About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/10/29

முதல்வர்..உத்தரவு.....
ஆரம்பிச்சிட்டாங்கையா .மறுபடியும் ஆரம்பம்.
தமிழக அரசு அறிவிப்பு  என்று  செய்திகள் வந்தபோது அப்பாடா என்று இருந்தது.
முன்பெல்லாம்  விவசாயிகளின்  வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறக்க ......     ........ உத்தரவிட்டார் என்று தொலைக்காட்சிகளில் செய்தி வரும்போது எரிச்சலாக இருக்கும்.இந்த நதிகளெல்லாம் எப்போது தனி ஒருவருக்கு பட்டா செய்யப் பட்டது.என்ற கேள்வி எழும்.(மனதிற்குள்தான்.)
விவசாயிகல் கெஞ்சிய பிறகுதான் தண்ணீர்  திறக்கப் படுமா?
இல்லை .வேண்டாம். அந்த தண்ணீரை திறக்காமலே வைத்துக் கொள்ளட்டுமே . .
அப்பாடா
இந்த எரிச்சலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாகி விட்டது.தமிழ்நாடு நமக்கும் சொந்தமானதுதான் என்று நினைக்க ஆரம்பித்தோமா.
மீடியாக்கள் ஆரம்பித்து விட்டன. முதலில் தமிழக அரசு அறிவிப்பு என்றார்கள். அப்புறம் ops சொன்னார் என்றார்கள்.
இன்று மறுபடியும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக ,
விவாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார் என்று செய்தி சொல்கிறார்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படி சொல்ல சொல்கிறார்களா அல்லது அவர்களின் தயவை நாடி ஊடகங்களே இப்படி சொல்கின்றனவா?
போதும் போதும்.
'' '' தமிழக அரசு அறிவிப்பு '' ''
என்றே செய்தி சொல்லுங்கள்.
கார்த்திக் அம்மா

No comments: