About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/10/30

சுர்ஜித் .நாடகம்

நான் இரக்கமற்றவள் .
கல்நெஞ்சக்காரி .
இதயமே இல்லாதவள் .
இப்படி இன்னும்என்னை  என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள் .
ஆனால்
இமோஷனல்  emotional ஆகவே செயல்படுகிறோம் .
இந்த குழந்தை விழுந்தது யார் தவறு.
குழி வெட்டிய தந்தை.
குழந்தையை கவனிக்காத தாய்.
ஏன் அவர்கள் இருவரையும் யாரும் குறை சொல்லவில்லை ?
தண்ணீர் வரவில்லை என்றால் குழியை மூடியிருக்க வேண்டாமா ?
குழந்தை எங்கு விளையாடிக் கொண்டிருக்கிறான் என குழந்தை மேல் தாய் ஒரு கண் வைத்துக் கொண்டிருக்க வேண்டாமா?
சரி.நடந்து விட்டது.
மீடியாக்கள் ஏதோ இந்தியா சைனா யுத்தம் போல் லைவ் ஆக காட்ட வேண்டிய அவசியம் என்ன?அப்புறம்,
தமிழக மக்கள் அனைவரும் சோகத்தில் உறைந்து விட்டனர் என்ற அலப்பறை வேறு.
தமிழக மக்களே மனதை தொட்டு சொல்லுங்கள்.
வருத்தம் இருந்தது.உண்மை.ஆனால்
உண்ணாமல்
உறங்காமல்
வருந்தினோமா?
எல்லோருக்கும் ஒரு திரில்லர் சினிமா பார்க்கும் பொழுது போக்கு.
நன்றாக பொழுது போனது.(உண்மை இதுதான்.)
ஆனால் உண்மையை சொன்னால் எல்லோருக்கும் கோபம் வரும்.
அடுத்த நாடகம்.
20 லட்சம்
10 லட்சம்.
எதற்கு அந்த குடும்பத்திற்கு கருணை தொகை தர வேண்டும்?
கார்கில் போரில் போய் உயிரிழந்தானா .
அல்லது நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யப் போய் உயிர்  துறந்தானா ?
அந்த குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக தெரிகிறது.அப்புறம் அவர்களுக்கு எதற்கு பணம் தர வேண்டும்?
...
அப்படி பார்த்தால் டெங்குவால் இறக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கொடுங்கள்.
விபத்தில் இறப்பவர்களுக்கும் கொடுங்கள்.இன்னும் எத்தனையோ பேர் அரசு உதவி வேண்டி நிற்கிறார்கள்.
எந்த காரணத்தின் அடிப்படையில் இந்த கருணை தொகை?
நியாய படி பார்த்தால் இதற்கான செலவு நிச்சயம் 2 கோடியாவது  இருக்கும் என கணிக்கிறார்கள்.இதை கொடுக்க வேண்டியது அந்த குடும்பம்.
அந்த குடும்பம் தன் சொந்த செலவு செய்வதாக இருந்தால் இவ்வளவு செய்திருக்குமா?
நியாயம்.
அரசு மக்களை காப்பாற்ற வேண்டியதுதான்.
கடமைதான்.
ஆனால் எல்லா இடத்திலும் இந்த கடமை சரி வர செய்யப் படுகிறதா?
இந்த லைவ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெற்றோர் தன் மகள் தண்ணீர் தேடியதையும்  தொட்டியில் விழுந்து உயிர் போய்விட்டதையும் எப்படி நியாய படுத்துவார்கள்?
ஆனால் அரசு இவர்களுக்கும் 50 லட்சம் தரலாம்.
அதற்கடுத்து the so called தலைவர்கள்....1 கோடி தர வேண்டும்.
அரசு வேலை தர வேண்டும்.etc .etc
வாழ்க தமிழ்நாடு.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நடந்து முடிந்த ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் வேதனை தருகிறது...

Krishna Ram Kuttuva Jeyaram said...

surprised to see no actions taken against the parents for negligence.