About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/08/16

disclaimer :
i may be right or wrong :
பொன் குஞ்சு :
அதிசயம்
என் வீட்டருகே இருக்கும் மரத்தில் ஒரு காகம் கூடு கட்டி முட்டை வைத்திருந்தது.
அதை கவனித்துக் கொண்டிருந்தேன்.
முட்டையை உடைத்து குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தது.
ஆச்சரியத்தின்  எல்லைக்கே சென்று விட்டேன். 
அந்த குட்டி காகம் அப்படி ஒரு தங்க (golden ) நிறத்தில் வெளி வந்தது.
அதனால்தான் காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னார்களோ?????????
நேற்று இரவிலிருந்து மழை.
தாய் காகம் கூட்டில் அமர்ந்து சிறகால் குட்டியை காத்து வருகிறது.
தாய்க்கு ஏதாவது ஆகி விடுமோ என்று கவலையாக இருக்கிறது.
உணவு வைத்தாலும் சாப்பிடுமா என்று தெரியவில்லை.
ஒரு குடையை கூட்டின் மேல் வைக்கலாமா என்ற யோசனையும் வந்தது.எப்படி என்று தெரியவில்லை.
காகம் அசையாமல் உட்கார்ந்து இருக்கிறது.
கவலையாக இருக்கிறது.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதுவும் விபரீதமாக நடக்காது அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

Jeevan said...

I think this is a hatching season for crows... a crow is hitting the heads here which seems it has nested somewhere near. Hope the crows and chicks are safe enough

Angel said...

தாயன்பு ! இதுதான்கா .உங்க மனசு காக்கா அம்மாவின் அன்பு ரெண்டும் கிரேட் .
அம்மா காக்காவுக்கு ஒண்ணும் ஆகாது ..பயப்படாதீங்க .

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

தாயும் சேய்களும் நலம். பெரிய நிம்மதி.

நன்றி DD

நன்றி Anjelin

நன்றி jeevan