About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/07/26

Kamal says ,
யோசித்துப்பார்க்கும் பொழுது, இன்று வரை என் தகப்பனாரின் மறைவுக்கு நான் அழுததே இல்லை. அவர் மறைந்த போது என் வயது எட்டு. ஏன் அழவில்லை - சத்தியமாகத் தெரியவில்லை. மிச்ச வாழ்க்கையைத் தகப்பனில்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்ற மகா திகில் முன் அழுகை வரவில்லையோ???

வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம் untimelyயாகப் பிடுங்கிக்கொள்ளப்படும்போது எஞ்சுவது ஒரு மிகப்பெரிய ஷாக் மட்டுமே. புலன்கள் செயலிழந்து விடுகின்றன. என்று அந்த வலியும், ஷாக்கும் குறைகிறதோ அன்று தான் அதற்காக அழ முடியும். 

ஒரு மறைவிற்கு உங்களால் அழ முடிந்தால் நீங்கள் பாக்கியவான்கள். Vent out பண்ண முடியவில்லையென்றால் you are yet to overcome the shock.
எவ்வளவு உண்மை.
கார்த்தியின் அந்த நாள் ...
அன்று நான் அப்படித்தான் பிரமை பிடித்து 
அழாமல்
 கல்லாய் 
விரக்தியாய்
 உயிரற்று 
உணர்வற்று இருந்தேன்.
இப்போது கண்ணில் கண்ணீர் வற்றுவதில்லை .எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும்,யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் என்னை அறியாமல் கண்ணீர் துளி எட்டிப் பார்க்கும்.
யார்க்கும் தெரியாமல் லாகவமாக துடைத்துக் கொள்வேன். 
BUT I AM YET TO OVERCOME THE SHOCK. 
கார்த்திக் அம்மா

No comments: