About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/01/28

மீள் பதிவு 

I AM MAD

நான் ஒரு பைத்தியம்
எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றார்கள்.ஆம் . நான் ஒரு பைத்தியம்தான்.யார்தான் பைத்தியம் இல்லை? விஜய் என்ற நடிகர் கல்யாணம் செய்தபோது அழுதவர்கள் பைத்தியம் இல்லையா? குஷ்புவுக்கு கோயில் கட்டியவர்கள் பைத்தியம் இல்லையா?சந்த்ரமுகி படம் அமெரிக்காவில் திரையிடப் பட்டபோது பட்டாசு வெடித்து அமர்க்களம் பண்ணிய எண்ணற்ற படித்தவர்கள் பைத்தியம் இல்லையா?
னான் ரஜினி பைத்தியம், நான் கமல் பைத்தியம், நான் அசின் பைத்தியம் என்று சொல்லிக் கொள்வதில் இவர்கள் எல்லாம் பெருமைப் படும் பொழுது
இவர்களில் எந்த வகையிலும் குறைந்து விடாத,எனக்கே எனக்கென வாழ்ந்து , என்னிடம் அபரிமிதமான அன்பை பொழிந்த என் செல்லக் கண்மனியின் பைத்தியம் நான் என்று சொல்லிக் கொள்வதில் நானும் அளவு கடந்த பெருமை கொள்கிறேன் Yes
I AM PROUD to say that
I AM MAD
KARTHIK AMMA

my tiger

My Tiger

Last year,this same day,i.e,15.08.2005,my younger brother and his family,with my mom, came to bangalore,to stay in my house and enjoy two days holiday.Karthik and i took them to Bannargatta,the Lion safari.when we reached there,to our dismay we found a huge crowd.We were waiting for the tickets, but it was said that due to lack of vehicles tickets would not be issued and the people were requested to return.Most were disappointed.But I wasn't.I told my brother and his family "oh,i have a TIGER at home and I see the tiger everyday."
Do you understand? Yes.It's my KARTHIK. Hearing this he was beaming with happiness and his smile and the expression of enjoying his mother's admiration was so wonderful which made my relatives wonder at us.It was beyond their imagination that a mother and son could be so intimate and mutual admiration and respect.
The happy rememberances.
karthik amma

2016/01/26

இது என்ன தற்கொலை வாரமா?
சாலை பாதுகாப்பு வாரம்....நீர் சேமிப்பு வாரம் போல் பல வாரங்கள் உண்டு.
ஆனால் இந்த வாரம் தற்கொலை வாரமா?
ஆனால் இந்த வாரம் மட்டும் 3 svs கல்லூரி மாணவிகள்
அண்ணா பல்கலை மாணவி
நர்சிங் கல்லூரி மாணவி
கலைக் கல்லூரி மாணவி
என வரிசை கட்டுகின்றனர்
******
மனம் வேதனைப் படுகிறது.
பெற்றோருக்கு தன குழந்தைகள் உயிர்.
இப்படி அவசரப் பட்டு உயிரை விடாதீர்கள்.
வாழ எத்தனையோ வழி உண்டு.
இந்த படிப்பு இல்லையென்றால் வேறு ஒன்று.
படிப்பே இல்லாமல் வாழ்ந்து சாதித்து காட்டியவர்கள் எத்தனை பேர்.
இப்படி தவறான முடிவிற்கு போகாதீர்கள்.
அன்புடன்,
கார்த்திக்  அம்மா

