About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/08/10

மேட்டூர் அணை :
கர்நாடகா முதல்வர் சொல்லி விட்டார் .இந்த வருடம் கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தாகிவிட்டது .
டிசம்பரில் கொடுக்க வேண்டும்
நான் பிடித்த  முயலுக்கு 3 கால் என்பவர்களிடம் என்ன பேசுவது.
அவ்வப்போது மழை பெய்ய வேண்டும் என்றுதான் வேண்டிக் கொள்ள வேண்டும்.
...............     ...............  ................
என் கணவர் மேட்டூர் அணையின் பொறுப்பு பொறியாளராக இருந்தார். அப்போதெல்லாம் அந்த அணைக்கு நாங்கள்தான் முழு பொறுப்பு ,அது எங்கள சொத்து என்பது போலெல்லாம் எனக்கு எண்ணம்.
அணைக்கு L T T E  மிரட்டல் இருந்தது.எனக்கு அழுகை.
.விரதம்.பூஜை என்று எத்தனை வழிபாடுகள்.
அது ஒரு காலம்.
.................. ............   .......
என் செல்ல கண்மணி கலாம் சொல்கிறார்.
''2017 க்கு பிறகு லஞ்சமில்லா  இந்தியாவை  உருவாக்கலாம்.''
அப்படியானால்  அதுவரை லஞ்சம்  இருக்கலாமா ?
ஏஞ்சாமி , நமக்கு தெரிந்த nano tech ,missile  பற்றியெல்லாம்  பேசலாமே.
ஏற்கனவே  கனவு காணுங்கள் ( have an ambition ) என்று சொல்ல போய்   ஆளாளுக்கு துவைத்து கிழித்து  காயப் போட்டார்கள்.
நல்ல வேளை .இதை யாரும் கவனிக்கவில்லை போலும்.
கவனிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் இப்போது  ஜனாதிபதி இல்லையே.

1 comment:

Jeevan said...

மழை ஒன்றுதான் வழி என்றாகிவிட்டது! இந்திய ஒரு விரிசல் நாடு, மாநிலங்களாக பிளந்து கிடக்குது.