About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/04/30

Movie lovers please don't get wild. Today i saw the movie BOMBAY [ பம்பாய் ].
see, I used to see films very rarely. While Karthik used to see lot of movies, [he will bring CD s during weekends and see them ].He would like his mother to enjoy the film, while my sole worry would be about preparing food and sweets. And I will be enjoying his happiness. So i would never watch a movie completely.
But pathetically TIME has changed and i have no other choice to kill time, so i switch on the TV and now i come to understand that some movies are really worth .
And this film. MY !!!!!!!! Simply amazing.
My first impression was "oh, another love story ? "
I could have switched it off. Thank goodness. I did not do it.
This movie must be telecast in all schools compulsorily.
And the kids, hats off to them.
Will people understand this message?
And WE are born in a country where Gandhiji was born.
What ever the problem be, why don't we use AHIMSA?
The innocent people are targeted every time.
This should definitely change.
A peaceful nation should dawn.
Hopefully,

Karthik amma

2008/04/25

செல்வி ஜெயலலிதா தான் பேசும்போதெல்லாம் " "எனது ஆட்சியில்,, நான் ஆணையிட்டேன் " " என்ற வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்..இது எவ்வளவு தவறான விஷயம்?
ஒரு கோர்ட்டில் கூட
நீதிபதி, "நான் உத்தரவிடுகிறேன்" என்று கூறுவதில்லை. "இந்த கோர்ட் ஆணையிடுகிறது " என்றுதான் கூறுகிறார். வேறு யாரும் இப்படி பேசுவதும் இல்லை. " எங்கள் ஆட்சியில் " என்றுதான் சொல்கிறார்கள்.
இந்த அம்மையார் ஆட்சியில் இருந்த போது, "அரசு உழியர்களுக்கு அகவிலைப் படி வழங்க "நான் " உத்தரவிடுகிறேன்''''' என்றுதான் சொல்வார். என்னவோ அவருடைய தாத்தா , பாட்டி சம்பாதித்த சொத்திலிருந்து கொடுப்பது போலத்தான் இருக்கும்.அதுவும் போனால் போகிறதென்று பிச்சை போடுவது போல!!!!
அரசு அலுவருக்கு உரித்தான ,உரிமையான ஒன்றை , அரசு கருவூலத்திலிருந்துதாந் தருகிறோம் என்ற நினைவே அவருக்கு வராதுதான் விசித்திரம். "தான்" என்ற சொல்லுக்கு என்ன மகிமை? யாராவது அவருக்கு புரிய வைப்பார்களா?
அட, அதற்கென்ன,
அதற்கும் ஒரு ஹோமம் வளர்த்தி, தமிழ் நாட்டு தாய்க் குலங்களை தீபம் ஏற்ற சொன்னால் முடிந்தது பிரச்சினை.
ஐயோ ,தமிழ் நாடே !!!!!!!!!!!!

2008/04/24

பாரதியும் யானையும்

தொலைக் காட்சியில் ஒரு மதம் pidiththa யானை ஒரு மனிதனை காலால் மிதித்து கொள்ளும் காட்சியை காட்டினார்கள்.
எனக்கு நம் முண்டாசு முரட்டு புலவர் பாரதியார் நினைவுதான் வந்தது.
ஏன்? ஏன்?
அந்த கோவிலுக்கு தினமும் செல்லும் பாரதி ,தினமும் அந்த யானைக்கு பிரசாதம் தரும் வழக்கம் கொண்டிருந்தார். அப்படி அவருடன் பழகியிருந்த அந்த யானைதான் அவரை காலால் மிதித்து கொன்றது.
அந்த நேரத்தில் அவருடைய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்?
" காலா, வாடா , உன்னை காலால் உதைக்கிறேன் " " என்று பாடிய அந்த புலவன், அந்த தருணத்தில் உணர்ந்தது என்ன?
வாழ்க்கையில்தான் எத்தனை விடை தெரியாத கேள்விகள்.
பி.கு.
ஆனாலும் இந்த வீரப்பன் இல்லாமல் போனதும் இந்த யானைகளின் அட்டகாசம் அடக்க முடியாத அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.

இனிமைக்கும் இனிமையான,
kaarththikeyan

2008/04/23

தொலைக் காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். ஒரு கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. குற்றம் சாட்டப் பட்டவன், வாதிடும் வக்கில்கள் என அனைவரும் இள வயதினராக உள்ளனர்.
அடுத்த காட்சியில் அனைவரும் வயதாகி [ பேசத் தடுமாறும் அளவிற்கு ] வாதாடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கு முடிந்த பாடில்லை. plywood மரம் அவ்வளவு நீடித்து உழைக்கும் என்பதற்கான விளம்பரம் அது.
அது சரிதான்.
ஆனால், ஒரு வழக்கு என்பது 20 அல்லது 30 வருடங்களாக இழுத்துக் கொண்டே இருக்கும் என்பதும் சரிதானோ?

