About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/09/15

FDI in RETAIL
Central Govt has given the freedom to States to decide as to their wish.If Tamil nadu  wishes it can permit FDI .Once it decides not to allow , well and good, you need not have.
T.N  C.M has announced that she is against it.
Well , the matter is over.
But all the T.V channels are enjoying the chance to have programs on it.
அப்பப்பா , பேசுபவர்கள் எதற்காக இப்படி கத்துகிறார்கள்?
தமிழிசை  கத்தும் சத்தம் காதை  கிழிக்கிறது.
அவருடன் பேசும்  அமெரிக்கை  நாராயணன் எவ்வளவு பொறுமையாக பதில் சொல்கிறார்.
சொல்லும் விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்வதே சரியான முறை.
அடுத்தது,
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது  குறுக்கிட்டு பேசுவது....அவர் பேசி முடிக்கட்டுமே.அவருடைய கருத்து என்ன அன்று தெரிந்து கொண்டு , அந்த கருத்துகளுக்கு பதில் சொல்லுங்களேன்.
எவர் ஒருவர் தன மீதும் ,தன கருத்துகளின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களோ , அவர்கள்தான் இப்படி பேசுகிறார்கள் .
நானும் ஒரு  மேடைப் பேச்சாளிதான் .நானும் பல பட்டி மன்றங்களில் பேசியுள்ளேன்.need  it be said that i would always be the winner .
ஒரு பட்டி மன்றத்தில் பேசி விட்டு மேடையை விட்டு இறங்கிய பிறகும் ஒரு பேச்சாளர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். எனக்கோ வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசரம். கார்த்தி , செந்தில் தனியாக இருப்பார்கள். அவர்களுக்கு உணவு தயாரித்து தர வேண்டும் என்ற என் அவசரம் எனக்கு.
மேடைப் பேச்சும் , அந்த நடுவரின் தீர்ப்பும் என்ன supreme  court  judgement ஆ ?
ஏன் மக்கள் இவ்வளவு உணர்ச்சி வசப்படுவார்களோ?
         சரி, இந்த FDI  விஷயத்திற்கு வருவோம்.
நான் வேளச்சேரியில்  இருக்கிறேன்.மாலை ஒரு 5 மணிக்கு விஜயநகர் சிக்னலில் வந்து பாருங்கள்.ஒரு 15 சிறு வியாபாரிகள் சாலையின் ஓரத்தில் 10 ரூபாய் ஒரு கவர் என அனைத்து காய்களும், கீரைகளும் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அருகிலேயே, ஊட்டி ,பொன்கவிதா ,Daily fresh  என ,+Reliance ,Cee Dee Yes என்ற கடைகளும் இருக்கின்றன.
ஆனாலும், இந்த சிறு, (மிக சிறு ) கடைகளிலும் வியாபாரம் நன்றாகத்தான் நடக்கிறது .
Customers are not fools .அவர்களுக்கு தரமான பொருட்கள், சரியான விலையில் விற்கும் கடைகள்தான் தேவை.
எனவே  ஆயிரம் Wall Mart வரட்டுமே.நம்மூர் அண்ணாச்சிகளும் அதே தரத்தில் , அதே விலையில் கொடுக்கட்டுமே.நாங்கள் உங்கள் கடையை விட்டு வேறு கடைக்கு ஏன் போகிறோம்?
அடுத்த விஷயம்,
நான் அனுபவித்த விஷயம்,
the treatment  that one gets at these shops .ஏதாவது கேளுங்கள், காது  கேட்காத  போல இருப்பார்கள்.
அதுவே பெரிய  mart களில் , madam  என்ற மரியாதை இருக்கும்.
ஆக, இந்த FDI வரமா, சாபமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
பார்ப்போம்.
கார்த்திக்+அம்மா 

1 comment:

Jeevan said...

அதுவும் அணைத்து செய்தி சேனலும் ஒரே நேரத்தில் விவாதம்! I’m too against this FDI in retail...