நீட் தேர்வும் விஜய்யும்
நேற்று மாணவ மாணவியருக்கு பரிசளிக்கும் விழாவில் விஜய் ஒரு கருத்தை சொல்கிறார்.
நீட் மட்டும்தான் வாழ்வா
இதே கருத்தை நிதி அமைச்சர் நிர்மலாவும் சொல்கிறார்.
எடப்பாடியும் சொல்கிறார்.
ஒரே ஆர்ப்பாட்டம்.எப்படி சொல்லாம் ???????????
சொன்ன கருத்து மிகவும் மிகவும் சரி.
சொன்ன விதம்தான் தப்பு.
நீட்டில் தேர்ச்சி பெற்று டாக்டராக விட்டால் என்ன???
வேறு எத்தனையோ துறைகள் இருக்கின்றன.
அவைகளை தேர்ந்தெடுத்து படித்து சாதிக்கலாம்.
அதற்காக தற்கொலை
என்ற தவறான முடிவிற்கு செல்ல வேண்டாம் என்றுதான் எல்லோருடைய கருத்தும்.
இதை கருதித்தான் சொல்ல முயன்று முழுதாக சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
நானும் டாக்டர் என்ற கனவில்தான் இருந்தேன்.அப்போது எண்ட்ரன்ஸ் தேர்வு கிடையாது.இன்டர்வியூ மட்டும்தான்.
25 மதிப்பெண்கள்.
நானும் என் தோழியும் 70 மதிப்பெண்கள் .அவளுக்கு இண்டர்வியூவில் 20ம்
எனக்கு 10 மதிப்பெண்கள்.அதனால் அவள் 90 . நான் 80. அவளுக்கு டாக்டர் ஸீட் கிடைத்தது.நான் தற்கொலை எண்ணத்தில் அழுதேன்.
ஆனால் வேறு படிப்பு படித்து அரசு வேலையில் அமர்ந்து சாதித்தேன். அது போல் எத்தனையோ சாதனைகள்.நானும் சொல்கிறேன்.நீட் மட்டும்தான் தேர்வல்ல.
மருத்துவம் மட்டும்தான் படிப்பல்ல.
எந்த காரணம் கொண்டும் தற்கொலை வேண்டாம்.வேண்டவே வேண்டாம்