About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/11/22

கந்து வட்டி கொடுமையா ????
எனக்கு ஒன்று புரியவில்லை.
எந்த பைனான்சியரும்  நம் வீடு தேடி வந்து ''நீ என்னிடம் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் ''   என்று நம்மை மிரட்டி பணம் கொடுக்கிறார்களா ?
இல்லையே.
நாம்தான் அவரிடம் நடையாய் நடந்து வாங்குகிறோம்.
வாங்கும்போதே இத்தனை வட்டி தருகிறோம் என்று சம்மதித்துதான் பணம் வாங்குகிறோம்.
அப்புறம் கடன் கொடுத்தவர்களை ஏன் கொடுமைக்காரர்கள் ...கொலைக்கு தூண்டினார்கள்      என்று  சொல்கிறார்கள்?
ஒரு முறை கடன் வாங்கி விட்டோம்.
கட்ட முடியவில்லை.
உஷாராகி விட வேண்டுமல்லவா ?
நானும் ஒரு நிலம் வாங்க கடன் வாங்கினேன்.
வட்டி கட்ட ஆரம்பித்த போது புரிந்து விட்டது.
இது மீள முடியாத புதை குழி என்று.
அன்றே நிறுத்தினேன்.
ஏதோ
 உயிர் காக்க மருத்துவ செலவு செய்ய கடன் வாங்கலாம்.
அது நியாயம்.
மற்றபடி
ஒரு படம் தோல்வியடைந்தவுடன் உஷாராகி விட வேண்டும் .
அதை விட்டு
தகுதிக்கு மீறி கடன் வாங்கி விட்டு பாவப்பட்ட பைனாசியர்தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு
தற்கொலை செய்வது கண்டிப்பாக ஏற்க முடியாது.
கார்த்திக் அம்மா

No comments: