About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/11/25

நடிகர்கள் மிரட்டல் :
என்ன.....ஆளாளுக்கு கிளம்பியிருக்கிங்க ????????????
முன்பு ஒருவர் தன் படம் வெளிவர பிரச்சினை என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவேன் என்று மிரட்டினார்.
இப்போது அமீர் மிரட்டுகிறார்.
போங்களேன்.
நாட்டிற்கு என்ன செய்தீர்கள்????????????
உங்கள் பணம் ,வருமானம் ,கல்லா பெட்டி :
இது கோடி கோடியாக கொட்ட வேண்டும்.
அது தவிர வேறு என்ன சாதித்தீர்கள்?
ஏன்
மக்களிடம் மத ஒற்றுமை பற்றி பேசுங்களேன்.
நீங்கள் சொன்னால் உயிரை விட தயாராக இருக்கும் ரசிகர்கள் என்ற முட்டாள்கள் நீங்கள் சொன்னால் மத வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் இருப்பார்களே?
போனால் போங்கள்.
நாட்டை காக்க நம் படை வீரர்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடுவார்கள்.
இப்போது சென்னை வெள்ளத்தில் மிதந்த போது சைலேந்திர பாபு  (அவரே) தண்ணிரில் இறங்கி எத்தனை மக்களை கரை சேர்த்தார்.
விளம்பரப் படுத்திக் கொள்ளவேயில்லையே.
இது போல் நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
எங்களுக்கு அவர்கள் போதும்.
அவர்களை நாங்கள் மதிக்கிறோம்.
ரசிக்கிறோம்
போற்றுகிறோம்.
நீங்கள் கிளம்பலாம்.
*****  ***
அவதூறு வழக்கு:
தும்மினால்
நின்றால்
நடந்தால்
வழக்கு.
எதை சொன்னாலும் தப்பு.
எதை எழுதினாலும் தப்பு.
என்னை பற்றி ஒருவர் பேசினாலோ, எழுதினாலோ
ஒன்று சட்டை செய்ய மாட்டேன்.
அல்லது பதிலுக்கு நானும் எழுதி தக்க விடை கொடுப்பேன்.
ஒரு பத்திரிகையில் வந்த செய்திகள் பொய்யென்று நிரூபியுங்களேன்.
இது ஒரு நல்ல அரசருக்கு அழகல்ல .
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2015/11/24

மழையே :
போதும் .போதும். சற்று ஓய்வெடுத்துக் கொள்.
எம் மக்கள் படும் பாடு சொல்லி முடியாது.
ஒரு 100 மில்லி பாலுக்கு அழும் குழந்தைகள் ,தளர்ந்து விட்ட பெரியவர்கள் ......போதும்.
அவர்கள் படும் பாடு.
  சற்று ஓய்வெடுத்துக் கொள்.
அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை நிறைய உள்ளது.
ஆனால் உதவப் போய் நான் அவர்களுக்கு உபத்திரவமாகிவிடக் கூடாது என்பதால்
''எல்லோரும் நலம் வாழ பிரார்த்திக்கும் ''
மழையே :
போதும் .போதும். சற்று ஓய்வெடுத்துக் கொள்.
வேண்டுதலுடன்
கார்த்திக் அம்மா

2015/11/13

பிறந்த நாள்
14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா
kalakarthik

2015/11/10

குற்றம் கடிதல்.....என் கதை......
இப்போதுதான் குற்றம் கடிதல் படம் கலைஞர் டி .வி யில் பார்த்தேன்.
நானும் ஒரு +2 ஆசிரியை.
1990 களில்  நடந்தது. ஒரு மாணவன் தன் கையை பிளேடால் கீறி அந்த ரத்தத்தில் i love  you  என்று எழுதிக் கொண்டிருந்தான்.(தன காதலிக்கு )
பார்த்த வுடன் நான் செய்த முதல் காரியம் அவனை கண்ணா பின்னாவென்று அடித்ததுதான்.
இதில் எனது ஈகோ ,திமிர், என்று எதுவும் இல்லை.
அவனின் ரத்தம்.
பிளேடால் கீறினால் செப்டிக் ஆகி விடும் என்ற தவிப்பு.
இந்த வயதில் காதலா  என்ற கோபம்
வகுப்பை கவனிக்கவில்லை என்ற ஆத்திரம் என்ற என்ன காரணங்களோ
எதுவோ தெரியாது.
I beat him .அடித்தேன்.
.....   .....
இது போல் பல பிரச்சினைகளில் மாட்டி இருக்கிறேன்.இந்த ஆசிரியைக்கு வந்தது போல் மீடியா ,பத்திரிகைகள், ராஜ் டி .வி  எல்லாம் பள்ளிக்கு வந்தது என்று கேள்விப் பட்டேன்.
ஆனால் என் பக்கம் நியாயம் என்று புரிந்ததாலோ என்னவோ ,  விசாரிக்கவும் இல்லை.வில்லங்கப் படுத்தவும் இல்லை.
HIGHLIGHT :
அந்த மாணவன் பின்னாளில் செந்திலிடம் சொன்னானாம் :
அன்று மட்டும் அம்மா என்னை அடித்திருக்காவிட்டால் நானும் படித்திருக்க மாட்டேன். இன்று இந்த நல்ல வேலைக்கு வந்து நல்ல நிலையில் இருந்திருக்கவும் மாட்டேன் 
 நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் நன்மைக்காகத்தான் எதையும் செய்வார்கள்.
அடிப்பது சரியென்று நான் சொல்லவில்லை.
BUT THAT IS THE INSTANT REACTION .
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக் 

2015/11/07

கார்கள்,கார்கள் !!!!!
இந்த மாதம் கார்த்தி வீட்டிற்கு (சென்னை to பெங்களூரு ) செல்லும் போது ஓசூர் அருகே ஒரு துணிக் கடையை கடந்த போது நான் கண்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது,.
யுண்டாய் +FORD கார் கம்பெனிகளை கடக்கும் போது வெய்யிலில் வற்றல் காய வைத்தது போல் கார்கள் நிறுத்தப் பட்டிருக்கும்.
அத காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த துணிக்கடையின் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் எண்ணிக்கை அது போலத்தான் இருந்தது.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. 
சந்தோஷம்தான்.
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக்