About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/11/21

நீயா நானா

 இன்றைய நீயா நானாவில் young grandma (இள வயது பாட்டிகள் )என்பது பேசுபொருள்.

பாட்டிகள் இத்தனை வருடம் குடும்பத்திற்காக உழைத்து விட்டோம்.

now we want to enjoy our life .எனக்கே எனக்கான வாழ்க்கையை நாங்கள் வாழ வேண்டும் என்று பேசினார்கள்.

We look young , we feel young அப்படி இருக்க எங்களை ;ஆயா ,பாட்டி, அப்பத்தா என்று கூப்பிட்டு ஏன் ஓரம் கட்டுகிறீர்கள் என்று வாதம் செய்தனர்.

எனக்கும் இந்த எரிச்சல் வரும்.எங்காவது கடைகள்,பஸ்ஸில் ஒரு 35 வயது மதிக்க தகுந்த பெண்கள் ''பாட்டி'' என்று கூப்பிடும்.

எனக்கு 50 வயது.அவர்களுக்கு 35 வயது.

பெண்பிள்ளைகள்தான் இந்த அக்கிரமம்.

அதுவே அந்த வயது பையன்கள் ''அம்மா'' என்றுதான் சொல்வார்கள்.

ஹரிகேச நல்லூர் ஐயா பேசுகையில் ஒரு முறை இதைத்தான் சொன்னார்.40 வயதுள்ளவர்கள் எல்லாம் என்னை ''தாத்தா '' என்கிறார்கள்.கோபம் கோபமாக வருகிறது என்கிறார்.

யாருக்குமே தனக்கு வயதாகி விட்டதோ என்ற பயம் வந்து விடுகிறது

என் பிரச்சினை வேறு.

இந்த நிகழ்சசியில் பேசிய பெண்கள் சொன்னது போல் எனக்கு modern dressing etc ஆசை எல்லாம் கிடையாது.

வயது தெரிந்து விடும் என்ற எண்ணம் கிடையாது.

என் கார்த்தி மகனுடைய மகனோ, மகளோ வந்து என்னை பாட்டி என்று கூப்பிட வேண்டும்.

எத்தனை கனவுகள்????

எத்தனை கற்பனைகள்?????

கார்த்தியுடன் எத்தனை விளையாட்டு பேச்சுக்கள் ?????????

அத்தனையும் கற்பனையாகவே போய்விட்டதே ....

அதனால் இந்த பாட்டி என்ற வார்த்தை என் உயிரையே உலுக்குகிறது.

2 comments:

Jeevan said...

The thing is what we feel; age does not define everything.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் மன வேதனை புரிகிறது அம்மா...