About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/04/22

*பூணூல் :
**மேகதாது அணை :
***கார்த்திக்+நண்பன்+கணிதம் :
அதுதானே பார்த்தேன். இன்னும் கார்த்திக் புராணம் ஆரம்பிக்கவில்லையே .கார்த்தி பற்றி இல்லாமல் பதிவு இருக்காதே என்று என் வாசகர்கள் ??????? (ஒருவர் சொல்லிக் கொள்கிறாரே ..என் பதிவை ஒரு நாளுக்கு 15000   படிக்கின்றனர் என்று ) அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. ஐயோ  பாவம் என என் மேல்  பரிதாபப் பட்டு ஒரு 10 பேர் படிக்கலாம்.

கார்த்தி:எப்போதும் கணக்கில் 100% மதிப்பெண்கள்தான் . அவன் வகுப்பு தோழன் தான்தான் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற வெறியுடன் இருந்தான்.காலாண்டு, 1/2 ஆண்டு தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் வீட்டில் மாணவர்கள் இருப்பர். கார்த்தி தன மதிப்பெண்ணை அறிந்து கொண்டு, ஏதாவது தவறு செய்திருக்கிறோமா என பார்த்து  விட்டு வந்து விடுவான்.அவன் வந்த   பிறகு அவன் நண்பன் கார்த்தியின் விடைத்தாளை ஆசிரியரிடம் விவாதித்து கார்த்தி கமா போடவில்லை.முற்றுப்புள்ளி வைக்கவில்லை இதற்கு 1/2 மதிப்பெண் ,அதற்கு 1/2 மதிப்பெண் குறையுங்கள் என்று வாதிட்டுக் கொண்டிருப்பான். ராமனின் தம்பி இலக்குவனைப் போல் கார்த்தியின் தம்பி செந்தில் அங்கிருந்து இதை பார்த்து கத்தி சண்டை போட்டு விட்டு வருவான்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், கார்த்தியை பார்த்து அவனை போல் படித்து நீயும் 100 மதிப்பெண்கள் பெற முயற்சி செய். அவன் மதிப்பெண்களை குறைத்து உன் மதிப்பெண்ணை முதல் மதிப்பெண் ஆக்காதே,
.
பூணூல்:
இதையேதான் பிராமணர் அல்லாத அனைத்து மக்களுக்கும் சொல்கிறேன்.அவர்களுக்கு பூணூல் அணிவது வழக்கம் என்றால் அணியட்டும். நாமும் அணிந்து கொள்ளலாம். எந்த சட்டம் தடுக்கிறது? என் தாத்தா பூணூல் அணித்து இருப்பார்.பூணூல் அனைவருக்கும் உரியது. நூலின் எண்ணிக்கைதான் மாற்றம்.இதை மறைத்து பொய் கதைகள் சொல்லி நம்மை அடிமைப் படுத்தியவர்களை அறிவால்தான் வெல்ல வேண்டும். அராஜகத்தால் அல்ல.அனைவரும் பூணூல் அணிவோம்.

மேகதாது ஆணை:

இப்போது ஈரோட்டில் பெய்த மழையில் அணை நிரம்பி உபரி நீர் ஊருக்குள் புகுந்து 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த சிறு மழையின் நீரையே சேமிக்க எந்த வழியும் செய்யவில்லை நாம். அவர்கள் ஒரு அணை கட்டினால் நாம் 2 அணை கட்டலாமே..எப்போதும் போராட்டம். உரிமை கேட்கிறோம் என்ற பெயரில் யாசகம்....
சிந்தித்தால் மட்டும் போதாது. ஒன்று கூடுவோம். போராட்டம் விடுத்து செயல்படுவோம்.
நேற்று காமராஜ் என்னும் பொறியாளர் ஒரு திட்டம் கொடுத்துள்ளார். மிக சிறந்த திட்டமாக தெரிகிறது. அதை முழு முனைப்போடு செயல் படுத்தலாமே.
பி.கு.
பெங்களூருவில் கார்த்தி வீடு அடுக்ககத்தில் தண்ணீர் பற்றாக் குறை. போர் போட்ட போது 700 அடியில்தான் நீர் கிடைத்தது. சென்ற வருடம் லாரியில் நீர் வாங்கினோம்.இப்போது பிரச்சினை இல்லை அங்கேயே நீர் பஞ்சம் 700 அடி என்ற கதைதான்.
அன்புடன் கலாகார்த்திக்
 கார்த்திக் அம்மா

2 comments:

Jeevan said...

Our reservoirs are shirking, and water channels have blocks so even average rainfall seems heavy downpour and people to complain flood at normal fall to feel excess.

திண்டுக்கல் தனபாலன் said...

அறிவால் தான்... சரி தான்...