About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/04/09

பதிவிடுவது   கார்த்திக் அம்மா
*****20 பேர்  பலி :***
முதலில் .சொல்லி விடுகிறேன்
உயிர் என்பது விலை மதிப்பற்ற விஷயம் :
இரண்டு இன்னுயிர்களை ( என்  கணவர் ++என் அன்பு அன்பு மகன் கார்த்திகேயன் ) இருவரையும் இழந்து வேதனையிலும்  கண்ணீரிலும் காலத்தை கடத்தும் எனக்கு உயிரின் அருமை தெரியும் .என்ன விலை கொடுத்தால் திரும்ப வருவார்கள் ?
அதனால் 20 பேரை சுட்டுக் கொன்றது    மகா   தவறு .ஒத்துக் கொள்கிறேன் .
ஆனால்
ஆனால்
நம் பக்க தவறையும்  ஒரே ஒரு  நிமிடம்  சிந்திப்போம் :
எத்தனை வட மாநிலத்தவர் சென்னையில் வேலை செய்கின்றனர் . அவர்கள் எந்த  கடின கடின  வேலையையும் செய்கின்றனர்..
திருவண்ணாமலை  மாவட்டத்தில் வேலை   வாய்ப்பு  இல்லை .அதனால் மரம் வெட்ட  சென்றோம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் .அதிக பணம். அதுதான்  காரணம் .
பணம்
ஒரு எழுத்து மாறினால்
பணம் ......பிணம்
இரண்டாவதாக  மாறிய பின் எவ்வளவு பணமும்  என் செய்யும் ?
எல்லோருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் .
ஒரு மோர் சாதம் போதும்.
பிரியாணி தேவையில்லை .
வாழ வேண்டும்.
அதற்கான பணம் போதும் .மீண்டும் தவறு செய்யாதீர்கள் .
அன்புடன்
கார்த்திக் அம்மா

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான் அம்மா...

Jeevan said...

Very true! I also condemn the organisations/groups in TN for converting the human right violation into interstate issue.