About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/11/25

நடிகர்கள் மிரட்டல் :
என்ன.....ஆளாளுக்கு கிளம்பியிருக்கிங்க ????????????
முன்பு ஒருவர் தன் படம் வெளிவர பிரச்சினை என்றவுடன் நாட்டை விட்டு ஓடுவேன் என்று மிரட்டினார்.
இப்போது அமீர் மிரட்டுகிறார்.
போங்களேன்.
நாட்டிற்கு என்ன செய்தீர்கள்????????????
உங்கள் பணம் ,வருமானம் ,கல்லா பெட்டி :
இது கோடி கோடியாக கொட்ட வேண்டும்.
அது தவிர வேறு என்ன சாதித்தீர்கள்?
ஏன்
மக்களிடம் மத ஒற்றுமை பற்றி பேசுங்களேன்.
நீங்கள் சொன்னால் உயிரை விட தயாராக இருக்கும் ரசிகர்கள் என்ற முட்டாள்கள் நீங்கள் சொன்னால் மத வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் இருப்பார்களே?
போனால் போங்கள்.
நாட்டை காக்க நம் படை வீரர்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடுவார்கள்.
இப்போது சென்னை வெள்ளத்தில் மிதந்த போது சைலேந்திர பாபு  (அவரே) தண்ணிரில் இறங்கி எத்தனை மக்களை கரை சேர்த்தார்.
விளம்பரப் படுத்திக் கொள்ளவேயில்லையே.
இது போல் நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
எங்களுக்கு அவர்கள் போதும்.
அவர்களை நாங்கள் மதிக்கிறோம்.
ரசிக்கிறோம்
போற்றுகிறோம்.
நீங்கள் கிளம்பலாம்.
*****  ***
அவதூறு வழக்கு:
தும்மினால்
நின்றால்
நடந்தால்
வழக்கு.
எதை சொன்னாலும் தப்பு.
எதை எழுதினாலும் தப்பு.
என்னை பற்றி ஒருவர் பேசினாலோ, எழுதினாலோ
ஒன்று சட்டை செய்ய மாட்டேன்.
அல்லது பதிலுக்கு நானும் எழுதி தக்க விடை கொடுப்பேன்.
ஒரு பத்திரிகையில் வந்த செய்திகள் பொய்யென்று நிரூபியுங்களேன்.
இது ஒரு நல்ல அரசருக்கு அழகல்ல .
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

Jeevan said...

மிக சரி