About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/11/21

A T M
நானாக இருந்திருந்தால் '' ''அப்பா சாமி, இந்தா பணம். நகை ''என எல்லாவற்றையும் கொடுத்து விட்டு அவனுக்கு ஒரு கும்பிடு போட்டிருப்பேன்.பெங்களூர் பெண் இப்படியா செய்வார்? அவன் கத்தியை எடுத்த பின்னும் போராடுகிறார்.
மனிதர்கள் அரக்கர்களாக மாறிவிட்டனர்  என்பதை உணராதவரோ?
G A S :
சேலம் மாவட்டத்தில் எரிவாயு வெடித்து வீடே இடிந்து 6 பேர் பலி.
இதில் கொடுமை என்னவென்றால்  பக்கத்து வீட்டோரும் பலியானதுதான்.ஹெல்மெட் போட்டு போங்கள் என்ற அறிவுரை சரிதான்.பக்கத்து வீட்டு எரிவாயு உருளைக்கு எந்த ஹெல்மெட்?
ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும் . விதி வலியது. எந்த இடத்தில் எந்த ரூபத்தில் வந்து தாக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
ப.சிதம்பரம்:
இவர் ஏன் இப்படி பேசுகிறார்?சில நாட்களுக்கு முன்புதான் உயிரோடிருக்கும் முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களை ''இறந்து விட்டார். அமரர் '' என்றார்.
இப்போது நாட்டு பணம் அனைத்தையும்  I S R O வுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.
பாவம் அந்த விஞ்ஞானி . இன்னும் கொஞ்சம் அதிக நிதி தாருங்கள் என்றார்.இந்தியாவின் மொத்த பணத்தையும் கேட்கவில்லை.ஒரு லட்சம் கோடி வாராக் கடன் என்று பெரிய பண முதலைகளுக்கு தாரை வார்த்தது பற்றி வாய் திறக்கவில்லை.
அவரும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்.
.....    .....
இவருக்கு அண்ணன் நம் வருங்கால பிரதமர் கனவில் இருப்பவர்.காந்தியை ''மோகன்லால் '' ஆக்கி விட்டார்.
என்னவோ , நம் கதி அதோ கதிதான்.
கலாகார்த்திக்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பெங்களூர் சம்பவம் கொடூரம்...

KAYALVIZHI said...

Poor lady

Anonymous said...

IT'S ALL FATE