About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/01/26

.பதிவு எழுதி வெகு நாளாயிற்று.
எதைப் பற்றி எழுதுவது?
நாட்டில் ஏதாவது நல்லது நடந்தால்தானே?
கற்பழிப்பு
ஊழல்
கொலை
 கொள்ளை
இதை எல்லாவற்றையும் விட
ஆர்ப்பாட்டம் ,ஆர்ப்பாட்டம்
சாலை மறியல்
யார் வேண்டுமானாலும்  எதற்கு வேண்டுமானாலும் கொடி  தூக்கலாம்  .
கல்லெடுத்து அடிக்கலாம்.பேருந்து கண்ணாடியை உடைக்கலாம்.அதையும் மீறி பேருந்தை எரிக்க கூட எரிக்கலாம்.
இதை விட அற்புதமான விஷயம் ,எதைப் பற்றி எழுதினால் என்ன விதமான விளைவுகள்  என்ற பயமே ஏற்பட்டு விட்டது.
அதனால் கார்த்தியை பற்றி எழுதினால் ''ஒரே சோக கீதம் ''என்ற comment .ஆனால் நான் கார்த்தி எழுதிய இந்த விஜயநகர் blog ஐ தொடர்வதற்கு காரணமே கார்த்தியை பற்றி எழுத வேண்டுமென்பதுதான்.
அதனால் கார்த்தியை பற்றி .
2000 ம் ஆண்டு, Jan 26 .கார்த்தி  bangalore  லிருந்து சென்னை வீட்டிற்கு வந்தான்.அம்மாவை பார்த்து 100 முத்தம் வாங்கிக் கொண்டால் போதும் அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் வரும்.விடிகாலை வந்தவுடன் தூங்க ஆரம்பித்தான்.நான் கோலம் போட  ஆரம்பித்தேன். எப்போதும் ஜன 26+ஆக் 15 இந்தியா கோலம் போட்டு கலர் கொடுப்பேன்.என் flat security நேபாளி வந்து ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு ''இது எங்கள் நாடு '' என்று நேபாளத்தை தொட்டு பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்.இந்தியாவும்,மூவர்ண கொடியும் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.
climax இதுதான்.திறந்திருந்த கதவு காற்றில் அடித்து கொண்ட வேகத்தில் சாத்திக் கொண்டது.இந்த automatic கதவுகளை கண்டுபிடித்த மகான் யாரோ ?கதவுக்கு வெளியில் நான்.mobile இல்லை.சாவி இல்லை.
கார்த்தி லேசில் தூங்க மாட்டான். ஆனால் தூங்க ஆரம்பித்தால் சாதாரணத்தில் எழுப்ப முடியாது ஒரு 1/2 மணி நேரமாக கதவை உடைக்காத குறையாக தட்டியாயிற்று.கார்த்தி அசைந்தால்தானே.
அம்மாவிடம் வந்தாகிவிட்டது என்ற திருப்தியில் ,பெங்களூரில் நான் இல்லாமல் தூங்காத தூக்கத்தையெல்லாம் சனி,ஞாயிறு  2 நாட்களில் தூங்கி முடிப்பான்.
அப்படி கதவை தட்டி தட்டி கத்தி எல்லாம் போராடிக் கொண்டிருந்த போதுதான் வெளியில் சென்றிருந்த செந்தில் வந்து மொட்டை மாடிக்கு சென்று ஒரு கம்பியால் படுக்கையறை ஜன்னலை தட்டி ஒரு வழியாக கார்த்தியை எழுப்பி அவன் கதவை திறந்து,ஒரே ஓட்டமாக பள்ளிக்கு சென்று கொடியேற்றி ,நிம்மதி பெருமூச்சு விட்டு .....
interesting episodes
karthik +amma 

1 comment:

Jeevan said...

hum... of course, nice memories.