About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/03/14

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):
எத்தனை நாட்களுக்கு இந்த கதையையே  சொல்லப் போகிறார்கள்?
சத்தியவான்  சாவித்திரி கதையை த்தான் சொல்கிறேன்.
இது பற்றி பதிவு ஏற்கனவே  எழுதியுள்ளதால் மீண்டும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் எந்த channel  திருப்பினாலும் இதே கதை.
எரிச்சல் எரிச்சலாக வந்தது.
என் கேள்வி என்னவென்றால் ,சாவித்திரிக்கு பிறகு யாருமே கற்புக்கரசிகளே இல்லையா?
எத்தனை 100 ஆண்டுகள் ?
எத்தனை மனைவிகள்  கணவனை இழந்துள்ளனர்?
அவர்கள் கண்ணுக்கெல்லாம்  எமதர்மன் தெரியவில்லையா?
அவர்களுக்கெல்லாம் எமன் வரும் போது வரம் கேட்க தெரியவில்லையா?
போதும். போதும்.காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.
கோவிலுக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்கு  இப்படி கதை சொல்லிக் கொண்டே போக வேண்டாம்.

No comments: