About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/11/17

இன்று மத்திய அரசு (இப்போது மட்டும் மத்திய அரசு ...மீதி நேரங்களில் பிரதமர்..) வெளியிட்டுள்ள அறிவிப்பு இது :
திருமண செலவிற்கு 2.5 லட்சம் வங்கிகளில் இருந்து எடுத்து கொள்ளலாம்.
.......1.முதலில் வங்கி கணக்கில் அவ்வளவு பணம் கொண்டு வர வேண்டும்.
2.அந்த பணம் எடுக்க ஆதாரம் சமர்ப்பிக்க்க வேண்டும்.
3.எல்லா கருப்பு பணமும் ஒழிந்து .....ஒளிந்து .....விட்டது.
சரி.சரி.சரி.
ஒரு மணப் பெண்ணின் புடவை மட்டும் 15 கோடி ரூபாய் என்று செய்தி படித்தேன்.
அந்த கல்யாண செலவு மட்டும் 650 கோடி என்றும் செய்திகள் சொல்கின்றன.நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்.காட்சிகள் மயக்கத்தை வரவழைக்கின்றன.
4.கேள்வி .....இவர் எந்த வங்கி கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுத்து செலவு செய்தார்????????????????
வருமானம் கணக்கு காட்டப் பட்டதா?
வரி கட்டப் பட்டதா???????????????
சுரங்க தாதா  சிரிக்கிறார்.
முட்டாள்களா ..நீங்கள் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று எனக்கு தெரியாதா ?
என் மருமகன் யார் ?????????????
அவர்தான் எல்லா செலவும் செய்தார் என்று கதை சொல்ல மாட்டேனா ?
உங்கள் காதில் முழம் முழமா பூ சுற்ற எனக்கு தெரியாதா ?
எங்களை போன்ற முதலைகளை காப்பாற்றவே ஒருவர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
எங்களுக்கு என்ன கவலை??????
கார்த்திக் அம்மா

No comments: