About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/03/28

தேர்தல் :

இலவசங்கள் ,
சொல்ல முடியவில்லை.
பிள்ளை பெறுவது ஒன்றுதான் மக்களின் வேலை. ஒரு வேளை அதையும் அவர்களே செய்து கொடுத்து விடுவார்களோ என்னவோ ?
தி.மு.க சொன்னால் அது நடைமுறைக்கு சாத்தியமாம். அதுவே 'அந்த பொம்பிளை ' சொன்னால் , செயல்படுத்த முடியாதாம் .....
சொல்பவர் யார் ? தன மகன் எம். பி. ஆவதற்காக எதையும் செய்ய தயாராயிருக்கும் ஒரு மருத்துவர்தான். இவருடைய அரசியல் நாகரிகம் எப்படிப் பட்டது? '' அந்த பொம்பிளை சொல்லுது '' என்ன பேச்சு இது? ஒரு பெண் என்றால் இப்படியெல்லாம் பேசலாமா ?
அது சரி....நீரா ராதியா ,பூங்கோதை டேப் விவகாரம் பற்றி கேட்ட போது,'' ரெண்டு பொம்பிளைக்க பேசிக்கிறாங்க, அதுல ஒன்னு 'நாடார் பொம்பிளை' ..'' என்று பதில் அளித்தவரிடம்தானே கூட்டு. அவர் மகளுக்காக எது வேண்டுமானாலும் செய்வார். இவர் மகனுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்.!!
ஜெ : இவர் பிறப்பின் பூர்விகத்தையும், தாய் ,தந்தை பற்றியும் ஒரு டி.வி விளக்கமாக விவாதித்துக் கொண்டிருந்தது. தேவையா? இப்போது அவருடைய நிலைப்பாடு என்ன , என்ன செய்யப் போகிறார், என்பது பற்றி மட்டுமே பேசலாமே? என்னவோ அவர் மட்டும்தான் தவறான வாழ்க்கை வாழ்ந்தது போலவும் , மற்ற தலைவர்கள் எல்லாம் உத்தமர் போலவும், ....என்ன பேச்சு இது, ஒரு ஆண் என்றால் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம் , ஒரு பெண் என்றால் ....
மக்களும் புத்திசாலி ஆகி விட்டார்கள். டாஸ்மாக் கடையில் இலவசம் என்று எந்த கட்சியையாவது அறிவிக்க சொல்லுங்களேன் பார்க்கலாம் .
பணம், பணம் ,பணம், ...இந்தியா ஏழை நாடென்று யாரோ சொன்னதாக கேள்வி !!!
கார்த்திக்+அம்மா

1 comment:

Jeevan said...

But most of the rich people come from India! I too condemn Dr's speech, which clearly shows that do anything to capture the power. The EC should take action on such speeches and what vadivelu face court action should be sever on others too.