About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/04/30

வாக்குப் பதிவு நாளில் இருந்தே இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இரண்டு மனமாக இருந்தது.
இன்று எழுதுகிறேன்.
ஆந்திராவில் சிரஞ்சீவி ஓட்டு  போட  வந்தபோது வரிசையில் நிற்காமல் செல்ல முயன்றிருக்கிறார்.
கார்த்தி (இந்த பெயருக்கு ஒரு தனி இதுதான்) என்ற நபர் அவரை தடுத்து நீங்கள் மட்டும் எந்த வகையில் ஸ்பெஷல் ,வரிசையில் நின்று வாருங்கள் என்று தைரியமாக சொல்லி ,செய்தும் காட்டி விட்டார்.
ஆனால் நம் தமிழ் நாட்டில் ஒரு நடிகர் வாக்கு சாவடியில் தன தொண்டரடி பொ டியால்வார்களுடன் நின்று ஏதோ கருத்தரங்கிற்கு வந்தவர் கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தார்.
ஓட்டு பெட்டி ரெடியாகவில்லை என்றால் அந்த presiding  officer  யாரையும் உள்ளே அனுமதிக்கவே கூடாது.யாராயிருந்தாலும் வெளியில் தான் நிற்க வேண்டும்.
எல்லோரும் அந்த நடிகரை பார்த்து அப்படியே மயங்கி நின்றனர்.
அவர்களை கண்டிப்பாக சஸ்பெண் ட் செய்திருக்க வேண்டும்.
சரி, அவர்கள்தான் தவறு என்றால், இந்த தெய்வப் பிறவி சரியாக நடந்திருக்க வேண்டுமல்லவா?
வை.கோ. வந்தார். வாக்கு சாவடியில் பணியில் இருந்தவர்கள் எழ முற்பட்டனர்.அவர்களை உட்காரும்படி கைகாட்டி விட்டு ஓட்டு பதிவு செய்தார்.இது பாராட்டுக்குரியது.
மற்றவர்கள் எல்லோரும் வரிசையில் நின்றே வாக்களித்தனர்.
நான் ஒரு சுயநலமி, பச்சோந்தி, கருமி என்று அந்த நடிகரே கதறினாலும் மக்கள் மாற மாட்டார்கள்.
************      ******
முதல்வர் கொட  நாடு சென்றார் என்று ஆர்பாட்டம் செய்யும் தொலைகாட்சிகள் ஹாங்காங் பயணம் பற்றி ஏன்  அடக்கி வாசிக்கின்றன?
  எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?
கார்த்திக் +அம்மா

No comments: