About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/04/06

என் அத்தை ஒருவர் நினைவு இப்போது வருகிறது.என் அப்பாவின் சகோதரி. ஒவ்வொரு முறை தோட்டத்தில் எந்த அறுவடையாயிருந்தாலும்  வந்து விடுவார்.
  என் அம்மாவிடம்'' மேலைக்கு இன்னாலைக்கு (ள  .உச்சரிப்பு எல்லாம் எதிர்பார்க்க முடியாது) இருக்கிறேனோ இல்லையோ .எனக்கு நெல் கொடு, எல் கொடு '' என்று கேட்பார்.
முதல் முதலாக இந்த வசனம் கேட்ட போது நான் சோகமாகி விட்டேன்.ஆனால் கிட்டத்தட்ட ஒரு 20 வருடம் கழித்துதான்  காலமானார்.
         இப்போது அத்தை கதை எதற்கு என்று கேட்கிறீர்களா?
ஒருவர் அடுத்த தேர்தலின் போது நான் இருப்பேனோ இல்லையோ ,இதுவே கடைசி தேர்தலாக  இருக்கலாம் என்று பல தேர்தல்களாக ஒட்டு கேட்கிறார் ???????
2. ஒருவருக்கு 10  பத்தே கோடிதான் சொத்தா ஆ ஆ ம்.
நம்பிட்டோமே,.. நம்பிட்டோமே.
3.மூன்றாண்டுகளுக்கு முன்பு பாலாறும் தேனாறும் பாய்ந்த தமிழ் நாட்டில் இப்போதுதான் பஞ்சம் பசி பட்டினி எல்லாம் தலை விரித்தாடுகிறதாம்
இன்னொரு அம்மணி சொல்கிறார்..
எல்லோருக்கும் மக்களின்  மேல் அப்படி பாசம் பொங்கி வழிகிறது. மக்களை வாழ வைக்க துடிக்கிறார்கள்.
4.கடவுள் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்கிறார் கடவுள் இல்லவே இல்லை என்று சொன்ன பெரிய நாத்திகர். .
எனக்கே நிறைய வருடங்களாக ஒரு சந்தேகம். அறிஞர் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு அந்த தலைவர் என்ன அறிந்திருந்தார்?
I used to tell ''some questions are unanswerable.'' ..even if one knows the answer.
Some questions are asked not expecting any answers.

2 comments:

Jeevan said...

இவையல்லாம் அரசியல் நாடகங்கள், வேற என்ன சொல்ல

Anonymous said...


BROTHER

GOOD