About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/07/17

இன்று ஆடி மாத பிறப்பு.
எங்கள் சேலம் மாவட்டத்தில் சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.
புதுமண தம்பதியினருக்கு மாமனார் விட்டு அழைப்புடன் சீரும் கிடைக்கும்.
''கோழி அடிச்சு கொளம்பு வச்சு '' மருமகனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு.ஜோர் ஜோர்தான்.
சிறுவர்கள் காலையில் அருகம்புல் தலையில் வைத்து நீராடி ''ஒப்பிட்டு '' (போளி ) பலகாரம் சாப்பிட்டு ...சொல்லாமல் அறியப்படுவது கோழிக்குழம்பு ...
ஒரு தேங்காயை எடுத்து உரசி மொழு மொழு வென செய்து அதில் ஒரு கண்ணை துளையிட்டு பாதி தண்ணீரை எடுத்து விட்டு உள்ளே எள் ,வெள்ளம்,அரிசி ,ஏலக்காய் போட்டு புரசை குச்சியால் துளை அடைத்து நெருப்பில் சுட்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்து அதை உடைத்து சாப்பிட்டு மகிழ்வர்.
தேங்காய் சுடும் நோம்பி (நோன்பு) என்றேதான் சொல்வார்கள்.
பழைய நினைவுகள் .
காலம் மாறி 
கோலம் மாறி
 இன்று சென்னையில்.
வாழ்க்கை சக்கரம் எனக்கு சுழன்றது போல்
காற்றில் அலையும் காகிதமாய் என்னை அலைய விடுவது போல்
யாருக்கும்    வேண்டாம் .
ஆடி மாதம் புது தண்ணீர் வருவதால் நோய் தொற்றும் வரும் என்பதால் இந்த தேங்காய் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்ற அறிவியல் அடிப்படையில்தான் இந்த தேங்காய் சுடும் நோம்பி
கார்த்திக் அம்மா

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

(சில) நினைவுகள் என்றும் இனியவை...

Jeevan said...

You remember it well and i have seen it making in a travel and food show