About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/03/07

சேலம்,
சேலத்தை சேர்ந்த என்ஜினீயரை இத்தாலி நாட்டு பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடந்தது.
சேலம் என்ஜினீயர் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 28). இவர் இத்தாலியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இத்தாலி பேனோ நகரை சேர்ந்த எலிஸாசெஷா என்பவரை பார்த்திபன் சந்தித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர். திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று காலை பார்த்திபன்–எலிஸாசெஷா ஆகியோரின் திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மணமகளின் கழுத்தில் பார்த்திபன் தாலி கட்டினார்.
மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து வந்திருந்த பெண்ணின் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர். சிலர் மணமக்களுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். திருமணத்திற்கு முந்தின நாள் நடைபெற்ற சடங்குகளும் தமிழ் கலாசார முறைப்படி நடைபெற்றது.
தமிழ் கலாசாரத்தை நேசித்தார் மணமகன் பார்த்திபன் கூறும்போது, ‘‘எலிஸாசெஷாவிடம் தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பற்றி பேசினேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்தேன். அப்போதே அவர் தமிழ் கலாசாரத்தை நேசித்தார். அதன்பிறகு தான் எங்களது நட்பு காதலாக மாறியது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நாங்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இப்போது திருமணம் செய்து கொண்டோம்’’ என்றார்.//   ///  //
aahaa ஆஹா 
என்ன ஒரு அழகான மணப்பெண் 
நம் உடையில் எவ்வளவு பாந்தமாக இருக்கிறார் .
இன்னொரு இத்தாலி மருமகள்.
வாழ்க.

No comments: