About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/06/11

என் கணவர்  மேட்டூர் அணையில் A E E யாக பணியாற்றிக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி :
அவர் சிவில் துறை என்பதால் அணையின் பராமரிப்பு பொறுப்பு அவருக்கு..
    அணையில் நீர் குறைவாக இருக்கும் போது சுரங்கமின் நிலையம் செயல்படாது.அந்த நாட்களில்தான் அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அப்படி ஒரு நாள் என் கணவர் சுரங்கத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
திடீரென  ஏதோ ஒரு சத்தமும் அதிர்வும் கேட்டிருக்கிறது.
என் கணவரும் அவருடன் சென்ற இன்னும் இருவரும் வரும் அபாயத்தை உணர்ந்து அதிர்ந்துள்ளனர்.
அது என்னவென்றால், சுரங்கத்திற்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீர் வரும் வேகம் அது பற்றி தெரிந்தவருக்குதான் புரியும்.
விபரீதத்தை உணர்ந்தவர்கள் மின்னல் வேகத்தில் ஓட ,தண்ணீர் துரத்த ...,நூலிலையில் தப்பித்தனர்.தவறு யார் மீது ? ஆய்விற்கு செல்கிறேன் என்று இவர் சொல்லவில்லை.ஏன்  என்றால் அணையின் நீர் மட்டம் அவ்வளவு குறைவாக இருக்கும் போது தண்ணீர் திறக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இவர் தைரியமாக சென்று விட்டார்.
சிவில் A E E  உள்ளே சென்றிருப்பார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
......  ....
இந்த பழைய கதை இப்போது எதற்கு என்கிறீர்களா?
24 பிஞ்சு முகங்கள் அணை நீரில் அடித்து செல்லப் பட்ட செய்திதான்.
நெஞ்சு பதறுகிறது.எல்லோர் முகமும்  கார்த்தி முகமாக தெரிகின்றன.அந்த பெற்றோர்கள் இடத்தில் என்னை நிறுத்துகிறேன்.அந்த வேதனை என்ன என்று எனக்கு தெரியும்.
ஆனால் இதில் யாரை தவறு சொல்வது?
இத்தனை மாணவர்கள் அந்த நேரத்தில் அங்கு இருப்பார்கள் என்று அணை அதிகாரிகள் எதிர்பாராதது.
விதி.As always i say its ''HAPPENISM '' நிகல்விசம் .இன்று இது இப்படி நடக்கிறது.இதற்கு முன் வினையோ ,கர்மாவோ ,பாவமோ புண்ணியமோ காரணம் இல்லை.
இந்த நிமிடம் இது இப்படி நடக்கிறது. அவ்வளவுதான்.
ஏற்றுக் கொள்ள முடியாத, தீராத சோகம்தான்.நான் அனுபவிக்கிறேனே.கண்ணீருடன் வாழ்க்கைதான்.அந்த பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?விதியே உன் விளையாட்டு எல்லை மீறுகிறது.
வேதனையை பகிர்ந்து கொள்ளும்
கார்த்திக் அம்மா

2 comments:

Jeevan said...

Agree!

திண்டுக்கல் தனபாலன் said...

நெஞ்சு பதற வைக்கும் சம்பவம்...