About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/08/06

ராயபுரம்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் சென்ற அரசு பஸ் மீது நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து ஜன்னல் ஓரத்தில் இருந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா (வயது 18) முகத்தில் கண்ணாடி துகள்கள் விழுந்து அவர் காயம் அடைந்தார்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஐஸ்வர்யாவை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கண்ணாடி துகள்களால் ஐஸ்வர்யாவின் முகத்தில் காயம் ஏற்பட்டதால் அங்கு அவருடைய முகத்தில் 9 தையல்கள் போடப்பட்டன.

மேலும் இந்த காயத்தால் அவருடைய முக அமைப்பு மாறியிருப்பதால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 
.......     ........ .......
.......
இந்த பெண்ணின் புகை படத்தை ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும், ஒவ்வொரு கல்லூரியிலும் வைக்க வேண்டும்.
.......மாணவர்கள் என்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
.......யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
... நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
...ஆனால் இந்த பெண்ணின் துயரத்திற்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்????????????
கோபத்துடன் 
கார்த்திக் அம்மா

1 comment:

நம்பள்கி said...

you do not have to publish my last [long] comment. It is meant for you to take help.
Thanks!