சிரிப்புடன்,
இனிமைக்கும் இனிமையான
கார்த்திகேயன்

2008/04/20

எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும், அடிமனதில் ஒரு ******* தலைவிரி கோலமாய் ஓடிக் கொண்டேயிருக்கிறாள்.
வெறித் தனமாய், சுவரில் முட்டி மோதிக் கொள்கிறாள்.
ஓவென்று அலறுகிறாள்.

தக்காளி நறுக்க கத்தியை எடுத்தால், கை தன்னையுமறியாமல் கழுத்திற்கு செல்கிறது.
அல்லது, வயிற்றை மேலிருந்து கீழ் நீண்டகோடாக கிழிக்க ஆசைப்பட்டு, கத்தி வயிற்றை தொடுகிறது.
எங்காவது கெரோசின் கண்ணில் பட்டால், " இது உனக்காகத்தான்...எடுத்து ஊற்றிக் கொள் " என்று மனதில் ஒரு குரல் சத்தமாக கேட்கிறது.
தண்ணீரைப் பார்த்தால், " ஆ, இறங்கு, இறங்கு " என்று உந்துகிறது.
எத்தனை நாட்கள் அறிவு இவளைக் கட்டுப் படுத்தும் ?
தெரியவில்லை.....
ஆழ் மனதின் அபலைப் பெண் என்றாவது ஆக்ரோஷமாய் , ஆவேசமாய் வெளி வந்து விடுவாளோ என்ர பயத்துடனும், [ அதே அளவு ஆசையுடனும் ] நாட்களை கடத்துகிறாள் இவள்.
யாரோ புலம்பியது....
*************

2008/04/13

தமிழ் புத்தாண்டு

தை ஒன்றுதான் புத்தாண்டு என்று முதல்வர் அறிவித்தும், விடாப்பிடியாக,

வாசலில் கோலம் போட்டு, HAPPY NEW YEAR என்று ஆங்கிலத்தில் எழுதி புத்தாண்டு

கொண்டாடும் இனிய "TAMIL " மக்களுக்கு என் ஆழ்ந்த ****************

Sweetest karthikeyan

2008/04/08

this article on Deccan Chronicle ePaper, and thought you would find it interesting. You can find it at: 'Slippers save a life on road'Deccan Chronicle ePaper - Digital replica of Print Edition.

please read this news clipping before reading my view.

have you read? As I have said in my previous posts, it's FATE which is the deciding factor. It's all HAPPENISM...If this has to happen this moment , it will happen. Why should his slippers be seen and why should someone guess that there might be one more person ?

அந்த நபர் பிழைக்க வேண்டும் என்பது விதி.இல்லையேல்,அவருடைய செருப்பை பார்க்காமலே சென்றிருக்கலாமே. அல்லது பார்த்தும் குட, இன்னொரு நபர் அந்த பைக்கில் வந்திருக்கலாம் என்று தோன்றாமல் போயிருக்கலாமே? அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று விதியிருந்தால் எப்படியாவது பிழைப்பர்.
ஒரு சினிமா படத்தில், கதாநாயகி தன் டிரைவரிடம் கேட்கிறாள் "காதல் என்றால் என்ன? " என்று.

அதற்கு டிரைவர் சொல்கிறார் " காதல் என்பது ஒரு விபத்து போன்றது. நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக வண்டி ஒட்டினாலும் நடக்க வேண்டும் என்று இருந்தால் "விபத்தை தவிர்க்கவே முடியாது"

இதுதான் உண்மை. கார்த்தி ஆறு வருடங்களாக அந்த Fiero பைக் ஒட்டியிருக்கிறான்.ஒரு சிறு விபத்து குட நடந்ததில்லை. முதல் விபத்தும் அதுவே.கடைசி விபத்தும் அதுவே.
அவன் சரியாக ஒட்டியும் சாலையில் ஓட்டும் அடுத்தவர் செய்த தவறுக்கு விதியைத் தவிர வேறு யாரை குறை சொல்ல முடியும்? ஆனால், அவன் விபத்தை ஒரு விவாதத்திற்குரிய விஷயமாக்குவதுதான் மிகுந்த வேதனையளிக்கிறது.

அம்மா