About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/06/18

இன்றைய நீயா   நானா :
  என் பணி சம்பந்தப் பட்ட தலைப்பில் ...அரசு vs தனியார் பள்ளிகள் ...
at the outset  let me first tell you that regarding syllabus Govt syllabus is in no way inferior to any other syllabus.
நானும் syllabus framing committee யில் இருந்திருக்கிறேன்.
Review committee யில் இருந்திருக்கிறேன்.
ஆங்கிலம் மட்டுமல்ல
என் பழைய பள்ளியில் கெமிஸ்ட்ரி பாடம் முதற்கொண்டு அப்பாட ஆசிரியர்களுடன் நானும் விவாதத்தில் இருப்பேன்.
உங்களில் எத்தனை பேருக்கு ஆங்கில பாடத்திற்கும் practical  செய்முறை தேர்வு உண்டு என்று தெரியும்??????????
Railway reservation
pay in slip
money order form
college application form
cheque
resume
dictionary
glossary
encyclopedia
இத்தனை செய்ய வேண்டும்.
இதற்கு முத்தாய்ப்பாக
ஒவ்வொரு மாணவனும் 5 நிமிடம் பேச வேண்டும்.
interview உண்டு.
இதை எத்தனை பள்ளிகளில் செய்கிறார்கள்????????
ஒரு workbook இருக்கும்.
எந்த பதிப்பகம் அதிக கமிஷன் கொடுக்கிறதோ அந்த workbook வாங்கி தருவார் தலைமை ஆசிரியர்.
அதை கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற பாணியில் செய்தால் போதும்
செய்முறை முடிந்தது.
நான் செய்தேன்
நான் செய்தேன்
என்ற பெருமைக்காக அல்ல இந்த பதிவு.ஆனால் நான் செய்தேன் .மூன்று வகை application form கொண்டு வந்து xerox செய்து மாணவர்களை அவர்களின் விவரங்களை அவர்களே பதிவு செய்தனர்.
அதே போல் resume யும் மாணவர்களின் சொந்த விவரங்கள்.
கார்த்தியின் ஆங்கில செய்முறை ரெக்கார்டு புத்தகம் எத்தனை (including  Montford ) பள்ளிகளுக்கு சென்றது.?
ஒரு பள்ளியில் அதிசயித்தனர்.
என்னுடைய tape ரெக்கார்டர் எடுத்து சென்று இதே சென்னை பள்ளியில் அனைத்து மாணவர்களையும் பேச செய்து record செய்தேன்.
எதற்கு இந்த சுய பிரதாபம்?
ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்தால் அரசு பள்ளிகள் சிறக்கும்.
நான் பணி  புரிந்த பள்ளியில் மாணவனை சேர்ப்பதற்கு அமைச்சரிடம் இருந்து recommendation கடிதம் வந்த காலம் உண்டு.
எங்கள் +2 ஆசிரிய டீம் அவ்வளவு சிறப்பாக செயல் பட்டோம்.
அடுத்து 2002ல் ஒரு பள்ளி யில் வேலை செய்த போது 100 மாணவர்கள் +1ல்  இருந்தனர்.
அந்த ஜூன் மாதம் 350 மாணவர்கள் +1ல் சேர்ந்தனர் .தலைமை ஆசிரியர் என்னை அழைத்து '' யாரோ நல்ல english  டீச்சர் வந்திருக்கிறார் '' என்று சொல்லி இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் '' ''என்கிறார்.

ஒரு ஆசிரியை தன்னுடைய 42 வது  வயதில் வேலை கிடைத்து என்னுடைய பள்ளியில், ,  அரசு பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.
அவர் சொன்னது,'' என்னுடைய கணவர் இது நாள் வரை தனியார் பள்ளியில் (4000)சம்பளத்திற்கு நாயாய் உழைத்தது போதும்.இது அரசு பள்ளி.ஓய்வு எடுத்துக்கொள் '' ''
இதுதான்.
அரசு என்றால் வேலை செய்ய வேண்டாம். சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனப் போக்கு மாறி அரசு பணியாளர்கள் உண்மையாய் உழைத்தால் வேறு யாரும் போட்டிக்கு வர முடியாது.
ஒரு பள்ளியில் வங்கிக்கு சென்று pay in slip form எடுத்து வர சொன்னேன்.அந்த மாணவர்கள் ஆர்வ மிகுதியில் அனைத்து form களையும் எடுத்து வந்து விட்டனர்,
வங்கி மேலாளர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விட்டார்.
தலைமை ஆசிரியர் என்னை அழைத்து ''உங்கள் கடன் கட்ட மாணவர்களை விட்டு form எடுத்து வர சொல்விர்களா என்று மிரட்டினார்.என் விளக்கத்தை கேட்ட பிறகு அவரும் வங்கி மேலாளரும் என்னை பாராட்டினர் .
என் வேண்டுகோள் இதுதான்.
அரசு ஆசிரியர்களே
நிறைய சம்பளம் கொடுக்கிறது அரசு.
Do justice to that .
கார்த்திக் அம்மா

No comments: