About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/03/29

ISRO : CLOSE IT :says an idiot.
Today morning i was watching a t.v channel where two persons were discussing. One of them said
'' what is the use of ISRO? Why should we spend so much money on these projects?Do these projects help the poor in anyway?
Instead we can spend this money to help the poor.
WE SHOULD CLOSE ISRO"
I LITERALLY SWOONED.
முழு மயக்கமே வந்து விட்டது .
ISRO வால்  என்ன பயன்? இந்த ஏவுகணைகள்,சேடலைட்டுகள் என்ன செய்கின்றன?இந்தியா விவசாய நாடு.
விவசாயத்தை மட்டும் பார்த்தால் போதும்.அறிவியலால் பயனில்லை ;;"" ""
இவர்கள் போல் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் நாட்டில்?
எப்படி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படி பேசுகிறார்கள்?
அதிர்ச்சியாகி விட்டேன்.
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/03/24

நானும் ஒரு ஆங்கில ஆசிரியையாக இருந்தேன் என்பது நினை விற்கு வந்ததால் வந்த விபரீதம்.
மாணவர்களுக்கு அடிக்கடி புதிர் கொடுப்பதுண்டு.அதில் ஒன்று இங்கு. .
1..He beat the boy.
2.They beat the boy.

Can anyone guess what i come to say?
what is the tense in both the sentences?

the first sentence : past tense.
the second sentence: present tense.
ஹா என்று அலறுகிரீர்களா ?
beat  என்ற வார்த்தையின் past tense ம் பீட் தான்.
since the first sentence subject 'he' is a third person singular it should take 's' with the verb in the present tense.
so it is
''he beats the boy ''....present tense.
''he beat the boy'' ..past tense.
ஹ ஹா ,இனிமே blog பக்கம் வருவீங்களா? வருவீங்களா?
கலா கார்த்திக் ...கார்த்திக் அம்மா

2015/03/20

தாங்க முடியலட சாமி:
சமையல் show ம் கீச்சு கீச்சுகளும் :அய்யோ ஐயோ :ஏம்ப்பா  எங்கேருந்து புடிக்கிறிங்க இந்த அம்மணிகளை?
சமைக்கிறவர்களை  சமைக்க விடாமல் ஓகே ...ஹா ...ஹையா என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் நடு நடுவில் கீச்சு குரல் கொடுக்கிறதுதான்   இமசையோ இம்சை..
அதுவல்லாமல் எங்கோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த மாதிரி இதுதான் டோமேடோவா (உச்சரிப்பு வேறு தனி கொடுமை) பொடடோவா என்று ...தனி இம்சை .இதுவே வெந்தயத்திற்கு,சோம்புவிற்கு எல்லாம் ஆங்கிலம் வராது.(தெரியாதே ).கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் அம்மணிகளே
கலாகார்த்திக்

2015/03/18

அதிகாரிகளும்  தற்கொலைகளும்:
   தமிழ்நாட்டில் ஒருவர்
கர்நாடகாவில் ஒருவர்
என அதிகாரிகள் தற்கொலை பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது.
இவர்கள் எல்லாம் இந்த சிறு விஷயத்திற்கு தற்கொலை என்றால் நான் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் பட்ட துன்பத்திற்காக மட்டும் அல்ல
 பணியிலும் நான் பட்ட கஷ்டங்கள் அளவிட முடியாதது.
நானும்  100% நேர்மையானவள்..
உண்மை,
வாய்மை,
சத்தியம்
என்றெல்லாம் பிதற்றி திரிபவள்..
அதனால் நான் பட்ட ,அனுபவித்த துயரங்கள், போராட்டங்கள் எத்தனை?
ஆசிரிய பணியில் என்ன போராட்டம் என்கிறீர்களா?
அரசு பள்ளியில் பணி  புரிந்த போது நான் உண்மை மட்டுமே பேசியதால் வந்த எதிர்ப்புகள் எத்தனை.
9 மார்க் என்பதை 19 என்றும் 90 என்றும் மாற்றுவார்கள்.தனி வகுப்பு(,ட்யூஷன் ) எடுக்க மாட்டேன்.அதில் பிரச்சினை.ஆனால் இப்படிப்பட்ட எனக்குதான் வாழ்க்கையிலும் சோதனைகள் வந்தன. எண்ணில்  அடங்கா ஊழல்கள் செய்த அந்த தலைமை ஆசிரியர் நன்றாகவே இருந்தார் 73 வயது வரை வாழ்ந்தார்...அமைதியான இறப்பு.....கடவுள் இருக்கிறார்.கெட்டவர்களை  தண்டிப்பார் என்ற 
கணெக்கெல்லாம்  பொய்யானது....
 நான் என் கணவரை இழந்த போதும்
உயிருக்கு உயிரான கார்த்தி மகனை இழந்த போதும் கைகொட்டி சிரித்தார். உங்கள் நேர்மை எல்லாம் உங்களுக்கு என்ன செய்தது என்று கேலி பேசினார்..வெளியில் தைரியசாலி போல் காட்டிக் கொண்டு தனிமையில் கதறினேன்.ஏன் எனக்கு சோதனை என்றால் முற்பிறவி என்றார்கள்.
சொல்லிக் கொண்டே போகலாம். நானும் என் கணவரை இழந்த போதும்  சரி,கார்த்தியை இழந்த போதும் தற்கொலை எண்ணத்தில்தான் இருந்தேன்.ஆனால் செய்யவில்லை.
அப்படியிருக்க இந்த அதிகாரிகள் செய்தது என்ன நியாயமோ?
கார்த்திக் அம்மா.
கலாகார்த்திக்

2015/03/10

செய்தியும் comment ம்
//  //  ......டெல்லி: முன்னாள் காதலனை ஹோலி கொண்டாட கூப்பிட்டு காதலியும், அவரின் புது காதலனும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு டெல்லியில் நடைபெற்ற இந்த படுபாதக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது. ஜகன்ஜிர்புரி பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். கூலி வேலை செய்யும் இந்த சிறுமியும், அதே பகுதியில் வசிக்கும் கமல் என்ற 16 வயதான சிறுவனும் காதலித்து வந்தனராம். புது காதலனுடன் சேர்ந்து, மாஜி காதலனை கொன்ற 15 வயது சிறுமி! ஹோலி கொண்டாட்டத்தில் வெறிச்செயல் கமலுடன் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நட்பாக இருந்த சிறுமி தற்போது வேறு ஒரு 17வயது சிறுவனுடன் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார். இதை கமல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கமலை தீர்த்துக் கட்டிவிட்டு ஜாலியாக ஊர் சுற்ற, சிறுமி திட்டமிட்டுள்ளார். எனவே, புராரி பகுதிக்கு வருமாறும், அங்கு வண்ண பொடிகளை தூவி, ஹோலி கொண்டாடலாம் என்றும், கமலை, சிறுமி அழைத்துள்ளார். இதை நம்பிய கமல் சம்பவத்தன்று அங்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியும், அவரின் புது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 4பேர் சேர்ந்து, கமலை கத்தியால் குத்தி கொன்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், குற்றவாளிகள் ஆறுபேரையும் கைது செய்துள்ளனர். ..........// // //
வாழ்க  பெண்ணுரிமை
வாழ்க பெண் சுதந்திரம் 
இதே 15 வயது சிறுமியை கற்பழித்திருந்தால் என்ன ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.
இப்போது எங்கே போயின மகளிர் சங்கங்கள்
கலாகார்த்திக்