About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/07/17

Tit Bits
ஒவ்வொரு டி .வி யிலும் புது புது செய்தி வாசிப்பவர்கள் வருகிறார்கள் .வாழ்த்துவோம்.ஆனால் அவர்கள் உச்சரிப்பு தாங்க முடியவில்லை. 'ஒகே நக்கல் 'என்றது ஒரு பெண். என்னடா சொல்கிறது என்று ரூம் போட்டு யோசித்தால் அது 'ஒகேனக்கல்.
இன்னொரு பெண் மத்திய உணவு என்றது. அட மதிய உணவைத்தான்   அப்படி சொன்னது.
2.ரமணன்  இன்று மக்கள் டி .வி யில் சமையல் நிகழ்ச்சியில் வந்து வடை சுட்டார். மிகவும் எளிமையாகவும்  இனிமையாகவும் பேசினார்.அவர் மனைவி அவ்வளவு பாந்தமாக இருந்தார். ஒரு ஆதர்ஷ தம்பதியினர் என்று பார்ப்பதற்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
3.Z தமிழ் தொலைக்காட்சியில் ஒரு இளைஞன் தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை (அந்த பெண்ணுக்கு பேரக் குழந்தை இருக்கிறது.) காதலிக்கிறேன் என்று எந்த ஒரு குற்ற உணர்வோ அவமான உணர்வோ இன்றி தான் எதையோ சாதித்து விட்ட பெருமையுடன் பேசினான். லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் உனக்கு வெட்கமாயில்லையா  என்று கேட்டார்.நான் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறேன்.
அதுதான் எல்லோரும்  காதல் எங்கள் பிறப்புரிமை என்று முழங்குகிறார்களே.ஆதலினால் காதல் செய்வீர்.
4.)  18 வயதிலிருந்து 16 ஆக குறைக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டது. அதனால் 16 வயதிலும் கற்பழிக்கலாம் .தண்டனை எதுவும் கிடையாது.ஏன்  ஆண்கள் எல்லோருமே கற்பழிக்கலாம் .யாருக்கும் தண்டனை எதுவும் கிடையாது என்று சொல்லி விட வேண்டியதுதானே.
5.இந்துலேகா  விளம்பரத்தில் ஒரு 6,7 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தன்  நண்பனிடம் தன் காதலி நீண்ட முடி வேண்டும் என்று கேட்பதாக சொல்கிறான்.இதை மாற்றி L .K .G பையன்கள் பேசுவது போல் வைத்தால் இன்னும் பேஷாக இருக்குமே.
6. பிரியங்கா சோப்ரா பாடிய  பாடலை 2 மில்லியன் பேர் பார்த்தார்களாம்  .அந்த அம்மணியின் அங்கங்கள் அனைத்தும் தெரியும்படி உள்ள அந்த உடையில் வந்தால் யார்தான் பார்க்க மாட்டார்கள். இந்த சினிமா காட்சிகலால்தான் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாகிறது என்று நான் உறுதியாக சொல்வேன்.
7.இன்சூரன்ஸ் பணத்திற்காக கண்வனை கொன்ற மனைவி என்று செய்தி சொன்னார்கள் .
கள்ள காதலுக்காகவும் கொலை செய்கிறார்கள். மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.வாழ்க பெண் சுதந்திரம்.
8.இன்று ஆடி 1.எங்கள் சேலம்  மாவட்டத்தில் மிக விசேஷம் புது மாப்பிள்ளைக்கு கொண்டாட்டம்.பெண் வீட்டிற்கு அழைத்து கோழிக் குழம்பும் சீர் வரிசையும் என கொண்டாட்டம்தான் ... .சிறுவர்கள் தேங்காயில் அரிசி பருப்பு வெல்லம் நிரப்பி தீயில் சுட்டு உண்ணுவார்கள் .காலையில் அறுகம்புல்லை  தலை மீது வைத்து நீராடுவார்கள் .
9.பழைய நினைவுகளை அசை போட்டபடி நாட்களை ஒட்டிக்  கொண்டிருக்கிருக்கிறேன் .
வேதனையுடன்
கார்த்திக்+அம்மா

1 comment:

Jeevan said...

என்ன சொல்வேதேன்று தெரியவில்லை! சொன்ன செய்திகள்ளில் கடைசி ஒன்றுதான் (8) இனிப்பாக இருந்தது.