2016/01/25

மாணவிகள் தற்கொலை:
3 மாணவிகள் தங்கள் கைகளை பின்புறம் சேர்த்து கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து விட்டனர் என்றுதான் முதல் செய்தி வந்தது. அதன் பின் அந்த விஷயம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.
naturopathy  இயற்கை வைத்தியம் படிக்கும் மாணவிகள் அல்லது சித்த வைத்தியம் படிக்கும் மாணவிகளா என்பதையும் ஊடகங்கள் மாற்றி மாற்றி சொல்கின்றன.
பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன.
ஒரு கல்லூரியில் சேர்க்கும் முன் அவர்கள் உண்மையான அனுமதி பெற்றுள்ளார்களா  என்று பார்க்க வேண்டும் என்று சொல்கின்றனர்.கல்லூரி காட்டும் அனுமதி உத்தரவு போலி என்று எப்படி கண்டு பிடிப்பது?
இந்த கல்லூரியில் ஏற்கனவே ஓரின சேர்க்கை விவகாரம் என்று 2 ஆண்டுகளுக்கு  முன்பு வதந்தி கிளம்பி அமுங்கியது.
அதிகாரிகள் மெத்தனமா?
எது காரணம்?
*****
இன்று அண்ணா பல்கலையில் ஒரு மாணவி தற்கொலை :
இதையும் ஒரு தொலைக் காட்சி மாணவி தவறி விழுந்து இறந்தாள் என்றுதான் செய்தி சொல்லியது.
**
விடையில்லா கேள்விகள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/01/24

பணம் எதையும் சாதிக்குமா?

ரோஹித் வேமுலா வின் பெற்றோருக்கு என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் அவர்களுக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
6 லட்ச ரூபாய் கொடுக்கிறது அரசு.
அவரின் உயிரின் விலை கேவலம் 6 லட்சம்தானா ?
அவர் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருந்தால் எவ்வளவு சம்பாதித்திருப்பார் ?
இதையெல்லாம் தாண்டி  ஒன்று இருக்கிறது.
 நேரில் வந்து '' '' அம்மா '' '' என்று அழைக்கும் அந்த ஒரு வார்த்தையை கேட்பதற்கு அந்த தாய்  எவ்வளவையும் கொடுப்பாள்.
எல்லோரையும் பணத்தாலேயே விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற எண்ணத்தை உடைத்த அந்த பெற்றோருக்கு என் வந்தனம்.
ஏழை என்றால் அவ்வளவு இளக்காரம்.!!!!!
பாராட்டுகள்.
****     *****
இப்படியும் ஒரு கேனம் .(ignorance...innocence ....???)

இது என் கல்யாண போட்டோ .தாலியை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மணப்பெண் .என்ன பிறவியோ?
ஒரு குழந்தை உள்ளத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை மிக மிக அதிகம்.
என் கார்த்தி மகன் என்று வருவான்?
இந்த குழந்தைக்கு, தாயாய் இருந்தான்.
தாயை இழந்து வாடும்
 கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்






 

2016/01/07

THE  BIGGEST EVE TEASING :
என்னப்பா,கேள்வி கேட்க ஆளே இல்லையா?
REST எடுக்க போனா போன இடத்துல நம்ம city girls அ பேட்ட ரௌடிங்க ,மண்ணின் மைந்தர்கள் துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பித்தால் எப்படிங்க?
யானைகள் முகாம் பற்றிதான் சொல்கிறேன்.போன வருடமே லோக்கல் தாதாக்கள் பெண்களை (பெண் யானைகளை )பிராக்கெட் போட  பார்த்ததால் இந்த வருடம் இரட்டை மின் வேலி  அமைத்தனர் அதிகாரிகள்.
ஆனால் எப்படியோ டிமிக்கி கொடுத்துவிட்டு ,இரண்டு காட்டு  (ஆண்  ) யானைகள் முகாமுக்குள் நுழைந்து நம் கோவில் யானைகளை மடக்க முயற்சித்தன.தொலை காட்சியில் நேரடி ஒளிபரப்பாக பார்த்தேன்.அங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா.????????????
பாகன்களே உங்கள் யானைகளை பத்திரமான இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்று மைக்கில் எச்சரிக்கை செய்யவும், பாகன்கள் தங்கள் செல்லங்களை அவசர அவசரமாக ஓட்டிக் கொண்டு சென்றதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
பேட்டை ரௌடிகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் துரத்தினர்.
எதற்கும் சம்பந்தப் பட்டோர் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும்.
நாளைக்கே நாலு லாரி நிறைய அடியாட்களுடனும், மாலையுடனும் வந்து கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டலாம்.
வாழ்க காதல் (அ )நட்பு.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்