About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/11/10

குற்றம் கடிதல்.....என் கதை......
இப்போதுதான் குற்றம் கடிதல் படம் கலைஞர் டி .வி யில் பார்த்தேன்.
நானும் ஒரு +2 ஆசிரியை.
1990 களில்  நடந்தது. ஒரு மாணவன் தன் கையை பிளேடால் கீறி அந்த ரத்தத்தில் i love  you  என்று எழுதிக் கொண்டிருந்தான்.(தன காதலிக்கு )
பார்த்த வுடன் நான் செய்த முதல் காரியம் அவனை கண்ணா பின்னாவென்று அடித்ததுதான்.
இதில் எனது ஈகோ ,திமிர், என்று எதுவும் இல்லை.
அவனின் ரத்தம்.
பிளேடால் கீறினால் செப்டிக் ஆகி விடும் என்ற தவிப்பு.
இந்த வயதில் காதலா  என்ற கோபம்
வகுப்பை கவனிக்கவில்லை என்ற ஆத்திரம் என்ற என்ன காரணங்களோ
எதுவோ தெரியாது.
I beat him .அடித்தேன்.
.....   .....
இது போல் பல பிரச்சினைகளில் மாட்டி இருக்கிறேன்.இந்த ஆசிரியைக்கு வந்தது போல் மீடியா ,பத்திரிகைகள், ராஜ் டி .வி  எல்லாம் பள்ளிக்கு வந்தது என்று கேள்விப் பட்டேன்.
ஆனால் என் பக்கம் நியாயம் என்று புரிந்ததாலோ என்னவோ ,  விசாரிக்கவும் இல்லை.வில்லங்கப் படுத்தவும் இல்லை.
HIGHLIGHT :
அந்த மாணவன் பின்னாளில் செந்திலிடம் சொன்னானாம் :
அன்று மட்டும் அம்மா என்னை அடித்திருக்காவிட்டால் நானும் படித்திருக்க மாட்டேன். இன்று இந்த நல்ல வேலைக்கு வந்து நல்ல நிலையில் இருந்திருக்கவும் மாட்டேன் 
 நல்ல ஆசிரியர்கள் மாணவர்களின் நன்மைக்காகத்தான் எதையும் செய்வார்கள்.
அடிப்பது சரியென்று நான் சொல்லவில்லை.
BUT THAT IS THE INSTANT REACTION .
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக் 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஆசிரியை + மாணவன்...