About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/08/30

வக்கிரம் ...வக்கிரம்...வக்கிரம்.
நானும் பார்க்கிறேன் .வர வர மனிதர்களுக்கு வக்கிர புத்தி அதிகமாகிக் கொண்டே வருகிறது.
கீழ் வரும் செய்தியை பாருங்கள்.
கறவை பசுவை நேற்றுமுன்தினம் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டி போட்டிருந்தார். அப்போது அங்குள்ள புதரில் மது அருந்திய வாலிபர்கள், பசுவை அடித்து துன்புறுத்தினர். மேலும் அதன் பால் சுரப்பி காம்புகளை பிளேடால் அறுத்து கொடூர செயலில் ஈடுபட்டனர். இதனால் மடி காம்பிலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், பசு மாடு வலி தாங்காமல் சத்தம் போட்டது. இதைக்கேட்டு அல்லிமுத்து சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு 5 வாலிபர்கள், மாட்டை கொடுமை படுத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த விவசாயி, அவர்களை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள், “மாட்டின் காம்பை அறுத்தது போல உன்னையும் அறுத்து விடுவேன்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். தகவலின்பேரில் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடம் வந்து மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். காம்பு அறுபட்டதால், தற்போது பால் கறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் அதிகமாக சுரந்த நிலையில், மடியில் நெறி கட்டியுள்ளது. இதனால் மாடு மிகவும் சிரமப்பட்டு வருகிறது. அத்துடன் அறுபட்ட காம்பில் இருந்து பால் தானாகவும் வெளியேறி வருகிறது. மாடு அவதிப்படுவதை பார்த்து அல்லிமுத்து மற்றும் அவரது குடும்பத்தார், கண்ணீர் விட்டு அழுகின்றனர்
என்ன ஒரு புத்தி.இவர்களை அப்படி செய்ய வேண்டும்.அரபு நாடுகளில் நடப்பது போல் நாடு ரோடில் வைத்து உறுப்பை அறுக்க வேண்டும்.
அந்த மாடு படும் வேதனையை இவர்களும் அனுபவிக்க வேண்டும்.
ஆத்திரத்துடன் 
கார்த்திக் அம்மா  

No comments: