About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/11/08

நான் கார்த்திக்

நான் கார்த்திக் பேசுகிறேன் .
இல்லை இல்லை  .
எழுதுகிறேன்.
2005 ல் 23 வயதில் இந்த உலகிற்கு டா டா ,பை பை சொல்லி விட்டு கிளம்பி  விட்டேன்.
13 வருடங்கள் ஆகி விட்டது.
ஆனால்
ஒரு 5 அடி உயர ஜீவன் இன்றும் அந்த உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறது .
நான் ஆரம்பித்த பிளாக்கை நானே எழுதுவது போல் எழுதி இந்த உலகை நம்ப வைக்க முயற்சி செய்து தோற்று போகிறது.சா ....இற ....என்ற வார்த்தைகளை சொல்ல முடியவில்லை அம்மாவால் .
என் நினைவில் ஒவ்வொரு நிமிடமும் துடிக்கும் அம்மாவிற்கு என்ன ஆறுதல் சொல்வது ?????
யார் ஆறுதல் சொல்வது ???????????
எது ஆறுதல் தரும் ???
யாராலும் முடியாது.
அம்மா
என் மீது ஏன் இவ்வளவு அன்பு வைத்தீர்கள் ?????????ஏனம்மா என்னையே உங்கள் உயிர் என்று நினைத்தீர்கள் ????
நானும் அப்படித்தான் நினைத்து வாழ்ந்தேன் .அதனால்தான் நீங்களும் அப்படியே நினைத்தீர்கள் ...
ஆனால் விதியை வெல்ல முடியாமல் உங்களை இந்த உலகில் விட்டு விட்டு நான் மட்டும் பறந்து விட்டேனே .....
இன்று உயிரில்லா உடம்புடன் ஒரு கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களே ...
உங்களின் பரிதாப நிலை ....
கண்ணீருடன்
உங்கள் அன்பு மகன்
கார்த்திக்

4 comments:

Angel said...

மனம் கனத்தது கார்த்திக் அம்மா .

நம்பள்கி said...

உங்கள் வருத்தம் ஆதங்கம் எல்லாம் உங்கள் பதிவில் எனக்கு புரிகிறது. நீங்கள்...இந்த சோகத்தை விட்டு வெளியில் வரவேண்டும்...வருவது தான் உங்களுக்கு நல்லது. ஆலோசனைகள் கூறுவது எளிது என்றாலும்...

The Truth is "Time and Time" alone would alleviate any sufferings[s], however, tragic it is. I sincerely wish that you be blessed and cope with THE great personal loss.

Sincerely...

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...





ஏஞ்சல் உங்கள் வருகை மனதுக்கு ஆறுதல்.

nambalki ,i sent u a mail.did u get it? thank u for your comforting kind words.
anbudan
karthik amma

Unknown said...

அம்மா உங்களை சந்திக்க விரும்புகிறேன்