About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2010/10/07

Madhan & Tamil History

நமது தமிழக முதல்வர் வருத்தப்பட்டிருக்கிறார்.
'' '' ராஜராஜ சோழனின் நினைவிடத்தைக் கூட நம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லையே '' '' என்று.
ஒரு இரண்டு வருடங்கள் பின்னோக்கி போவோம் ..
எழுத்தாளர் [ அவருக்கு இன்னும் எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. ] 'மதன் ' அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
வந்தார்கள் ,வென்றார்கள் என்று வட இந்திய வரலாறு பற்றி எழுதினிர்களே , ஏன்
தமிழக வரலாறு பற்றி எழுதவில்லை என்று.
அதற்கு அவர் சொன்னார். '' தமிழர் வரலாறு பற்றி போதிய ஆவணங்கள் இல்லை '' என்று.
அப்பப்பா, அவரை உண்டு இல்லைஎன்று ஆக்கி விட்டார்கள்.
'எப்படி சொல்லப் போயிற்று , ஆ ,நீ தமீழின துரோகி ,இன்னும் என்ன என்னவோ '
அதுவும் இந்த 'பொன்னியின்செல்வன் ' என்று ஒரு கூட்டம் இருக்கிறதே ...என்னவோ அவர்கள்தான் எல்லாம் அறிந்தவர்கள் போலவும் ...அடேயப்பா ,
குறைகுடங்கள் கூத்தடித்ததே ...அந்த குழுமத்தில் பாதி பேருக்கு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற ஒரு நாவல்தான் [ ஆம், அது ஒரு கதைதானே தவிர, சரித்திர புதினம் அல்ல ] மட்டும்தான் தெரியும் . அதற்குள் அனைத்தும் அறிந்து விட்டதாக ஆணவமாக திரு . மதன் அவர்களை நார் நாராக கிழித்தது அந்த கும்பல்.
நானும் எழுதினேன்.
மதன் சொல்வதுதான் சரி ' என்று. [ நானும் திரு.நீலகண்ட சாஸ்திரிகள் முதல் இன்னும் அனைத்து ஆசிரியர்களின் புத்தகங்களையும் படித்தவள் ]
அன்று கரகமாடியர்கள் இன்று நம் முதல்வரின் கூற்றுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? திரு .மதன் மிகவும் படித்தவர். அவரை விமர்சனம் செய்ய தகுதி உண்டா என்று யோசித்திருக்க வேண்டும் .
அவர் பெருந்தன்மையாக விட்டு விட்டார். '' இவர்கள் இவ்வளவுதான். இவர்களிடம் ஏன் பேச வேண்டும் ' என்று.
There is a saying:
It is foolish to argue with fools'' may be ...

1 comment:

Jeevan said...

"It is foolish to argue with fools'' may be ..." this might relate it with some people in this society.