About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/11/16

தமிழ்நாட்டில் கொலை கொலை அதிகமாகிவிட்டது என்பதற்கான முக்கிய காரணம்
1.காதல் .
முக்கியமாக பெண்கள் படிக்கும் வரை தன தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய இளிச்சவாயன் ஒருவனை காதலிப்பது போல் நடிப்பது. படித்து முடித்து, வேலைக்கு சேர்ந்து விட்டால் அவர்களின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டு பழைய காதலனை கைகழுவி விடுவதுதான் நடக்கிறது.
eg :
மாணவி தேஜாஸ்ரீ கொலை வழக்கில் 2 கொலையாளிகள் சிக்கியது எப்படி?


மாணவி தேஜாஸ்ரீ கொலை வழக்கில் 2 கொலையாளிகள் சிக்கியது எப்படி? என போலீஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

’’கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் யுவஆதித்தனும், இளம்பெண் ஹரிணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது பெற்றோருக்கு முதலில் தெரியாது. பின்னர் தெரிந்து விட்டது. ஹரிணியின் குடும்பம் ஏழை குடும்பம். ஆனால் யுவஆதித்தன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஹரிணி என்ன கேட்டாலும் யுவஆதித்தன் வாங்கி கொடுத்து வந்துள்ளார். துணிமணி என எது கேட்டாலும் உடனே அவர் வாங்கி கொடுத்து வந்துள்ளார். சில மாதத்திற்கு முன்பு ஹரிணிக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளது.

இதை அறிந்த யுவஆதித்தன் வருத்தப்பட்டார். தனது காதலி சென்னைக்கு சென்று விட்டால் பார்க்க முடியாது, பேச முடியாது என வருத்தப்பட்டார். இதனால் ஹரிணியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் தீபாவளி அன்று சென்னை சென்ற யுவஆதித்தன், காதலி ஹரிணியை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. மறுநாள் ஹரிணியின் நிறுவனத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஹரிணி தன்னை பார்க்க வரவேண்டாம் என கூறி அவரை கண்டித்து உள்ளார்.

இருப்பினும் யுவஆதித்தன் அன்று முழுவதும் ஹரிணி நிறுவனத்தில் அவருக்காக காத்து இருந்தார். இதை அறிந்த ஹரிணி காவலாளியை அழைத்து யுவஆதித்தனை விரட்டி விட கூறினார். காவலாளியும் விரட்டி விட்டுள்ளார். இதனால் யுவஆதித்தன் கோபம் அடைந்தார். தன்னை விரட்டி விட்ட காதலியையும், காதலியுடன் சேரவிடாமல் தடுத்த அவரது பெற்றோரையும் கொல்ல சதிதிட்டம் போட்டுள்ளார்.

இதற்கு கடந்த ஒருமாதமாக காத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹரிணியின் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினரை கொல்ல முடிவு செய்து நண்பருடன் வந்துள்ளார். ஆனால் வீட்டில் தேஜாஸ்ரீ மட்டும் இருந்துள்ளார். இதனால் இவரை மட்டும் கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த கொலை வழக்கு செல்போன் மூலம் துப்பு துலங்கி உள்ளது. கொலை செய்ய புறப்பட்ட யுவஆதித்தன் அன்று மாலை சேலம் புறப்பட்டு வந்துள்ளார். தன்னை செல்போன் மூலம் போலீசார் பிடித்து விட்டால் என்ன செய்வது என கருதி அன்று மாலை 3மணியளவில் செல்போனை அணைத்து வைத்து விட்டார். கொலை நடந்து முடிந்து தப்பி சென்ற பின்னர் இரவு 9மணியளவில் செல்போனை ஆன் செய்துள்ளார். இந்த கொலைக்கு உதவிய அவரது நண்பர் சசிக்குமார் மாலை 6மணி அளவில் சேலம் வந்து இருப்பதும் செல்போனில் பதிந்து உள்ளது. இதை வைத்து இருவரையும் கண்காணித்த போலீசார் பின்னர் கைது செய்து விட்டனர். முதலில் மறுத்த இருவரும் பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஹரிணி கிடைக்காத ஏக்கத்தில் யுவஆதித்தன் கொலை வெறியுடன் சுற்றி திரிந்துள்ளார். மாணவி கொலை நடந்த அன்று வீட்டில் தேஜாஸ்ரீயை தவிர வேறு யாரும் இல்லை. இருந்து இருந்தால் அனைவரையும் கொல்ல இருந்தேன் என யுவஆதித்தன் வாக்குமூலத்தில் கூறி உள்ளான் //
...........
பெண்களே திருந்துங்கள்.

No comments: