About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/04/26

வெள்ளிக்கிழமையும்  26 ம் தேதியும் சேர்ந்த நாள். ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் என் மனதில் 1000 லிட்டர் பெட்ரோலை  ஊற்றியது போல்  இருக்கிறது. தீயின் தகிப்பு தாங்க முடியவில்லை.
என் நண்பர் ,50 வயது , பைக் ஊட்டி சென்றபோது சாலையில் oil கொட்டியிருந்திருந்திருக்கிறது .அதனுடன் தண்ணீர் சேர்ந்துள்ளது .அதனால் பைக் skid ஆகி அப்படியே விழுந்து விட்டேன் .சின்ன surgery  செய்ய வேண்டி வந்தது என்றார்.
கார்த்தியின் accident  பற்றியும் இப்படி ஒரு காரணம் சொன்னார்கள்.கார்த்திக் மட்டும் ஏன் நிமிடத்தில் உயிரை இழக்க வேண்டும்?
என்னை இப்படி எரியும் தணலில் வீச வேண்டும்?
விதியா?
சதியா?
கடவுளா?
என்றும், எந்த நிமிடமும் நிற்காத கண்ணீருடன்
கலாகார்த்திக் 

2013/04/22

//புதுடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்கு, இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து சமீபத்தில் மிரட்டல் கடிதங்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு மும்பை அல்டா மவுன்ட் ரோட்டில் உள்ள முகேஷ் அம்பானியின் நவீன அடுக்கு மாடி மாளிகைக்கு(அன்டிலியா) உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் முகேஷ் அம்பானிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு ஏஜன்சி, உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎப்) பட்டாலியனிலிருந்து 28 போலீசார் கொண்ட குழுவினர், முகேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர் மும்பை மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு செல்லும் போது மத்திய ஆயதப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவர். இசட் பிரிவு பாதுகாப்பின் கீழ் முகேஷ் அம்பானி செல்லும் வாகனத்துக்கு முன்பு பைலட் வாகனமும், பின்னால் நவீன ஆயுதங்கள் ஏந்திய கமாண்டோக்களின் வாகனமும் செல்லும். தொழிலதிபர் ஒருவருக்கு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்குவது இதுவே முதல் முறை.//
இது இன்றைய செய்தி.
இவருக்கு இருக்கும் செல்வத்திற்கு இவர் தன் சொந்த செலவிலேயே பாதுகாப்பு செய்து கொள்ளலாம். இதில் நம் முதல்வரை பாராட்ட வேண்டும். அவரின் பூனை படை அவரின் சொந்த செலவிலேயே செய்து கொண்டார்.அம்பானிக்கு அரசு செய்யும் செலவிற்கு பதிலாக 4 borewell போட்டு கொடுத்தால் 40 விவசாயிகள் பயன் பெறுவர் .ஹும் . தனியே புலம்புதல் என்பது இதுதான்.

2013/04/17

அர்விந்த் சாமி -ஆச்சரிய சாமி :
நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி :
கமலஹாசன் பற்றி நிறைய தெரிந்திருந்தவர்களுக்கு அவரின் பதில்கள் பெரிய ஆச்சரியமல்ல.
ஆனால் அரவிந்த்சாமி இப்படி ஒரு ஆச்சரியமான ,அறிவார்ந்த நபராக இருப்பார் என்பது எதிர்பாராத ஒன்று.
Hats off .
A caution to the pro grammar :
For a question about  chess  4 options given and one is tortoise ,which should be pronounced as tartis (டார்டிஸ் ).ஆனால் டார்ட்டாய்ஸ் என்ற வார்த்தை இருந்தது.இன்னும் சற்று கவனம் கொள்ளலாமே.
 இந்த சஞ்சய் தத் ''நான் செய்தது தவறுதான்.நான் தண்டனையை அனுபவிக்கிறேன் '' என்று சொன்னவரை மக்கள் உசுப்பி விட்டு இன்று அவர் மேல் முறையீடு செய்து 4 வார கால அவகாசம் பெற்றிருக்கிறார்.கோர்ட் எல்லோருக்கும் இது போல் சலுகைகள் தருமா ?நாட்டில்  என்ன நடக்கிறது?