் கொண்டு ஓடுனயே 
ஹா ஹா .என்ன அருமையான தமிழ் ?
என்ன சபை நாகரிகம்????
தமிழ்நாடு இப்படி சீரழியும் என்று நினைக்கவேயில்லை .
அதனால் 
நான் தமிழன் என்று சொல்ல ...............
கார்த்திக் அம்மா
நானும் விவசாயிதான் :
நானும் விவசாயிதான்.
எனக்கும் நிலம் இருக்கிறது.
தண்ணீர் இல்லை.
300 தென்னை மரங்கள் காய்ந்து விட்டன.
போராடலாம்.
ஒரு வரை முறை இருக்கிறது.
தமிழ் நாட்டில் யார் கோவணம் காட்டுகிறார்கள்.
நானும் கிராமத்தை சேர்ந்தவள்தான்.
எங்கள் கிராமத்தில் யாரும் வேட்டி கூட கட்டுவதில்லை.(அரசியல்வாதிகள் தவிர.)
அய்யாக்கண்ணு அவர்களே,உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இனி போராட போனால் கோவணம் கட்டி தமிழ்நாட்டை கேவலப் படுத்தாதீர்கள்.
அதுவும் அந்த பெண்ணின் உடை,
கொடுமை.
கொடுமை.
போராட நாகரிகமான வழிகள் எத்தனையோ இருக்கும் போது 
இது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
நான் உங்களை விட வயதிலும் ,அனுபவத்திலும் மிக மிக சிறியவள்.
மனதில் பட்டதை சொன்னேன்.
கார்த்திக் அம்மா

2017/06/06

சென்னை +மரங்கள்+வெயில் :
நானும் சென்னை வந்து 17 வருடங்கள் ஆகி விட்டது.
ஒவ்வொரு வருடமும் இது போல் வெயில் இல்லை என்று சொல்வது வழக்கம்.
ஆனால் உண்மையிலேயே இந்த வருடம்தான் தாங்க முடியாத வெயில்.
வீட்டிற்குள் சூர்ய வெயில் வரவே வராது.
வெளியே எப்படி கொளுத்தினாலும் வீட்டிற்குள் கஷ்டம் தெரியாது.
ஆனால் இந்த வருடம் ஹால் முழுதும் சூர்ய தாக்கம்.
என்னடா
என்று மண்டையை உடைத்துக் கொண்டால்
மண்டைக்குள் திடீரென பல்ப் எரிந்தது.
ஆம்.
1 லட்சம் மரங்கள் விழுந்தனவே..
அதுதான் இந்த காய்ச்சு காய்ச்சியெடுக்கிறது.
வேர்க்குரு கொப்பளித்து நடம் செய்கிறது.
எந்த க்ரீமும் போடாத நானே கையில் க்ரீமும் கையுமாக சுத்துகிறேன்.
இன்று முதல் மழை பெய்யுமாம்.
மழை தாயே கருணை செய்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2017/06/01

JUNE 3 2005
இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.
1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா
31.05.2017:
பணி ஓய்வு :
இன்றுடன் நான் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் 2006 லியே விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்.
கார்த்தி விரும்பாத வேலையை தொடர மனமில்லை.
இன்று
அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் என்னை மேள தாளத்துடன் வீட்டில் கொண்டு வந்து விட்டிருப்பர் .
எந்த அதிர்ஷ்டமும் இல்லாதவள் நான்.